இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)   ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5).  தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.  ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…

நோபல் பரிசுத் தகுதியாளர் சி.இலக்குவனார்

தமிழைக் காத்தவரை நாம் மறக்கலாமா? நோபல் பரிசுத் தகுதியாளர் புரட்சித்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்   விருந்தோம்பல், நன்றிமறவாமை முதலிய பண்புகள் தமிழ்மக்கள் கடைப்பிடித்து வருவனவாக இருப்பினும் மறதியும் நம்மைக் காத்தாரைப் போற்றாமையும் இன்றைய தமிழ் மக்களின் அரும் பண்புகளாகத் திகழ்ந்து நம்மைத் தலைகுனியச் செய்கின்றன. எனவேதான் தனக்கென வாழாமல் தமிழ்க்கென வாழ்ந்து மறைந்த தவப்புதல்வர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரைத் தமிழுலகும் மறந்து விட்டது; நம் சமுதாய மக்களும் மறந்து விட்டனர். சங்கத்தமிழை மீட்டுப் பரப்பிய அவர் புலமையும் தொண்டும் குறள் நெறியைப் பரப்பிய அவரின்…

பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் – புகழ்ச்செல்வி

பகைக்கு எரிமலை! பைந்தமிழுக்குப் பனிமலை! பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் மொழி என்பது ஆறறிவு கொண்ட மாந்தனுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய ஆற்றலாகும். கொப்பூழ்க் கொடி அறுத்த நாள்முதல் காலில்லா தொட்டிலில் படுக்கும்வரையில் மாந்தனுக்கு மாந்தன் உறவாடிக் கொள்ளத் தேவையான முதன்மையான வழி மொழியாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை – அதன் வாழ்வை – சிறப்பை  – பெருமையை, மேலும் அதை எவ்வாறு வளர்ப்பது என்று ஒவ்வொரு மொழி இனத்தாரும் எண்ணிச் செயல்படுகின்ற வேளையில் உலக மொழிக்கெல்லாம் மூத்ததாய்   இளமை மாறாததாய்…

தமிழியக்க முன்னோடி சி.இலக்குவனார் – பா.சு. இரமணன்

  ‘செந்தமிழ் மாமணி’. ‘இலக்கணச் செம்மல்’. ‘முத்தமிழ்க் காவலர்’. ‘செம்மொழி ஆசான்’ ‘தமிழர் தளபதி’ என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். “தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும். தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார்.   கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர்…

புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் – நா.காமராசன்

  புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார்   பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார்.   கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர்…

செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை

செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார்   இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும்.   சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார்.   அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும்….

இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும் ! -இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும் ! தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு குறைந்து வருவதன் காரணம் என்ன? செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே கவலைப்பட்ட  சூழல்கள்  இன்றும் மாறாமல் இருப்பதுதான். பிறர் இந்தியா என்றும் திராவிட நாடு என்றும் சொல்லிய பொழுதே தமிழ்த்தேசியம் என்றும் மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசு என்றும் தொலைநோக்கில் சிந்தித்தவர் அவர். அவரது சிந்தனைகளில் சிலவற்றை அவரது நூற்றாண்டின் நிறைவில் நினைத்துப் பார்ப்போம். “தொல்காப்பியமும் திருக்குறளும் நமதிரு கண்கள். தமிழ் மக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவற்றைப்…

இலக்குவனார் தமிழுக்காக வாழ்ந்தவர் – முனைவர் கா.மாரிமுத்து

தமிழை நினைந்து தம்மை மறந்தவர்   இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி; எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க பேராசிரியராய்த், துறைத்தலைவராய், கல்லூரி முதல்வராய், நூலாசிரியராய், இதழாசிரியராய், இலக்கண இலக்கிய ஆய்வாளராய், மொழி பெயர்ப்பாளராய், மேடைப் பேச்சாளராய் சிறந்த கவிஞராய் மொழிப் போர்த் தளபதியாய் விளங்கியவர் இலக்குவனார். இவரால் தமிழுணர்வு ஊட்டப் பெற்று இவரிடம் பயின்றவர்களும், அமைச்சர்களாய், கட்சித் தலைவர்களாய், இவரைப் போன்றே மொழி ஆற்றல் பலவுடையராய்ச், சிறப்புற்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இவர் தமிழுக்காக வாழ்ந்தவர், தனக்கென வாழ்ந்திலர்….

இலக்கிய யானைகள் எட்டு! – பு.சீ. கிருட்டிணமூர்த்தி

ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள்    நெல்லையைச் சார்ந்த வடிவேற் கவிராயர் என்பவர் இலங்கையில் இருந்தபோது, யாழ்ப்பாணம் நமச்சிவாய(முதலியார்) என்பவர், யாழ்ப்பாணம் திருவானைக்கோட்டையில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணியர் மீது ஒரு கோவை பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வடிவேற் கவிராயர் கோவையைப் பாடி முடித்துக் கொடுத்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாராட்டு விழா நடந்தப்பட்டது. அப்பாராட்டு விழாவில், இவரைச் சோதிக்க விரும்பிய ஒரு புலவர், ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள் வருமாறு சிவபெருமான் மீது பாடல் பாடவேண்டும் என்றார். அதற்கு…

இலக்கணச் செம்மல் இலக்குவனார் – இடைமருதூர் கி.மஞ்சுளா

இலக்கணச் செம்மல் இலக்குவனார் தினமணி 17.05.09   “இன்று யார் யாரோ புரட்சி என்ற அடைமொழியுடன் வருகிறார்கள். ஆனால், உண்மையிலேயே ஒரு தமிழ்ப் புரட்சியை நடத்தியவர் பேராசிரியர் இலக்குவனார். கல்லூரி ஆசிரியர் கூட்டத்தில், கல்லூரி முதல்வர் ஆங்கிலத்தில் பேசமுற்பட்டபோது 150 பேராசிரியருள் தைரியமாக எழுந்து நின்று “என்னருமைத் தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ் என்பதைக் கல்லூரி முதல்வர் அறிவாரா?’ என்று கேட்டு புரட்சி செய்த பெருந்தகை முனைவர் இலக்குவனார்” என்று போற்றுகிறார் கி.வேங்கடசுப்பிரமணியம்.  “எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்ப் பரப்ப” என்பது…

முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார்

முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார்     மொழிப்போராளி  பேராசிரியரி சி.இலக்குவனார் பகுத்தறிவு நோக்கில் பெரியாரைப் பின்பற்றினார்; மொழிநோக்கில் மறைமலை அடிகளாரைப் பின்பற்றினார்; இந்தி எதிர்ப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றினார்; வறுமையிலும் செம்மையுடையவராக விளங்குவதில் சங்கப்புலவர் பெருஞ்சித்திரனாரைப் பின்பற்றினார்; புறநானூற்றில் வருகின்ற வேலைக் கையிலெடுப்பது போலத் திண்மையோடு (வலிமையோடு) வாழ்ந்து காட்டினார்; வன் தொடர்களை மிகுதியாகப் பின்பற்றினார்; வல்லினப் பேராசியராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர் பக்திக்காகப் பயணம் செய்தனர். பக்திக்காகப்…

நூற்றாண்டு விழா நாயகர் பேரா. சி. இலக்குவனார் – நவீன்குமார்

நூற்றாண்டு விழா நாயகர் தமிழறிஞர்  முனைவர் பேரா. சி. இலக்குவனார்    ‘’தமிழில்லா வீட்டுக்கு நான் போக மாட்டேன்’’ என்பார் அறிவியக்கக் கவிஞர் சாலை இளந் திரையன். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாரதி பாடினான். தமிழைத் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினான். இப்படிப் பல்வகைச் செல்வமும் எழில் நலமும் படைத்த  செம்மொழியான தமிழ், எண்ணற்ற இன்சுவை இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடைய சிறப்பும் பெற்று. உலகிலேயே முதல் கழகம் கண்ட பெருமையைக் கொண்டிலங்குகிறது. இத்தகைய தமிழை வளர்க்க, உய்விக்க தனது வாழ்நாளை…