சுந்தரச் சிலேடைகள் 11 : கண்ணும் கத்தியும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 11 கண்ணும் கத்தியும் ஒளிர்ந்திடும், காப்படையும் , நீர்காணும், ஒப்பில் பளிங்கொக்கும் ,போர்செய்யும் , பாயும்- தெளிந்தோரே நல்லுலகம் கண்ட  நடைமாதர் கண்களுக்கு வல்லோரின் கூர்வாளே ஒப்பு . கண் பெண்களின் கண்கள் ஒளி வீசும் இமை என்னும் உறைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் . சோகத்திலோ , மகிழ்ச்சியான நேரத்திலோ கண்களிலிருந்து நீர் வரும் . பளிங்கை ஒத்து வெண்ணிறம் கொண்டிருக்கும் . கண்கள் காதலனுடன் அடிக்கடி போர் புரியும் . ஆடவர் ஆழ்மனம் வரை ஊடுருவிப் பாய்ந்து…

திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3.  காமத்துப் பால்    15.   கற்பு இயல்    126.  நிறை அழிதல் மனத்துயரை அடக்க முடியாமல், தலைவி வாய்விட்டுப் புலம்புதல்.    (01-10 தலைவி சொல்லியவை) காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும்       நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக், காதல்எனும் கோடரி உடைக்கும்.   காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை,       யாமத்தும் ஆளும் தொழில். இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை, நள்ளிரவிலும் அடக்கி…

தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன்  கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்!   பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்?  ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம்  யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு  தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள்.  இங்கே அவ்வாறு  தேர்தல் ஆணையர் யாரும்…

கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே!   அ.தி.மு.க. மூன்றாகப் பிளவுபட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. தீபா மாதவன் இக்கட்சியைச் சாராதவர். அவர் பக்கம் அதிமுக ஆதரவாளர் சிலர் போனாலும், இதைப் பிளவாகக் கூறமுடியாது. இரத்தத் தொடர்பு உறவு என்று மட்டும் ஒருவரை ஆதரிக்கும் முட்டாள்தனம் உள்ள சிலர் சில காலம் அவர் பக்கம் இருக்கலாம். அதனால், கட்சி உடைந்ததாகக் கூறமுடியாது.   பா.ச.க. ஆதரவு பன்னீர் செல்வம் பக்கம் சிலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கலைஞர் எதிர்ப்பு என்ற அதிமுக கொள்கையைச் சசிகலா…

இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு:  தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்?   இந்தித்திணிப்பு என்பது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1918  இல்  தென்பாரத இந்திப் பரப்புரை அவை (‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’) என்னும் அமைப்பு தொடங்கியபொழுதே தொடங்கிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்ததும்  வேரூன்றியது. இந்தியா, குடியரசானதும் கிளை பரப்பியது. 1965 இல் இந்தியா என்றால் இந்தி என்பது முழுமையாக மாறும் நிலை இருந்தது. இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முன்னெடுப்பால் கிளைகள் பரவாமல் வெட்டப்பட்டன. எனினும் அவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தி …

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ  இளம் அறிஞர் விருது – 2015-16   முனைவர் மு. வனிதா   முனைவர் மு. வனிதா 1979இல் வேலூர் மாவட்டம் வீரமுட்டிப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இலக்கியம்-இலக்கணத்தில் புலமை பெற்றவர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்திட்ட உதவியாளராக…

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙா :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி இளம் அறிஞர்கள் – 2014-2015 முனைவர் அ. சதீசு   முனைவர் அ. சதீசு 1982 இல் விழுப்புரம் மாவட்டம் கண்ணியம் என்னும் ஊரில் பிறந்தவர். மயிலம், சிரீமத்து சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் இலக்கிய இளங்கலை (பி.லிட்.), சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப்…

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙா

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ங :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள்  (2013 -14, 2014-15, 2015 – 16)  –  ஙா   தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும், நினைவுப் பரிசும் உ.ரூ.1 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருது ஒவ்வோராண்டும் ஐவர்க்கு வழங்கப்படுகின்றது. இளம் ஆய்வறிஞர் விருது – 2013-14 முனைவர் உல. பாலசுப்பிரமணியன்     முனைவர் உல….

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ)     சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரே சமயம்,ஒரே மொழி, ஒரே இனம் முதலான ஒற்றை யாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார்.   “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.  இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக்…

சுந்தரச் சிலேடைகள் 10 : கறிவேப்பிலையும் சிப்பியும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 10 கறிவேப்பிலையும் சிப்பியும் பயனது உள்வைத்துப், பக்குவம் சேர்த்து, வியக்கப் பயனளித்து, வீழ்ந்து.-துயரடைந்து நற்பயன் தந்தளித்து நாணிக் கிடப்பதிலே பொற்சிப்பி வேப்பிலைக் கீடு. பொருள்: 1) பயன்களாகக், கறிவேப்பிலை மருத்துவத்தையும், சிப்பி முத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றன. 2)இவ்விரண்டும் அடைந்தவரைப் பக்குவமாய்ப் பாதுகாக்கின்றன. 3) பிறர் வியக்குமளவிற்கு இவ்விரண்டும் பயனளிக்கின்றன. 4) பாரோர் இவற்றின் பயன்பெற்ற பின்னர் கீழே தூக்கி எறிந்து விடுகின்றனர். 5) அதனால் போவோர் வருவோர் காலில் மிதிபட்டுத் துன்புறுகின்றன. 6) நற்பயன் தந்தாலும் பயனைமட்டுமே எடுத்துக்கொண்டு…

திருக்குறள் அறுசொல் உரை : 125. நெஞ்சொடு கிளத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 124. உறுப்பு நலன் அழிதல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் கற்பு இயல் 125. நெஞ்சொடு கிளத்தல்   பிரிவுத்துயர் மிகுதியைத் தலைவி, தனது நெஞ்சுக்குச் சொல்லுதல்.   (01-10 தலைவி சொல்லியவை) நினைத்(து)ஒன்று சொல்லாயோ? நெஞ்சே! எனைத்(து)ஒன்றும்,       எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! என்துயரைத் தீர்க்கின்ற மருந்துஒன்றைச் சிந்தித்துச் சொல்லாயோ?   காதல் அவர்இலர் ஆக,நீ நோவது,       பேதைமை வாழிய!என் நெஞ்சு. நெஞ்சே! காதலர்க்குக் காதல்தான் இல்லையே! நீஏன் வருந்துகிறாய்?   இருந்(து)உள்ளி…

இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது!   மத்திய அரசின் துணையுடன் இந்தி, ஆழமாக வேரூன்றித் தன் நச்சுக்கிளைகளைப்  பரப்பி வருகிறது. நம்மை எதிர்ப்பவரை நாம் எதிர்க்கவோ, நம் இனத்தை அழிக்க முயல்பவனை நாமும்  வேரறுப்பதிலோ தவறில்லை. உலகெங்கும் நடைபெறும் உரிமைப்போரின் அடிப்படையே இதுதான். ஆனால், அவ்வாறு இந்தியை எதிர்க்க நம்மவர்களுக்கு அச்சம். அதனால், இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கின்றனர். இது தவறான கூற்று.   இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் மாநிலத்தில் இந்தியை வளர்க்க எல்லா உரிமையும் உண்டு. அதனைப் பரப்ப எண்ணினாலும்…