பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி

(பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? 35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு அருண்மொழி அலருக்குக் கூசாமை அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் 40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்…

பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை

(பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை அருண்மொழியின் இசைப்புலமை  செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி 20 இசைபல முயன்று வசையற வுணர்ந்து நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல் தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால் உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால் 25 குழலும் யாழும் கொட்டம் அடங்கின; பாடும் முறையாற் பாவை பாடுவள்; ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள் நாடாள், அந்த நல்லிசைச்…

பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை

(பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக- தொடர்ச்சி) 2. பழியுரை காதை வஞ்சியின் கவலை முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம் 5 தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் தைத்திரு நாளில் தமிழிசை வழங்க வாராத் துயரால் மயங்கிய வஞ்சி சோரா  நின்றனள் ; தன்மகட் டோழி தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும் 10 தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள், தேன்மொழி செல்லல் அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி…

பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக

(பூங்கொடி 6  – கவிஞர் முடியரசன்: விழாவயர்காதை தொடர்ச்சி) ஒற்றுமை பரப்புக  எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே. வாழிய வாழிய காரினம் மழையைக் கரவா தருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’  என்னுமிவ்…

பூங்கொடி 6  – கவிஞர் முடியரசன்: விழாவயர் காதை

(பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம் தொடர்ச்சி) 1. விழாவயர் காதை தமிழகச் சிறப்பு அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும்  நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ் தரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா வீரங் கெழுமிய காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது ; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்த நன்னாடு; ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என் றோதி ஓதி உயர்ந்ததோ…

பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம்

(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி) தமிழ்த் தெய்வ வணக்கம் தாயே உயிரே தமிழே நினை வணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலை யென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே  என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்…

பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம்

(பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும் – தொடர்ச்சி) பூங்கொடி – கதைச் சுருக்கம் தமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது; பொங்கற் புதுநாள் அனைவ்ர் உள்ளத்தையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பகலும் இரவும் கலை நிகழ்ச்சிகள் சிறப் புற்றாேங்கின. ஆனல், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசையரங்கேற வாராமையால் ஊரார் பலவாறு பேசினர். இதனால் வருந்திய வஞ்சி, தன்மகள் அருண்மொழிக்குத் தேன்மொழி வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். மலையுறையடிகளுடைய குறளகத்திற் சேர்ந்த அவள் இத் துறையையே வெறுத்து வாராது நின்றனள். அருண்மொழி தன்…

பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும்

(பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை – தொடர்ச்சி) பூங்கொடி 3 : பதிப்புரை உலகில் பிறந்தவருட் சிலர், அவர் தம் நாட்டை, மொழியைக் காக்க உடல், பொருள், ஆவியை ஈந்துள்ளனர் என்பதை உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் தமிழ்நாடும் குறைந்ததன்று என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்று எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம். அந் நிகழ்ச்சிகளில் நினைவூட்டுவன சில; உணர்ச்சி யூட்டுவன சில; மறைந்தன பல. ஆனால், மறக்க முடியாதன சில வுள. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளத்திற் கொண்டு உணர்ச்சி குன்றா…

பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை

(பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன் – தொடர்ச்சி) புகழ்மாலை (பூங்கொடி வெளியீட்டு விழாவில்-1964) இன்று நாட்டிலுள்ள நிலையை-தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களை, பேராசிரியர்களை, அரசியல் தலைவர்களை, அறிஞர்களை, நாவலர்களை, கலைஞர்களை வெவ் வேறு பெயர்களால் காட்டுகிறது. பூங்கொடி. பண்டாரகர் அ. சிதம்பரநாதனார் எம்.ஏ.,பி.எச்.டி. தமிழ் வாழ, தமிழர் குறிக்கோள் வாழ வழி காட்டுகிறது பூங்கொடி. பண்டாரகர் மா. இராசமாணிக்களுர் எம்.ஏ.,பி.எச்.டி. ஆற்றொழுக்கனைய கவிதை யோட்டமும் ஆழ்ந்த கருத்துச் செறிவும் நிறைந்த காப்பியம் பூங்கொடி. அறப்போர்க்கும் மறப்போர்க்கும் விளக்கங்கரும் வரிகள் இதனை உறுதிப்படுத் தும். ஆருயிர்…

பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன்

பூங்கொடி முகப்புப் பாடல் பூங்கொடி கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் வரலாறு பேசுமொரு காப்பியமாம். பூங்கொடி மொழிகலங் கேடுறக் கண்டுளந் தளர்ந்தாள் விழிநலங் குறைவது போலவள் உணர்ந்தாள். உணர்ச்சி எழுச்சியாயிற்று – எழுச்சி வளர்ச்சியாயிற்று: அவள் வாழ்வே ஓர் அறப்போராயிற்று. முடிவு? செந்தமிழாம் மொழிகாக்கத் தனைக்கொடுத்தாள் செயிர்தீர்ந்த மொழிப்போரில் உயிர்கொடுத்தாள். அதனால் எங்கள் உடலுங் குருதியும் அவளானாள் உளத்தில் கொதிக்கும் அழலானாள்  மூச்சும் பேச்சும் அவளானாள்  மும்மைத் தமிழின் அணங்கானாள். அவள் வரலாறு கூறும் இப்பெருங்காப்பியம் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பேழை…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி 6: தொடர்ச்சி உதாரன்: அரசனுக்குப் பின்னிந்ததூய நாட்டைஆளுதற்குப் பிறந்தவொருபெண்ணைக் கொல்லஅரசனுக்கோ அதிகாரம்உங்க ளுக்கோஅவ்வரசன் சட்டத்தைஅவம தித்தான்சிரமறுத்தல் வேந்தனுக்குப்பொழுது போக்கும்சிறியகதை நமக்கெல்லாம்உயிரின் வாதைஅரசன்மகள் தன்னாளில்குடிகட் கெல்லாம்ஆளுரிமை பொதுவாக்கநினைத்தி ருந்தாள் மோனை: புறம்பேசிப் பொல்லாங்குபுரிவான் தானும்பொருந்திமனத் துயர்களையும்நண்ப னாகான்மறம்பேசி மனத்திலாண்மையில்லா தானும்மங்கையரின் காதலிலேவெற்றி கொள்ளான்திறம்பேசுந் திருட்டுவழிச்செல்வன் தானும்செய்கின்ற பூசனையால்பக்த னாகான்அறம்பேசும் அருந்தமிழைக்காவா தானும்அற்றத்தை மறைக்கின்றமனித னாகான் அறுசீர் விருத்தம்  எண்சீர்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 5 காட்சி : 6கொலைக்களம் – அதிகாரிகள், கொலைஞர், உதாரன், அமுதவல்லி, பொதுமக்கள்கலி விருத்தம் அதிகாரி: சாவிலும் பிரியா இன்பம் காணஆவிநீர் துறக்குமுன் அந்நாள் தொட்டுப்பூவுலக மரபினைப் போற்றும் படியாய்மேவுஞ் சொல்சில மேன்மையீர் சொல்வீர் எண்சீர் விருத்தம் உதாரன் : பேரன்பு கொண்டோரேபெரியோ ரேஎன்பெற்றதாய் மாரேநல்லிளஞ்சிங் கங்காள்நீரோடை நிலக்கிழிக்கநெடும ரங்கள்நிறைந்தபெருங் காடாகப்பெருவி லங்குநேரோடி வாழ்ந்திருக்கப்பருக்கைக் கல்லின்நெடுங்குன்றில் பிலஞ்சேரப்பாம்புக் கூட்டம்போராடும் பாழ்நிலத்தைஅந்த…