வாழ்ந்து தழை – அரியரவேலன்

வாழ்ந்து தழை – அரியரவேலன் புள்ளல்லவே? – நீ புழுவல்லவே? – பின் புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்? கல்லல்லவே? – நீ கசடல்லவே? – பின் கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்? மண்ணல்லவே? – நீ மரமல்லவே? – பின் மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்? விழலல்லவே? – நீ வெற்றல்லவே? – பின் வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்? கண்ணைத் திற! – கீழ் விண்ணை அறி! – இரு கைகளை ஏனினும் கட்டுகிறாய்? கூட்டை உடை! – சங்கை ஊதி எழு! – சேவல் கூவிய…

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!- சுப காண்டீபன்

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! சுப காண்டீபன் பசிக்கிறதம்மா…  பசிக்கிறது!  இரு கரம் கூப்பி கேட்கின்றேன். என் வயிற்றினுள் ஏதோ சத்தங்கள் பல கேட்கின்றன. எனக்கு அச்சத்தம் என்னவென்றும் தெரியவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. ஈர் இரண்டு நாட்களாக எந்த உணவும் உண்ணவில்லை. இரண்டு நாட்களாக மலம் கூடக்கழிக்கவில்லை. ஒட்டிய வயிற்றுடன் அலைந்து திரிகின்றேன். ஒரு பிடி உணவேனும் தருவீர்களென எண்ணி! எனைப்பெற்றவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் வருவேனா உங்களின் வாசல் தேடி? முலைப்பால் கூட முழுதாகப்பருகவில்லை. எனை வயிற்றினில் சுமந்தவளும் வயிராற…

ஏ…இறையே- துரை. ந. உ

    ஏ….இறையே…! – இருவரியில் சொல்வேன் நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றைஅள்ளித் தருகிறாய்! ஏன்? ​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ? துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு; மதிதெளிந்த செய்கையா கூறு சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்தள்ளுவதா சாதனை?​ சொல்மெய்தானோ! “இல்லையென்று சொல்லவில்லை; நல்லது தான்இருந்தால்” என்போரின் கூற்று ​ஏன் இப்படி ? ​ பிடியும்…என் சாபம் படியும் : துதிப்பவரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை என்பவரைத் தூற்றும் உலகு இரைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை இறையல்ல என்று விடு…

சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்

சிறுநண்டு – தமிழிசைப்பாடல் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும். கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும். வெறுவான வெளி மீது மழை வந்து சீறும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். நெறி மாறுபட நூறு சுழி வந்து சூழும் நிலையான தரை நீரில் இலை போல் ஈடாடும். இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்….

மொழிக்கெலாம் தலைமை தமிழே – புலவர் குழந்தை

மொழிக்கெலாம் தலைமை தமிழே! முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் – புலவர் குழந்தை

தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை                 யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்                 மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ                 ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்                 தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழணங்கை வணங்குவோம் – சங்குப் புலவர்

தமிழணங்கை வணங்குவோம்!   காதிலங்கு குண்டமாகக் குண்டலகே                 சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை                 யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம                 ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த                 தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! – சங்குப் புலவர்

அகிலத்தில் அமைதி காப்போம் ! – எம். செயராம(சர்மா), மெல்பேண்

  சமயத்தின் பெயரால் சண்டை  சாதியின் பெயரால் சண்டை குமைகின்ற உள்ளங் கொண்டார் குழப்பமே செய்வார் நாளும் அமைதியை எண்ணிப் பாரார் ஆரையும் மனதில் கொள்ளார் அழித்தலை மட்டும் நாடி அனைத்தையும் ஆற்ற வந்தார் வெறி தலை கொண்டதாலே நெறி தனை மறந்தேவிட்டார் அறி வெலாம் மங்கிப்போக அரக்கராய் மாறி விட்டார் தூய்மையாம் சமயம் தன்னை தூய்மையாய் பார்க்கா நின்று பேயென உருவம் கொண்டு பிணக்காடாய் மாற்று கின்றார் கடவுளின் பெயரைச் சொல்லி கருணையை வெட்டி வீழ்த்தி தெருவெலாம் குருதி ஓட செய்கிறார் நாளும்…

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்

       இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்      இல்லையென்று சொல்லுவதில்லை      கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்      காட்சிதர மறுப்பதுமில்லை        ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்       அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்       நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்       நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்      உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்      உள்ளமதில் வந்துநின்றிடுவான்      தெளிவுடனே நாளும்தேடுங்கள்  –…

ஆலமரம் – முனைவர் எழில்வேந்தன்

அணுவுக்குள் இருக்கும் ஆற்றலைப் போல மிகச்சிறு விதைக்குள் அடங்கியிருந்த பேருருவம் நான். ஆலமரம் அற்புத அருமரம். ஈகக் குருதியின் சேற்றில் முளைத்து உகங்களின் தாகம் தேக்கிய விழிகளின் கண்ணீர்த் துளிகளால் துளிர்த்த மரம் நான். விரிந்து கிளை பரப்பி விழுதுவிட்டு அடர்ந்து பசுமையாய் பரந்து நிற்கிறேன் என் படர்ந்த நிழலுக்காகவும் பழத்தின் சுவைக்காகவும் நேசமாய் வந்தமரும் பறவைகளின் பாசறை நான். பற்பல வண்ணப் பறவை இனங்களின் மொழிகள் என்னவோ வேறு வேறுதான் பாடும் பண்ணின் சிந்தனை மட்டும் என்றென்றும் ஒன்று. நான் உழைக்கும் பறவைகளின்…

கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்

    கல் பெயர்த்து இழிதரும் இமிழ் இசை அருவி புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ பச்சை படர்த்தி பகலவன் தீவிழி அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை நெடுநல் நாட!அஃது மன் அன்று உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌ அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி. நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும் அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும். ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர் பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும். மைபொதி வானும் புள்நிரல் பொலிவும் இடி உமிழ்பு கண்டு…

வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

செந்தமிழர் வாழ்வென்னும் மலர்பூக்கும் கதிராய்ச் சீரேற்றும் சொற் கூட்ட வெள்ளத்தில் மழையாய் வந்தவரின் வாழ்விற்கு வன்கொடிய நெருப்பாய் வடமொழியின் வால்பற்று குழுவிற்குப் படையாய்ச் சொந்தமெனும் நம்மவரின் தோளுக்குத் துணையாய்த் தொல்லைக்கு நகை கூட்டி வாவென்னும் மலையாய்த் தந்தையாய்த் தமிழர்க்கு வெண்தாடி அலையாய்ச் சாய்ந்தாடத் தென்றலிலே சிங்கமென வந்தோன்! எண்ணத்தின் சொற்பேழை! எழுச்சிக்கு முரசம் ஏமாந்த நாட்டிற்குச் சீர்மேவ வந்தோன்! கண்ணான மண்ணிற்குக் கதியின்மை கண்டு காலத்தில் தன்மான இயக்கத்தைக் கண்டேன்! ‘விண்ணாட்டுத் தேவரிவர், வணங்குங்கள்’’ என்ற வேதத்தின் தரகற்கு விலங்கேற்ற வந்தோன் பண்ணூடு தமிழுக்குத்…