இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11 தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை. பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி) புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக் களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத் தோழ னின்றிச் சோகமுற் றிடுவள் வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய மரங்களின் மீது, மார்புறத் தழுவிய தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர் இவ்வகை நிலையை யெய்திய அரசியும் குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய * கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள் கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று அரசியை யீர்க்க அவளும் ஒடி எடுத்தனள்; தைத்து இவளே அன்பின் தோழனுக்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள் காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத் துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை “வாடிய மலரென மங்கை தோன்றிடக் காரணம் யாதெனக்” கண்டோர் வினவ “நோயா லவளும் நோத லுற்றனள் தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும் தீர்ந்திடக் காணேம்! செய்வதென் யாமும்” என்றேயியம்பிக் கன்றிய மனதுடன் உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென எழிலர சியுந்தன் *இகுளை யோடும்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: தொடர்ச்சி) இயல் – 4 இலக்குவனார் கவிதைகள் – பகுப்பாய்வு இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார். ‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே’ (தொல்-செய்) என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா இனங்களையும் இலக்குவனார் பாடியுள்ளார். கவிஞர் பாடியுள்ள கவிதைகளைக் கீழ்வருமாறு பகுக்கலாம். நெடுங் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் கையறுநிலைக் கவிதைகள் அங்கதக்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 9 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 9 ஆயினும் அவளும் அடிக்கடி வைகலும் வினவத் தொடங்கினள் வீணே வருந்திக் காரணம் பலசொலிக் கழித்தன ராயினும் மூத்தோ னொருவன் முனிந்தன னோக்கி 8 “ஆடலனென்ற ஆடவனைத் தினமும் வந்து வினவக் காரணம் யாதோ? என்ன முறையினன்; என்றும் வினவுவாய் வினவின் இனிநீ விரும்பா ஒர்விடை விரும்பி யளிப்போ மென்ற விடைத்தனன்” அன்பனைக் காணா அவ்வெழி லரசி அடுத்துச் சொல்லின் கெடுக்கவுந் துணிவரென் றஞ்சிக் கூறினள் மிஞ்சிய வார்த்தை உள்ளில்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…
பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்
பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்லர்! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர் தமிழ்மானம் தெளிந்தனர்! அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்! இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை! பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்! வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்! தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்! வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்! பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்கீந்த…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 08: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) 8 பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம்’ என்ற மிகப் பெரிய செய்யுள் நூலை எழுதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இராவண காவியம் கம்பன் கவிக்கு…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) குற்றமொன் றில்லாக் குறுந்தொழில் புரியும் ஆளைக் கொன்றனர் ஆடலன் தப்பினன் எழிலர சிக்கோ ரிடுக்கணும் விளைத்தனர் எண்ணிய விளையும் இனிது முடித்திலர் துன்பக் கடலில் தோயப் புகுந்தனர் அறிவை யிழந்தனர் ஆண்மை குன்றினர் செய்வது யாவெனச் சிறிதும் அறிந்திலர் வாட்கிரை யான மகனை யாங்கே பறந்திடும் புட்கும் பாய்ந்திடும் நரிக்கும் இரையாய்க் கிடத்தி யேகினர். இல்லம் அடைந்தது மாங்கே அவனைச் சேணிடை “அவல் புரிய அனுப்பினோ ” மென்றனர் அவ்வித…
இலக்குவனாரின் ஆங்கிலத் தொல்காப்பியத்திற்கு அண்ணாவின் அணிந்துரை
தொல்காப்பிய மொழிபெயர்ப்பு: தமிழ்ப்பெருமக்களுக்குப் பெருமை நல்கும் பெருஞ்செயல் பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பேரறிஞர் அண்ணா அணிந்துரை இன்றமிழ்ப் புலமைமிகு இலக்குவனாரின் இவ் வாராய்ச்சி நூலை நோக்கியவுடனே விழுமம் எனும் எழிற்றமிழ்ச் சொல்லே எவருடைய உள்ளத்திலும் இயல்பாக எழும். வினைநயங் கெழுமிய இவ்வாராய்ச்சி வியப்பூட்டுகின்ற ஓர் இலக்கியக் கருவூலம் எனினும் மிகையன்று. பன்னூற் புலமையுடைய பண்டாரகர் இலக்குவனார்க்கு இஃதோர் எளிய வெற்றியேயாம். இஃது அறப்பழமையும், அழியா அழகும் நனி உயர்வும் பொலியும் நற்றமிழ் இலக்கணப் பேழையாகிய ஒல்காப்…
வல்லானை வாழ்த்துவேன் -புலவர்மணி இரா.இளங்குமரன்
நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க முன்னிற்கும் முதன்மையர் உலகத்தார் பெரும்புகழுக் கிலாக்காவீர் என்றறிந்தோ, இன்றமிழுக் கிணையற்ற இலக்காவீர் என்றறிந்தோ, இலக்கியத்தில் தோய்ந்துதோய்ந் திதழ்களுடன் உயர்நூல்கள் இலக்குவணம் படைத்தருள்வீர், இனிதளிப்பீர் என்றறிந்தோ, நிலவுலகில் நேரற்ற நேயத்தொல் காப்பியமாம் இலக்கணத்தை மொழிபெயர்த தாய்ந்தற் களிப்பார்கள் பட்டமெனும் பாங்கறிந்தோ நும்பெயரை இலக்குவனென் றிட்டுள்ளார் நும்பெற்றோர் இசைபெற்ற பெற்றோரே‚ அவர்வாழ்வுப் பயனாகத், தவமாக, முகிழ்த் தோங்கும் ஐம்பதிற்று ஐந்தாண்டுப் பேரிளைஞ‚ பேரறிஞ‚ கைம்மாறு கருதாமல் கடனாற்றும் கடமைவீர‚ தாய்த்தமிழைக் கண்போலத் தனிக் காக்கும் தண்டமிழ‚ தாய்மொழியைக் கப்பார்க்குத் தலைவணங்கு தகவாள‚ தாய்மொழியைப்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 07: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) இயல் – 3 இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய…