திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 023. ஈகை

(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 023. ஈகை   ஏழையர்க்கு, வேண்டியன எல்லாம், கொடுக்கும் பயன்கருதாத் தனிக்கொடை.   வறியார்க்(கு)ஒன்(று) ஈவதே ஈகை,மற்(று) எல்லாம்,    குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து.  எதையும் எதிர்பார்க்காமல், ஏழையர்க்குக் கொடுப்பதே, ஈகை ஆகும்.     222.நல்ஆ(று) எனினும், கொளல்தீதே; மேல்உலகம்    இல்எனினும், ஈதலே நன்று.  நல்செயலுக்காக் கொள்வதும் தீதே; மேல்உலகு இல்எனினும், கொடு.  223. “இலன்”என்னும், எவ்வம் உரையாமை ஈதல்,    குலன்உடையான் கண்ணே உள. “இல்லாதான்”எனச் சொல்லும் முன்னர் ஈதல்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 022. ஒப்புரவு அறிதல்

(அதிகாரம் 021. தீ வினை அச்சம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல்  பொதுநல உணர்வோடு, இருப்பதைப் பகிர்ந்து கொடுத்துதவும் பேர்அறம்.  211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு), என்ஆற்றும் கொல்லோ உலகு? எதிர்பார்ப்பைக் கருதாத மழைக்கு, இவ்உலகு, எந்நன்றி செய்யுமோ?  212. தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம், தக்கார்க்கு, வேளாண்மை செய்தல் பொருட்டு. உழைத்துப் பெற்ற பொருள்எல்லாம், தகுதியர்க்கு எல்லாம் உதவவே.  213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே, ஒப்புரவின் நல்ல பிற. பொதுக் கொடையைவிடப்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 021. தீ வினை அச்சம்

(அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்   02. இல்லற இயல் அதிகாரம் 021. தீ வினை அச்சம் தீயைப் போன்று சுட்[டு]அழிக்கும் தீய செயல்களுக்கு அஞ்சுதல்.    201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர், தீவினை என்னும் செருக்கு. தீயோர், தீச்செயல்களுக்கு அஞ்சார்; தூயோர் அவற்றிற்கு அஞ்சுவார்.  202. தீயவை, தீய பயத்தலால், தீயவை, தீயினும் அஞ்சப் படும். தீயைவிடத், தீமைதரும் தீய செயல்களைச் செய்தற்கு, அஞ்சுக.  203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய, செறுவார்க்கும் செய்யா விடல்….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 020. பயன் இல சொல்லாமை

(அதிகாரம் 019. புறம் கூறாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  02. இல்லற இயல் அதிகாரம்  020. பயன் இல சொல்லாமை   எதற்குமே பயன்படாத வீண்சொற்களை          என்றுமே சொல்லாத நல்பண்பு.  191. பல்லார் முனியப், பயன்இல சொல்லுவான், எல்லாரும் எள்ளப் படும். வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களைச் சொல்வாரை, எல்லாரும் இகழ்வார்.  192. பயன்இல, பல்லார்முன் சொல்லல், நயன்இல, நட்டார்கண் செய்தலின் தீது. நண்பரிடம் விரும்பாதன செய்வதைவிட, வீண்சொல் கூறல் தீது.  193. நயன்இலன் என்பது சொல்லும், பயன்இல, பாரித்(து) உரைக்கும் உரை….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 019. புறம் கூறாமை

    (அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 019. புறம் கூறாமை ஒருவர் இல்லாத பொழுது அவரைப் பற்றிக் கோள்கூறாமை.  181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன்,   புறம்கூறான் என்றல் இனிது. அறத்தைக் கூறாது, தீமைகளைச் செய்யினும், கோள்கூறாமை இனிது.  182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே,  புறன்அழீஇப், பொய்த்து நகை. பின்னே பழிப்பும், முன்னே பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது.  183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல், அறம்கூறும் ஆக்கம் தரும். பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை

(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை   எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை.   நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,      குற்றமும் ஆங்கே தரும்.          பிறரது பொருளைப் பறிக்க        விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும்.   படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,      நடுஅன்மை நாணு பவர்           வருபயன் விரும்பிப், பழிப்புச்        செயல்களை நடுநிலையார் செய்யார்.   சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…

பொறி. தி.ஈழக்கதிர் – இவன் பெற்றோர் என்நோற்றார் என வியக்க வைத்துள்ளவன்!

பொறி. தி.ஈழக்கதிர் நூறு நூறு ஆண்டுகள் வாழ்கவே!    ஆடி 27, 2046 / ஆக12, 2015 அன்று பிறந்தநாள் பெருமங்கலம் காணும் எங்கள் மகன் தி.ஈழக்கதிர் நல்ல மனைவிமக்கள் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கி, நலம், வளம் நிறைந்து, தமிழ்நலம் பேணி நூறாண்டிற்கும் மேல்வாழ உள்ளன்புடன் வாழ்த்துகிறோம்!   ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பிள்ளைகள் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கும். அத்தகைய நினைவுகளில் சிலவற்றை அன்பு மகனின் பிறந்தநாளில் பகிர விரும்புகின்றேன்.   அப்பொழுது சென்னை அண்ணா நகரில் திருவேணி குடியிருப்பில் குடியிருந்தோம். மிக அருகிலுள்ள…

சசிபெருமாள் மறைவும் மதுவிலக்கும்

மதுவிலக்குப்போராளி சசிபெருமாள் மறைவும் முழுமையான மதுவிலக்கும் அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 927)   தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தவர் காந்தியவாதி செ.க.சசிபெருமாள். பலமுறை உண்ணாநோன்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த (தி.பி.2045 / கி.பி. 2014ஆம்) ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கினை வலியுறுத்தி 36 நாள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இவர் விளம்பரத்திற்காக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவில்லை. கட்சி அரசியல் நோக்கிலும் இதனைச் செய்ய வில்லை. வாணாளெல்லாம்…

என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? – இலக்குவனார் திருவள்ளுவன்

என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? இலக்குவனார் திருவள்ளுவன் வியாழன், 14 ஆக. 2014 , வெப்துனியா (தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், உரிமையற்ற நாட்டிலே விடுதலைக் கொண்டாட்டமா? என வினவுகிறார். ஆயினும் இவற்றைப் பேசும் உரிமை இன்னும் இருக்கிறது என்பதை நினைவூட்டி, இதனை  வெளியிடுகிறோம். – ஆசிரியர்) “என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் … … … என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்” என்று மாக்கவி பாரதியார் அடிமை…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 (ஆடி 17, 2046 / ஆக.02, 2015 தொடர்ச்சி)  2 2.] கலைச்சொல் பேரகராதி 2.1. தொடக்கத்தில் (~university என்பதுபோல்) இடைவெளி இருப்பின் முழுத் தேடுதலில் ஒன்றும் காட்டாது. எனவே, சொற்பொருள் இல்லை என்ற எண்ணம் ஏற்படும்(பட உரு 09). பட உரு 09   2.2. அவ்வாறு இடைவெளி இருப்பின் பகுதித் தேடுதலில் பொருள் காட்டும். (பட உரு 10). (கூட்டுச்சொல்லில் இடைவெளி அடுத்துத்தானே தொடர் சொல்லாய் அமையும்.) பட உரு 10 2.3. முதல் எழுத்து (University என்பதுபோல்) பெரிய எழுத்தாக…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி)   வினைப்பெயர், செய்யும் செயலைப் பொருத்தி அமையும் பெயர்கள். தச்சன், பொன் கொல்லன், கொல்லன் போன்ற பெயர்கள். உலகம் முழுவதும் மரவேலை செய்பவன் தச்சன்தான். ஆங்கிலத்தில் carpenter என்றழைக்கின்றோம். இது உலகம் முழுவதும் விளங்கும் புரியும் வினைப்பெயரே. பெயர்கள் பலவகைப்படும். இவற்றை ஒல்காப்புகழ் தொல்காப்பியர், நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே வினைப்பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயரே, பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே பல்லோர் குறித்த…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 017. அழுக்காறாமை

(அதிகாரம் 016. பொறை உடைமை தொடர்ச்சி)    01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம்  017. அழுக்காறாமை   பிறரது வளநலங்களைப் பார்த்துப்   பொறாமை கொள்ளாத அறப்பண்பு..   ஒழுக்(கு)ஆ(று)ஆக் கொள்க, ஒருவன்,தன் நெஞ்சத்(து),      அழுக்கா(று) இலாத இயல்பு.          மனத்தாலும், பொறாமை இல்லாத,        இயல்பை ஒழுக்கநெறியாக் கொள்க.   விழுப்பேற்றின் அஃ(து)ஒப்ப(து) இல்லை,யார் மாட்டும்,      அழுக்காற்றின் அன்மை பெறின்.          யாரிடத்தும், பொறாமை கொள்ளாமையே,        ஈ[டு]இல்லாத சிறப்புப் பே[று]ஆகும்.  …