குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 33 : இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 34 கடிந்துரைப்போரைத் துணையாகக் கொள்ளாதவன் தானே அழிவான் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௮ – 448) தவறுகின்ற நேரங்களில் கடிந்துரைப்பார் இல்லாத பாதுகாப்பற்ற அ்ரசன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெடுவான். இடித்தல் என்பதற்கு முழங்குதல், இடியிடித்தல், நோதல், தாக்கிப்படுதல், மோதுதல், கோபித்தல், தூளாக்குதல், தகர்த்தல், நசுக்குதல், தாக்குதல், முட்டுதல், கழறிச்சொல்லுதல்,…
வெருளி நோய்கள் 689-693: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 684-688: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 689-693 689. கலை வெருளி – Artemophobia கலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கலை வெருளி இசை வெருளி, நாட்டிய வெருளி, நாடக வெருளி முதலான கலை தொடர்பான வெருளி உள்ளவர்களுக்குக் கலை வெருளி இருக்கவும் வாய்ப்புள்ளது. கலைகள் வழியாக ஆட்சிக்கு எதிரான புரட்சிக்குரல், கலகக் குரல், முதலானவை எழுப்பப்படும் என ஆட்சியாளர்களுக்கும் முற்போக்குக் கருத்துகள் பரப்பப்படும் என மதவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கலை வெருளி உண்டாக வாய்ப்புள்ளது. 00 690. கலைமான் வெருளி –…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 4: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 3: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 4 ஆக எந்த ஒரு திட்டத்திற்கும் நாம் ஒன்றிய அரசைச் சார்ந்தே உள்ளோம். ஆனால், பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசைப் பின்பற்றித்தான் தென் மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அஃது உலகத் தமிழ் மாநாடு ஆகட்டும் வேறு பல திட்டங்கள் ஆகட்டும். ஆனால் இந்த மொழி வளர்ச்சியில் நாம் மத்திய அரசைப் பின்பற்றலாம். பின்பற்றி நாம் என்ன கேட்கலாம்? அவர்கள் சமற்கிருத வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள் இல்லையா?…
நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 17 புற அழகு அழகல்ல கல்வியே உண்மையான அழகு குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. (நாலடியார் 131) பதவுரை: குஞ்சி யழகும்= தலைமுடி அழகும்; கொடுந்தானைக் கோட்டழகும்= வேலைப்பாடுகளாலும் வடிவமைப்பாலும் சிறந்துள்ள ஆடை அழகும்; மஞ்சள் அழகும் = மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகும்; அழகல்ல = அழகு அல்ல;…
வெருளி நோய்கள் 684-688: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 679-683: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 684-688 684. கலவை வண்டி வெருளி – Seemptuophobia கற்காரை கலவை வண்டி (cement truck) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கலவை வண்டி வெருளி. கற்காரை கலவை(concrete mixer/cement mixer)வண்டி, கற்காரை சுமை வண்டி(cement truck) எனப்படுகிறது. எனினும் கற்காரையைச் சுமந்து செல்லும் பார வண்டியே கற்காரை சுமை வண்டி. வேறு எதையாவது சுமந்து செல்லும் பொழுது அப்பொருளின் பெயரில் அழைக்கப்பெறும். எனவே, இங்கே இது கலவை வண்டியையே குறிக்கிறது. 00 685. கலவைப்பண்ட வெருளி…
தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 9 வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு “இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில்…
வெருளி நோய்கள் 679-683: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 674-678: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 679-683 679. கரையான் வெருளி-Isopterophobia கரையான் முதலான மரம் அரிப்புப் பூச்சிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் கரையான் வெருளி. பூச்சிகளால் அரிக்கப்படாத மரக்கலன்கள் என்று உறுதி அளித்தாலும் சிலர் பூச்சிகள் அரிக்கப்படும் என்று பேரச்சத்தில்தான் இருப்பர். 00 680. கலங்கரை விளக்க வெருளி – Hotatsosphobia கலங்கரை விளக்கம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கலங்கரை விளக்க வெருளி. உயர வெருளி உள்ளவர்களுக்குக் கலங்கரை விளக்கவெருளி வருகிறது. 00 681. கலப்பி வெருளி – Blenderphobia/Blendaphobia கலப்பான்/கலப்பி…
க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்
(கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௩. போலித் தமிழர் இன்று தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர்…
வெருளி நோய்கள் 674-678: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 669-673: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 674-678 674. கருவண்ண வெருளி-Melanophobia கருநிறத்தைக் கண்டு ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கருவண்ண வெருளி. கரு வண்ணத்தைத் துயரத்தின் அடையாளமாகக் கருதுவதாலும் துன்பத்தின் குறியீடாகக் கருதுவதாலும் சிலருக்குக் கரு வண்ணத்தைக் கண்டால் வெறுப்பும் அச்சமும் வருகிறது. பல நாடுகளில் நீதிமன்றங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் முதலானவர்களின் மேலாடையின் நிறம் கருப்பு. இது அங்கே அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனாலும் கருப்பு நிறம் கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கருப்புதான் எனக்குப்பிடித்த வண்ணம் என்ற முறையில் வெற்றிக்கொடி கட்டு என்னும்…
வெருளி நோய்கள் 669-673: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 664-668: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 669-673 669. கருச்சிதைவு வெருளி -Staniophobia கருச்சிதைவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கருச்சிதைவு வெருளி. கருச்சிதைவு வெருளி உள்ளோரில் ஒரு பகுதியினர் கருத்தடைக்கும் பேரச்சம் கொள்வோராக உள்ளனர். 00 670. கருத்து வெருளி – Doxphobia/Genviaphobia கருத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கருத்து வெருளி. எதற்கெடுத்தாலும் கருத்துரை சொல்வோர் உள்ளனர். அவ்வாறு கருத்துரை சொல்வது சிலருக்குப் பிடிக்காது. சில நேரம் செயல்பாடுகள் குறித்த கருத்துரையை நல்ல நோக்கததில் சொன்னாலும் எரிச்சல் அடைந்து வெறுப்பர். யாரும் கருத்துரை சொன்னால்…
வெருளி நோய்கள் 664-668: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 659-663: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 664-668 664. கரிம உயிர்ம வெருளி-Monoxeidioanthrakaskisiphobia கரிம உயிர்மப் பயன்பாட்டுத் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கரிம உயிர்ம வெருளி. இணையத் தளங்களில் விரிவான விளக்கம் கண்டுணர்க. 00 665. கரிம உயிர்வளிம வெருளி-Monoxeidioanthrakaphobia நிறமற்ற மணமற்ற சுவையற்ற நச்சுத் தன்மை மிகக கரிம உயிர் வளிமம் (கார்பன் மோனாக்சைடு) மீதான அளவு கடந்த பேரச்சம் கரிம உயிர்வளிம வெருளி. 00 666. கரிய நீர் வெருளி – Cocaphobia கரிய மென்னீர் கொக்கொ கோலா குறித்த வரம்பற்ற…
வெருளி நோய்கள் 659-663: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 654-658: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 659-663 கரப்பான்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரப்பான் வெருளி.கரப்பான் பூச்சி பறந்து மேலே விழும், உணவில் விழும், நோய் பரப்பும் என்பன போன்ற அருவருப்பும் கவலையும் அச்சமும் கரப்பான் பூச்சி வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.கரப்பான் குருதி வெண்ணிறமாக இருக்கும். இதனை இரத்தமாக எண்ணாமல் அடிபட்டிருக்கும் கரப்பானைக் கண்டு அருவருப்பு அடைவர். கரப்பான் பூச்சி உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.ஆதலால், இதன் தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். எனவே,…
