பண்ணும் பரதமும் வடக்கே தோன்றியது என்றால் அங்கே ஏன் இல்லை?

    சாரங்கத்தேவர்தான் கருநாடக இசையை உண்டாக்கியவர் என்றும், பரத முனிவர்தான் பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தவர் என்றும் ஒரு கூட்டத்தார் கூறி வருகின்றனர்.   காசுமீரத்துச் சாரங்கதேவர்தான் கருநாடக இசையைப் படைத்தவர் என்பது உண்மையானால் காசுமீரத்திலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் இன்றுள்ள இசைவாணர்கள் மோகனத்தையும் (முல்லைப்பண்), யதுகுல காம்போதியையும் (செவ்வழி), மத்தியமாவதியையும் (செந்துருத்தி) பாடிக் கொண்டிருக்க வேண்டும். வடபுலத்துப் பரத முனிவர்தாம் பரத நாட்டியத்தைக் கண்டுபிடித்தவர் என்பது உண்மையானால், இன்று பஞ்சாபிலும், பீகாரிலும், வங்காளத்திலும் நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். கருநாடக இசையும்…

தமிழிசைச் சிறப்பு வேறு எந்த நாட்டு இசையிலும் இல்லை

 சிலப்பதிகாரமும் அதற்குரிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் தமிழிசைபற்றி அறிவித்துள்ள கருத்துகள் அளவில் இன்றைய அறிவுக்கும் மிஞ்சியதாக அமைந்திருப்பதைக் கண்டு தமிழிசையின் வாழ்வையும் வளர்ச்சியையும் கருதிக் காணலாம். இவற்றுள் விளக்கப் பெற்றுள்ள கருத்துகள் உலகில் வேறு எந்த நாட்டிசைக்கும் அமைத்துக் காணப்படாதவை. ஓசையின் அளவு, இசையமைப்பு, பண்ணமைப்பு, பாடலமைப்பு, தாளவகை, தூக்கு, பிண்டி, பிணையல், வரிப்பாட்டு, வண்ணங்கள், யாழிசை, குழலிசை, ஏழிசை, இசை அலகு பெறல், பண்களின் பெயர்கள், இசையின் எண்கள் முதலியவற்றைத் தனித்தனியாக விளக்கிக் காட்டும் அளவுக்குத் தமிழிசை ஈராயிரம் ஆண்டுகளுக்கு…

கீர்த்தனையால் விளைந்த நலன்சிறிது; தீங்கோ பெரிது! – திரு.வி.க.

  தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.   கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின… இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன. அவ்வணியைத்…

தமிழ்ப்பாடல்களில் அயல்மொழி ஒலிகள் வரக்கூடா!

 ‘தமிழே’ என்பதை, “தமிழாவது வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும், இயலிசை நாடகங்களும் என்று சொல்லப்படா நின்ற மூன்று தமிழர்களும்’ என்று விளக்குகிறார். அரும்பதவுரைகாரர். தமிழ்பாடல்களில் ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ என்ற வடமொழி ஒலிகள் வரலாகாது என்ற நெறி இசையுலகிலும் அன்று கடைப்பிடிக்கப்பட்டது என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவே ‘ஸம்போ மஹாதேவா’, ‘நாயகர் பக்ஷமடி’, ‘ஜங்கார ஸ்ருதி செய்குவாய்’ என்றெல்லாம் இன்று பாடுவது தமிழிசையிலக்கணத்துக்கு மாறானது என்பது புலனாகிறது. – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்: தமிழன் படைத்த கலைக்கருவூலம்: பக்கம். 23

தமிழ்ப் பெயர் தொலைத்த தமிழர்கள்

  இசைநாடகத் துறைக் கலைச்சொற்கள் அனைத்தும் இன்று வடமொழியாக்கப்பட்டு வழங்குகின்றன. உலகிலேயே முதலில் தோன்றிய மூத்த இசை என்று போற்றப்படும் இசை, தமிழன் கண்ட தமிழிசை, இன்று ‘கருநாடக சங்கீதம்’ என்று பெயர் மாறியுள்ளது. மதிவாணனார் செய்த ‘நாடகத்தமிழ்’ போன்ற நூல்களிற் கூறப்பட்ட தமிழன் கண்ட கூத்து முறை இன்று ‘பரதநாட்டியம்’ என்று பெயர் மாறியுள்ளது. பெயர் மாறிப்போன தன் பிள்ளைகளையே இன்றைய தமிழன், “யாரோ? இவர் யாரோ? என்ன பேரோ?” என்று மயங்கிப் பாராமுகமாய் இருந்து வருகிறான். – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்…

பிற நாடுகளில் யாழ்க் கருவி

  நமது நாட்டிற் போலவே வேறு பல நாடுகளிலும் யாழ்க்கருவி தெய்வமாகப் போற்றப்பட்டது. பண்டை நாளிலே சீரும் சிறப்பும் எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீக கடற்கரையிலிருந்து அழிந்து போன சுமேரியா நாட்டிலும், சோழர் குடியேறினமையாலே சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சால்தேயா என வழங்கப்பட்ட தொல்பதியினிலும், சேரர் குலத்தார் கலத்திற் சென்று வெற்றி பெற்றுத் தம்மாணை செலுத்திய கிரேக்கத் தீவிலும், அதற்கணித்தாகிய யவனபுரத்திலும், உரோமர் வருவதற்கு முன்பழைய இத்தாலி தேசத்திலும், ஐபீரியா எனப்பட்ட பழைய இஃச்பெயின் சேத்திலும்,…

கலைச்செல்வத்தை மீட்டெடுப்போம்!

  கடல்வாய்ப் பட்டனவும் காலத்தின் மாறுதலினாலே மறைந்து போயினவுமாகிய நூல்கள் மிகப் பல. அந்நூற் பெயர்களைக் கூறிப் பழமை பாராட்டுவதோடு அமைந்திருப்போமா? இல்லை. முன்னிருந்த கலைச் செல்வத்தை மீட்டும் பெறுவதற்கு முயல்வோம். அத்தகைய முயற்சி நமது நாட்டிற்கு ஆக்கமளிக்கும். – விபுலானந்த அடிகள்: யாழ்நூல்: பாயிரவியல்

தமிழிசையே பிற இசைகளுக்குப் பிறப்பிடம்

  தமிழிசையே பிற இசைகளுக்கெல்லாம் பிறப்பிடம். தமிழிசையிலிருந்துதான் பிறமொழி இசைகள் கிளைகளாகப் பிரிந்து சென்றன. தமிழிசைப் பண்களே பிற்காலத்தில் பெயர்மாற்றங்களும் இடமாற்றங்களும் பெற்று வடமொழிப் பெயர்களைப் பெற்றுவிளங்கின என்பதற்கெல்லாம் தக்க ஆதாரங்கள் இங்கு (சிலப்பதிகார வேனிற்காதையில்) நமக்குக் கிடைக்கின்றன. – இசைப் பேரறிஞர் முனைவர் சேலம் செயலட்சுமி : சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள் பக்கம். 322

இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்

  மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…

தமிழ் தேவ தேவ மொழி

வடமொழி தேவமொழியென்னும் காலம் மலையேறிவிட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால் வடமொழியைத் தேவமொழியெனின் தமிழைத் தேவ தேவ மொழியெனல் வேண்டும். – மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர், தமிழ் இலக்கிய வரலாறு : பக்கம் 301

தமிழர் தம்முடைய பண்புகளிலும் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் – பேராசிரியர் சு. வித்யானந்தன்

  தமிழர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர்(தமிழர்) நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தனால் திராவிடருக்கு(தமிழர்) உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம். இப்பொழுது கூடத் தமிழ் நாட்டிலும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப்…

தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரியத்தால் மறைக்கப்பட்டன.

    சில அறிஞர் சங்க நூல்களிற் சில ஆரியத் தெய்வங்கள் கூறப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, சங்க காலப் பகுதியில் தமிழ் நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறப்புற்றிருந்தது என்று கொண்டனர். இக்கூற்று ஏற்கத்தக்கதொன்றன்று. சங்கநூல்களில் விட்டுணு இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களே மிகவும் சிறப்புடன் வணங்கப்பட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிபாட்டு முறைகளையும் அந் நூல்களிற் காண்கின்றோம்….