இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்!   அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்குக் காரணம் பா.ச.க.தான். சேகர்(ரெட்டி) வழக்கு முதலானவை மூலம், ஒதுங்க நினைக்கும் பன்னீர்செல்வத்தையும் மிரட்டிப் பொங்க வைத்துள்ளது. கரூர் அன்புநாதன்வழக்கு முதலானவை மூலம் நத்தம் விசுவநாதன் போன்றவர்களைப் பன்னீர்ப்பக்கம் நிற்க வைக்கிறது. பன்னீரைக் காட்டிச் சசிகலாவை மிரட்டிப் பணிய வைக்க முயல்கிறது. எனவேதான், பெரும்பான்மையரைச் சசிகலாவிற்கு எதிராக அறிக்கைகள் விடச்செய்தும் சிலரைச் சசிகலாபக்கம் நிற்க வைத்தும் நாடகமாடுகிறது பா.ச.க.   இப்போதைய சூழலில் சசிசலா பக்கம் பா.ச.க. சாய்ந்தால் பன்னீர் அரசியலில் ஒதுக்கப்படுவார். மாறாக அக்கட்சி…

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே!     தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதும் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றக் கட்சித்தலைவராக வி.கி.சசிகலா என்னும் சசிகலா நடராசனைத் தேர்ந்தெடுத்ததும் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் தமிழ்நாடு விரைந்து வந்திருக்க வேண்டும். இது தொடர்பில் அவர் மத்திய அரசின் உரியவர்களைக் கலந்தாய்வதும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதும் முறையானதே! ஆனால், அதை ஒளிவுமறைவாகச் செய்ய வேண்டிய தேவையில்லை. வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வரும் நாளையும் தெரிவிக்கலாம். காலத்தாழ்ச்சி செய்யாமல், ஆளுங்கட்சியின் ச.ம.உறுப்பினர்களின் முடிவை ஏற்றிருந்தால்,…

திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை   தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல்   படர் மெலிந்து இரங்கல் தலைவனது பிரிவுத் துயரால், தலைவி மெலிந்து வருந்துதல். (01-10 தலைவி சொல்லியவை) மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை, இறைப்பவர்க்(கு),       ஊற்றுநீர் போல மிகும். பிரிவுத் துயரத்தை மறைத்தாலும், இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல் மிகுமே! கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்(கு)       உரைத்தலும், நாணுத் தரும். மறைக்கவும், முடிய வில்லை; நோய்செய்தாரிடம் கூறவும், வெட்கம். காமமும், நாணும், உயிர்காவாத்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 47. செருக் கொழித்தல் செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல். செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும். அஃதறி யாமையி னங்குர மென்ப. அஃது அறியாமையின் அடிப்படை ஆகும். ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு. ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும். அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு. செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும். அழியு முடம்பை யளிப்பது மஃதே. செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும். செருக்கினர்…

யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்!   தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.   சட்ட மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்தான் முதல்வராக முடியும் என்ற நிலைப்பாட்டில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.   மக்கள் செல்வாக்கு அடிப்படையில் முதல்வராக வேண்டும் எனில் தேர்தலில் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர்தான்  ஆட்சிப் பொறுப்பிற்கு வரமுடியும். இதனை அறிந்த பின்னரும் பா.ச.க. ஆதரவால் ஆட்சியமைக்கப் போராடி வருகிறார் பன்னீர்செல்வம்.   அ.தி.மு.க. உட்கட்சிச் சண்டையால் அடுத்த…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி]  தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] இதழாயுதம் ஏந்திய போராளி  போராளிப் பணி ஒரு துறையுடன் முடிவடைவதில்லை. போராளிக்கு ஓய்வேது? ஒழிவேது? பேராசிரியரும் கல்விநிலையம் சார்ந்த பணியுடன் நின்று விடவில்லை. இதழ்ப்பணி மூலமாகத் தம் தொண்டினைத் தமிழ் உலகம் முழுவதும் விரிவு படுத்தினார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே தமிழைச் சிதைக்கும் பல அமைப்புகள்போன்ற ஒரு குழு (வட்டத்தொட்டி) நடத்திய கூட்டத்தில் ‘சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’என்று முழங்கினர். இதை அறிந்த பேராசிரியர் இலக்குவனார், தமிழ்…

திருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால்  15.கற்பு இயல்   பிரிவு ஆற்றாமை                             தலைவனது பிரிவைத் தாங்காது. தலைவி வருத்ததை வெளியிடல்              (01-10 தலைவி சொல்லியவை) செல்லாமை உண்டேல், எனக்(கு)உரை; மற்றுநின்       வல்வரவு, வாழ்வார்க்(கு) உரை. பிரியாமை உண்டேல் சொல்லு; பிரிவதை வாழ்வாரிடம் சொல்லு,   இன்கண் உடைத்(து),அவர் பார்வல்; பிரி(வு)அஞ்சும்       புன்கண் உடைத்(து)ஆல், புணர்வு. அவர்பார்வை, இனிது; நீள்கூடலோ, பிரிவு அச்சம் தருகிறது.   அரி(து)அரோ…

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 3/3 – மு.இளங்கோவன்

(இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3 தொடர்ச்சி) இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 3/3  ‘கொட்டாப்புலிக் காளைகள்’ என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின்…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 2 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 1 தொடர்ச்சி) 2 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் மென்மை     தமிழர் மாந்தன் வரலாற்றிற் குழந்தைபோல் முந்தித் தோன்றிய இனத்தவராதலால், அவர் வாயில் குழந்தைகளும் முதியவரும் களைத்தவரும் நோயாளிகளும்கூட எளிதாய் ஒலிக்கத் தக்கனவும், பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொதுவானவுமான (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக) முப்பது எழுத்தொலிகளே பிறந்திருந்தன.  அதோடு, தனி மெய்யொலியில் தொடங்கும் சொற்களும், வல்லின மெய்யொலியில் இறுஞ் சொற்களும், சில மெய்யொலிகட்குப் பின் சில மெய்யொலிகள் தமித்தோ உயிர்மெய்யாகவோ  இடையில் வருஞ் சொற்களும், அவர் வாயில் வந்ததில்லை….

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! – பெ. சிவசுப்பிரமணியன்

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்!    உலகெங்கும் அவரவர் தாய்மொழியே ஆட்சியிலும் கல்வியிலும் கோலோச்சுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 49 நாடுகளிலும்கூட அந்நாடுகளின் தாய்மொழிகளே கோலோச்சுகின்றன; நம் மனத்தில் உருவகப்படுத்தப்பட்டதுபோல ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் உலகம் முழுவதுமே காணப்படுகின்றது என்பதில் உண்மை இல்லை! இங்கிலாந்திலும்கூட 7 மொழிகள் கோலோச்சுகின்றன. அங்குள்ள மாநிலங்களின் தாய்மொழிகள் –  காட்டிசு(இசுகாத்துமொழி), ஐரீசு, வேலிசு, கார்னிசு, மாணக்சு, பிரெஞ்சு மொழிகளே ஆட்சி மொழியாக, கல்வி மொழியாகக் கோலோச்சுகின்றன. ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழி நம் நாட்டில் இந்தி போல! (படிக்க…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 46. துயி லொழித்தல் உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம். உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும். அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில். அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும். சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும். கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும். கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும். கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும் 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம். அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்….

அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா

அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா   அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும் அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை துய்த்தவர்கள்(அனுபவப்பட்டுவிட்டவர்கள்), வெகு  எளிதில் அதனைக் கைவிடத்துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் (சிரஞ்சீவியாக) நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர். அதிகாரம் தரும் மயக்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள், கூட்டுத் தோழர்கள் நண்பர்கள் இடத்தும் கூட பகைமை கண்டு மிரள்வர். இந்நிலையில் ஒரு சிறு எதிர்ப்பு-தன் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல்-போக்கை மாற்றிக்கொள்வது முறை எனும்…