மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை –  மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தற்பொழுது 440 ஆசிரியப் பயிலுநர்கள் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இந்த ஆசிரியப் பயிலுநர்கள் தங்குவதற்கான விடுதிகள்,  கற்றல் சூழல் முதுலியன பெரும் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. இதனைக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்காகவும் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  இதனைப் பார்வையிட்டார்.  இதன்போது பாராளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், கல்வி…

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா ஆனி 20, 2047 / சூலை 04, 2016 அன்று  முதன்மை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தலைமை விருந்தினராக மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்   துணைஅதிபர் த.நிமலன், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் சி.ரகுபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் விசாகனன், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் மருத்துவர் (இ)யோகேசுவரன் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை

  மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில்  வருகை புரிந்தார்.  அதுபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலையின்  மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சத்தி சாயி பாடசாலையானது தேசியக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றது. இப்பாடசாலை இலங்கையில் காணப்படும் சத்திய சாயி பாபா பாடசாலைகளில் ஒரு  முதன்மைப் பாடசாலையாகக் காணப்படுகின்றது. இங்கு இருமொழி கற்கை நெறி நடைபெறுவதோடு  மேலதிகக் கல்விசார் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கின்றது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் – நூல் வெளியீடு, இலண்டன்

நூல் வெளியீடு –  மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் தொகுப்பு – சைவப்புலவர் சிவத்திரு பால.இந்திரக் குருக்கள் , சிட்னி முருகன் கோவில் அவுத்திரேலியா இடம் –          வால்தம்சுடௌ / வோல்தம்சுரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம்   ஆடி 31, 2047 / 15-08-2016 திங்கள்கிழமை  கொடியேற்றம் நேரம் –         பகல் 12-30மணி அளவில் நூல் வெளியீடு நடைபெறும் தொடக்கவுரை-   தத்துவாமிர்தமணி சிவத்திரு பா.வசந்தக் குருக்கள் வாழ்த்துரை –    சிவாகமச்செல்வர் சிவத்திரு கைலை நாக நாதக் குருக்கள், தலைமைக்குரு, இலண்டன் திருமுருகன்…

ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா, மட்டகளப்பு

வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம்  முன் நுழைவாயில் திறப்பு விழா   மட்டகளப்பு களவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையில் வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா  ஆனி 16, 2047  / சூன் 30, 2016 அன்று நடைபெற்றது. இந். நிகழ்விற்கு தலைமை விருந்தினராக மாநிலக்கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. சீ.இயோகேசுவரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் மாகாணஅவை உறுப்பினர்கள். கல்வி அதிகாரிகள். கல்வி அமைச்சின் பாடசாலை…

ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்

ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்    கொழும்பு கல்வி அமைச்சில் ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில்  (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மங்கள விளக்கேற்றுவதையும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணனின் உரையில்,  ஒரு நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு அந்த…

முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்

முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பொழிவது அனல் மழை தானே! -பவித்திரா நந்தகுமார்

பொழிவது அனல் மழை தானே! விடுதலை வேண்டி வீழ்ந்தவர் உணர்வைப் பாடிட வேண்டும் வா மழையே! விதைக்குள் வீரம் வெளிக்கிடும் நேரம் தழுவிட வேண்டும் வா மழையே! ஈழ மண்ணில் வீசுகின்ற காற்றும் கூட காவியம் ஈகம் செய்த மாவீரம் எங்கள் வாழ்வியம் மெல்ல சாரல் பூவைத் தூவிடு சாதனைகள் பாடிடு சந்ததியை வாழ வைக்கும் கல்லறையைத் தழுவிடு களம் பல ஆடித் தாய் நிலம் காத்த விழி தொட வேண்டும் வா மழையே! காவியப் பூக்கள் கால் தடம் தேடி கரைந்திட வேண்டும்…

மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்

மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகவும் விரிவாகவும் ஆழங்குன்றாமலும் ஓர் அறிவியல் மின்னூல் படைத்துள்ளார். அதன் தலைப்பு: கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் 316 பக்கம் கொண்ட விரிவான நூல். முழுக்கவும் படிக்காவிடினும் அதை இங்கும் அங்குமாகவாவது முழுதுமாகப் பாருங்கள். நான் பார்த்து மிகவும் வியந்தேன், மிகவும் நெகிழ்ந்தேன். வாழ்க ஆசிரியர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள். இவர் முன்னர் வேதிவினையியல் அறிவியலறிஞராக இருந்தவர். இவர் ”Structural Bioinformatics Inc” என்னும் நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராக…

சிறந்த வாழ்க்கை வாழுங்கள் ! – செல்வக்குமார் சங்கரநாராயணன்

சிறந்த வாழ்க்கை வாழுங்கள் !   சிறந்த வாழ்க்கை – சொல்லும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது. நாக்கின் நுனி மேல் அண்ணத்தில் பட்டு ழகரத்தைச் சொல்லும்பொழுது அப்பப்பா அந்த தமிழ்ச் சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை. நீங்களும் ஒரு முறை “சிறந்த வாழ்க்கை“ என்று சொல்லித்தான் பாருங்களேன், தற்காலிக இன்பத்தைத் தமிழால் துய்த்து மகிழலாம். அதெல்லாம் சரிதான் அதென்ன சிறந்த வாழ்க்கை? அப்பொழுது சிறப்பில்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதா? என்று நீங்கள் தற்சமயம் சிந்தனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விட்டிருப்பீர்கள். சரி,…

தமிழர் வருக! வருக!- இல.பிரகாசம்

தமிழர் வருக! வருக! தடந்தோள் களிரண்டும் புடைத்திட தமிழர் வருக! வருக! தமிழச்செங்கோல் உயாந்திட தமிழர் வருக வருக! தமிழர் நிலம் செழித்திட தமிழர் செவ்வேல் உயர்த்தி தடமதிர வருக வருக! தமிழ் பண்மொழி காத்திட தமிழர் புகழ்நிலை பெற்றிட தமிழர் வருக வருக! தமிழர் களிப்புற் றிருந்திட தமிழர் சமர்க்களம் வருக! தமிழர் தம்திறம் கொணர்ந்திட தமிழர் ஆர்ப்பரித்து வருக! தமிழ் வீரர்அணி யணியாய் தமிழுரம் கொண்டெழுந்து வருக! தமிழர் தம்மார்பில் வீரவடுக்களை தாங்கி அழியாப் புகழ்பெற்றிட திமிரும் அயலான்கொம் பினையடக்க திரண்ட…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 /  சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது. சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது? அப்போதிருந்த சூழல் என்ன? அவர்கள் செய்தது என்ன? அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன? நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது? அதற்கு…