பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து! பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து! பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து! பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து! பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து! பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து! பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து! பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்…
நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்
உடலைப் பேணு உடற்பயிற்சி செய் தூய்மையாக இரு அளவோடு உண் தட்பவெப்ப பாதுகாப்பு பெறு பொருள்படைக்க உழை உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை இயற்கையொடு இணைந்து வாழ் நோய்க் குறிகளை அறி மருத்துவத்தின் துணைகொள் ஆழ்ந்து உறங்கு – சுமதி சுடர், பூனா
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! காட்சி – 6 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : குடில் முன் உள்ள மரக்கிளை நிலைமை : (நாடகம் பற்றிய கருத்துரையில் பேடும் சிட்டும் ஈடுபடல்) ஆண் : நாடகம் எப்படி உள்ளது சொல்? பேடே! நீயும் பெண் தானே! பெண் : எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல? உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு! ஆண் : நடப்பிற்கும்…
உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்
உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…
பொங்கலோ பொங்கல்! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பொங்கலோ பொங்கல் என்றுபா டுங்கள் மன்றிலா டுங்கள் எங்கள்நா டெங்கள் அன்புநா டென்று நன்றுபா டுங்கள் பொங்கியா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! தங்கமே தங்கம் மண்டுநீ ரெங்கும் இங்கும்வா னெங்கும் நன்றுகா ணுங்கள் மிஞ்சியா டுங்கள் சிந்துபா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! எங்கும் ஆதந்து லந்தபா லுங்க ரும்பினோ டும்க லந்துமே பொங்க நைந்தவா கும்ப ழங்கள் தே னுங்க லந்துவா னுங்க மகிழ்ந்தவா றுண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! இங்குநா மின்று கண்டபே ரின்பம் என்றுமே…
நாள்தோறும் நினைவில் 9 : வாழ்வைத் திட்டமிடு – சுமதி சுடர்
வாழ்வைத் திட்டமிடு முதன்மையை அறி உயர்ந்த குறிக்கோள் கொள் பட்டறிவைச் சேகரி வாழ்வை வடிவமை கால்வரை திட்டமிடு நேரத்தைப் பகிர்ந்துகொள் கலந்து முடிவு செய் திட்டத்தை நிரல்படுத்து முடிவுகளைப் பரப்புக விளைவுகளைக் கணி தொலை நோக்கு பார்வைகொள் – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் 8 : வெளி உலகை உள்வாங்கு – சுமதி சுடர்
வெளி உலகை உள்வாங்கு பல மொழி கல் சமூக அறிவியலை அறி பல தொழில் பயில் அறிவியலைத் தெரிந்துகொள் பொது அறிவைப் பெறு நிர்வாகத்தை கற்றுக்கொள் ஐம்புலங்களில் உணர் நடு நிலையோடு ஏற்றுக்கொள் பொழுதுபோக்கில் இன்புறு துறவுநிலை நில் – சுமதி சுடர், பூனா
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும்…
நாள்தோறும் நினைவில் –7 : வளம் பகிர்வோம் – சுமதி சுடர்
வளம் பகிர்வோம் வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே! வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ? வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்; வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து; வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள் வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்; எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்; எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம். – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் 6 : வளம்பறிக்கும் நிலை – சுமதி சுடர்
வளம்பறிக்கும் நிலை வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான் வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான் உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால் உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம் உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும் உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான் வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் – 5 : எப்பொழுதும் கல் – சுமதி சுடர்
எப்பொழுதும் கல் இளமையில் கல் இல்லறத்தில் கல் தொண்டில் கல் துறவறத்தில் கல் வீட்டில் கல் பள்ளியில் கல் தொழிலகத்தில் கல் குழுக்களில் கல் மனமறியக் கல் மனமடங்கக் கல் – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில்- மனத்தை வளப்படுத்து- சுமதி சுடர்
மனத்தை வளப்படுத்து தியானம் செய் கவலை ஒழி அறுகுணம் சீரமை நினைவாற்றலை அதிகப்படுத்து உயர்ந்த நோக்கம் கொள் அறிவுத் தெளிவுபெறு திறனை வளர் தன்னம்பிக்கை வை தற்சோதனை செய் வேண்டுதலை விடு – சுமதி சுடர், பூனா
