தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 3
(முன் இதழ்த் தொடர்ச்சி) – இலக்குவனார் திருவள்ளுவன் பிடில் சீனிவாசையர், ‘தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும்மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பாவம் தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டும் பரிதிமாற் கலைஞர் குறிப்பிடும் போலி ஆரியரதமிழிசையைப் புறக்கணிப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். அனந்தகிருட்டிணசர்மா என்பார்,’ தியாகையர் பாடலகள் இலக்கிய நயம் உடையன அல்ல. தியாகையர் பாடலுக்குத் தமிழர்களாலேயே முதன்மைகொடுக்கப்பட்டடது….
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 5
(முன்னிதழ்த் தொடர்ச்சி) போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . . . . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை…
தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை
தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான் அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர் வேறு எங்கும் சொந்த வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…
தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 4
கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். 1. தாய்த்தமிழ்ப் பள்ளி, வள்ளலார் நகர், திருப்பூர் இப்பள்ளி 1995இல் வெள்ளியங்காடு பாரதி நகரில் குடிசையில் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டின் தொடக்கத்தில் 25 குழந்தைகள் சேர்ந்தனர். குழந்தைகள் எண்ணிக்கை அவ்வாண்டின் முடிவில் 40 ஆகும். ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து 450 ஐ எட்டியது. பல்வேறு சூழல்களால் ஏற்பிசைவு பெற முடியாது இருந்தது. 2002 இல் மக்களின் உதவியால் வள்ளலார் நகரில் சொந்த இடம் வாங்கப்பட்டுச் சிறுகசிறுகக் கட்டடங்கள்…
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 5
தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) தமிழுக்கு ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்கிற முறையில் இவர் எழுதியுள்ளதை அவரது வழக்கமான கவன ஈர்ப்பு உத்தி என்பதாக மட்டும் பார்த்துவிடக் கூடாது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படும் ஆர்.எசு.எசு மனநிலை இதிலும் வெளிப்படுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது. மொழிவாரி மாநிலம் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. மாறாக, இந்தியாவை எழுபதுக்கும் மேற்பட்ட சிறு நிருவாக அலகுகளாகப் பிரித்து ஆள வேண்டும் என்பது…
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி – 93827 19282 (முன் இதழ்த் தொடர்ச்சி) சாமரபுசுபம் – கமுகு சாரணம் – அம்மையார் கூந்தல் சிகிச்சை – பண்டுவம் சிகை – முடி, மயிர் சிங்கி – மான் கொம்பு சித்தப்பிரமை – மனமயக்கம், பித்தியம் சிந்தூரம் – செந்தூளத் தாது சிலேபி – தேன்குழல், தேன்முறுக்கு சிவலிங்கம் – …
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 2
– இலக்குவனார் திருவள்ளுவன் (முன் இதழ்த் தொடர்ச்சி) பிற இசைக்கு மூலமான தமிழிசைப் பாடல்கள் மேடைகளில் ஒதுக்கப்பட்டு, “துக்கடாப் பாட்டு” என்றும் “சில்லறை: என்றும் “உருப்படி” என்றும் அழைக்ககப்பட்டமைக்குக் காரணம் என்ன? இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு கேடுற்று அழிந்தன? “இசைத்தமிழ் நூல்கட்குக் கேடுவரக் காரணம் போலியாரியரே” என்கிறார் சூரியநாராயண(சாசுதிரியா)ர் என்னும் இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர். தமிழின் செம்மொழித் தகுதிகளைத் திறம்படவிளக்கியவர் இவர். “தமிழரிடத்திருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயார்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும்; வடமொழியினின்றுமே…
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4
( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள்…
தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!
இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும் தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர். அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்? தமிழ்நாட்டிலும் பிற மொழி பேசுவோர் தம்…
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி – 93827 19282 தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அக்ரூட் – உருப்பருப்பு, படகரு அங்குட்டம் – பெருவிரலளவு அசோகு – பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம் – கோழி முட்டை நெய்மம் அண்டவாதம் – விரையழற்சி அட்சதை – மங்கல அரிசி அத்தர் …
தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 3
தமிழ்வழிப் பள்ளி அமைப்புகளும் பள்ளிகளும் கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழியில், தமிழிய உணர்வுடன் நடைபயின்று வருகின்றன தமிழ்வழிப் பள்ளிகள். ஒத்தக் கருத்தினால் ஒன்றுபட்டுச் செயல்படுதல், அவ்வழி தமிழ் வழிக் கல்வி விழிப்புணர்வை நம் தமிழ் நாடெங்கும் எடுத்துச் செல்வது, பள்ளிகளை மேம்படுத்துவது என்ற நிலையில் தமிழ் வழியில் நடந்த பள்ளிகள் அமைப்புகளாக ஒன்று சேர்ந்தன. தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு 1997 இல் தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சென்னை அதன் சுற்றுபகுதியில் இயங்கிய தமிழ்வழிப் பள்ளிகள், பள்ளிகளைத் தொடங்க இருந்தவர்களும்…
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 4
தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தமிழை அழிப்பதற்கான முயற்சியில் இம்மேதை இறங்கியுள்ளார். அனைத்துத் தமிழரும் இவரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்! சோமன் பாபு (Soman Babu) எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ… அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக் கொடுத்தோமானால் நாளை??? சிவனேசுவரி தியாகராசன் (Shivaneswari Thiyagarajan) இன்று உன் எழுத்தை மாற்று என்பர்; நாளை உன் மொழியை மாற்று என்பர்; நாளை…