கண்மைகாயு முன்கருகிட்ட கண்மணிகள் ! – – இளையவன் செயா (மா.கந்தையா)
பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2880 தி.ஆ.2046 ஆடவை ( ஆனி ) 30 15–07–2015 பத்தோடு ஓராண்டு பறந்தோடி விட்டதுகாற்றாய் இத்தரையில் இன்னா இனியதறியா இளம்குருத்துகள் புத்தகமும் கையுமாய் புத்தறிவுப் பெறப்போனவர்களை பத்திஎரிந்த தீநாக்கு பதம்பார்த்து விட்டதே ! குடந்தைப் பள்ளியிலே மடந்தையர்பெற்ற மலர்கள் இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே ! குடமளவு கண்ணீரைக் கொட்டினரே மக்கள் தடம்மாறா நினைவுகளைத் தரணிக்கு அளிப்போம் ! (16–07–2004 ) கருகிய …
‘தமிழ்க்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!
ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும். 1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு: 1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய் 2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய் 3 ஆம் இடம் ஐயாயிரம்…
கனவு நனவாகுமா ? – பாவலர் கருமலைத்தமிழாழன்
ஆற்றினிலே ஆலைகளின் கழிவு சேர்த்து ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்து ஊற்றினிலும் தூய்மையிலா நீராய் மாற்றும் உன்மத்தர் செயல்களெல்லாம் முடிந்து போகக் காற்றுவெளி தூய்மையாகிக் குடிக்கும் நீரும் கலப்படமே இல்லாமல் கிடைக்கும் இங்கே நேற்றுவரை இருந்தநிலை மாறி வாழ்வில் நோய்நொடிகள் இல்லாமல் இருப்பார் இங்கே ! பட்டங்கள் பலபெற்றும் பணியே இன்றிப் பரிதவித்தே ஏங்குகின்ற இளைஞர் கூட்டம் வெட்டியாகச் சுற்றுகின்ற நிலைமை மாறி வெறுங்கையின் சக்திதனைத் திறன்கள் தம்மைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேலை யின்றித் திண்டாடல் பழங்கதையாய் மாறிப் போகும் கட்டாயம் பணிகிடைக்கும் வகையில்…
உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்! – சி.கருணானந்த இராசா
சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…
தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார் – அ.க.நவநீதக்கிருட்டிணன்
தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க! என்று நீபாடு தமிழ்வெல்க! தமிழ்வெல்க! என்றுதினம் ஆடு தமிழை அழிப்பாரைத் தலைதுணிக்க ஓடு தமிழைப் பழிப்பாரைத் தவிடாகச் சாடு தமிழர்கள் உலகிலே தனியரசு கண்டார் தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார். – திருக்குறள் மணி அ.க.நவநீதக்கிருட்டிணன்
நரைமுடிக்குக் காரணம் ஆண்ட நம் மக்கள் அடிமைகளானமை! – சி.இலக்குவனார்
யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்; தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால் தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்; ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச் சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும் அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்; உயர்கல் விக்குறு ஊடக…
பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 31 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
( ஆனி 13, 2046 / சூன் 28, 2015 தொடர்ச்சி) – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! – அ.க.நவநீதக்கிருட்டிணன்
தமிழர் திருநாடே தாரணியில் முதல் தோற்றம் அமுதமொழி கண்டார் அருந்தமிழர் அந்நாளில் இயற்கையோ டியைந்தமொழி இன்பம் நிறைந்ததமிழ் நயங்கள் நிறைந்தமொழி நல்லறிஞர் கண்டதமிழ் எப்போ பிறந்ததென்று எவரும் அறிந்ததில்லை ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! குமரியின் தென்திசையில் குளிர்ந்த வளநாடு தமிழர்திருநாடு தழைத்தோங்கி இருந்ததையோ! அந்நாட்டில் தென்மதுரை அழகான நன்னகரில் தென்னன் தமிழ்ச்சங்கம் திறம்பெறவே அமைத்திட்டான்! கன்னித்தமிழ்மொழியைக் கருத்தாய் வளர்த்திட்டான் பன்னூறு புலவரதில் பழந்தமிழை ஆய்ந்திட்டார் பின்னர்க் கபாடபுரம் பெரியதொரு தமிழ்நகரம் மன்னு தமிழ்ச்சங்கம்மறுபடியும் அமைத்திட்டான் அதிலும் பலபுலவர் அருந்தமிழை ஆய்ந்திட்டார் மதிநுட்ப நிறைபுலவர்…
சிரியுங்கள் – வெ.அரங்கராசன்
சிரியுங்கள் [ இடுக்கண் வருங்கால் நகுக – திருக்குறள் 063: 0621 ] சிரியுங்கள்…சிரியுங்கள்…. சிந்தை குளிரச் சிரியுங்கள்…. சந்திப்புத் தொடரவே சிந்தித்துச் சிரியுங்கள்…. சிரித்தாலும் சிரியுங்கள்—பிறர் சிரிக்காத போதும் சிரியுங்கள்…. சிரிப்புக்காகச் சிரிக்காமல் சிரிப்பதற் கென்றே சிரியுங்கள்…. மனத்தால் மனம்சேரச் சிரியுங்கள்….. மனத்தை மதித்துச் சிரியுங்கள்….. மனம்விட்டுச் சிரியுங்கள்…. மனம்மகிழ்ந்து சிரியுங்கள்….. நோய்விட்டுப் போக வாய்விட்டுச் சிரியுங்கள்….. காய்விட்டுக் கனிதொட்டுத் தேன்சொட்டச் சிரியுங்கள்…. நொந்துபோன நெஞ்சினிலே வந்துவாழும் நோய்கள் எல்லாம் வெந்து வீழ்ந்து சாகும்படி முந்தி வந்து சிரியுங்கள்….. யாழிசை மழலையின் ஏழிசைச் சிரிப்பே போல வாழும் காலம் எல்லாம் கோலம் கொள்ளச் சிரியுங்கள்….. முதல்நாள் சிரிப்பது போலவே முப்பதாம் நாளும் சிரியுங்கள்…. மூலதனமாய்ச் சிரிப்பும் அமைவதால், முழுமை மனத்துடன் சிரியுங்கள்….. சோகப் பயிர்கள் சாகும்படி சிரியுங்கள்…. சுகம்மிகு பயிர்கள் செழிக்கும்படி சிரியுங்கள்…. சந்தி சிரிக்காமல் இங்கிதம் தெரிந்து சந்தமாய்ச் சிரியுங்கள்…. சந்தனமாய்ச் சிரியுங்கள்…. ஒப்புக்குச் சிரிக்காமல் உண்மையாய்ச் சிரியுங்கள்…. எண்ணத்தில் குழிஏதும் விழாமல் கன்னத்தில் குழிவிழச் சிரியுங்கள்….. ஆணவச் சிரிப்பின் வேரினை அறுத்தெறிந்து பாரினை வென்றிடப் பணிவோடு சிரியுங்கள்…. அசட்டுச் சிரிப்புக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இடம்அறிந்து— வெல்லும் தடம்அறிந்து சிரியுங்கள்….. விரக்திச் சிரிப்பினை விரட்டிவிட்டு—நல்ல நம்பிக்கை வந்[து]உதிக்கத்…
தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
எவராலே? ஈழம் சிதைவது எவராலே? தமிழர் அழிவது யாராலே? கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில் தமிழர் மடிவது எவராலே? உணவும் நீரும் சிறிதுமின்றி மருந்தும் உடையும் கிட்டாமல் நாளும் ஒழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டது யாராலே? கற்பும் பொற்பும் சிதைப்பவரை ஓட ஓட விரட்டாமல் அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை வந்தது இன்று எவராலே? தமிழர் அழுவது யாராலே? இந்தியம் சிரிப்பது எவராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
கருகும் பிஞ்சுகள் – பாவலர் கருமலைத்தமிழாழன்
கருகும் பிஞ்சுகள் பகர்கின்ற கட்டாயக் கல்விச் சட்டம் பறைசாற்றும் குழந்தைத்தொழி லாளர் சட்டம் முகம்காட்டும் கண்ணாடி போல யிங்கே முன்னிருந்தும் கண்மறைக்கும் வறுமை யாலே அகரத்தை எழுதுதற்கே கனவு கண்டு அன்புத்தாய் நீவிவிட்ட அரும்வி ரல்கள் தகதகக்கும் கந்தகத்து மருந்தில் தோய்ந்து தயாரித்துத் தருகிறது நெருப்புக் குச்சி ! சீருடையில் அழகொளிரச் சிரிப்பு திர்த்துச் சிற்றுந்தில் அமர்ந்தபடி கைய சைத்துப் பேருவகை தருமென்று கனவு கண்டு பெருமன்பில் நீவிவிட்ட பிஞ்சு விரல்கள் சீருடையில் தொழிற்சாலை பெயர்வி ளங்க சீறிவரும் வெடிமருந்து வாசம் வீசும் பேருந்தில்…
எமது படையணி விரைகிறது… எம் தேசத்தை மீட்க! – மேதகு வே.பிரபாகரன்
ஈழம் மீட்க அணிவகுத்துள்ளோம்! நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமதுஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது!…
