தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக்குறள் – சுவைட்சர்

தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக்குறள் அன்பு சமூக சேவையாக வளர்ந்து சிறக்க வேண்டும் எனும் கருத்து திருக்குறளிலேதான் வலியுறுத்தப்படுகிறது. நெடுங்காலமாகத் தமிழ்நாட்டிலே வேரூன்றி வளர்ந்த கருத்துகளைத் திருவள்ளுவர் குறள் வெண்பா வடிவில் எடுத்துரைத்தார். “செயல் மூலமாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயலுகிறதே! அதற்காகச் செயலில் ஈடுபடு’ என்பது வள்ளுவர் இடும் கட்டளையாகும். – ஆல்பர்ட்டு சுவைட்சர்: இந்திய எண்ணமும் இதன் மேம்பாடும்: பக்கம் 198(Albert Schweitzer, Indian Thought and its Development)

திருவள்ளுவப் பெயர்க்காரணம்: மு.இராகவையங்கார்

திருவள்ளுவப் பெயர்க்காரணம்: திருவள்ளுவர் என்று இவர் பெயர். பிறந்த குலம்பற்றி இவர்க்கு வழங்குவதென்று கூறுவர். வள்ளுவர் என்ற குடியினர் தாழ்குலத்த¬வ¬ருள் ஒருவராய், விசேட காலங்களிலே அரசாணையை முரசறைந்து சாற்றுவோர் என்பது முன்னூல்களால் அறியப்படுகின்றது. சோதிட நூல்வல்ல நிமித்தகராகவும் பண்டைக்காலத்தே இவர் விளங்கினர் (சீவக.419). சங்கக் காலத்தே தமிழ் நாட்டவருள் சாதிபற்றிய இழிவும் அதன் மூலம் அருவருப்பும் இப்போதுள்ளனபோல இருந்தனவல்ல. தமிழ் வேந்தர்களும் தலைவர்களும் பாணர் முதலிய தாழ்குலத்தவர்களை அவரது கல்வியறிவு முதலியன பற்றி எவ்வளவு சிறப்பாகக் கௌரவித்து வந்தனரென்பதற்குச் சங்கச் செய்யுட்களே தக்க சான்றாக…

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது ! பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால் பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை ! சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும் சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை ! அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது…

மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா

   புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த  நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார்….

மொழி பெயர்ப்போம்! – அருணகிரி

மொழி பெயர்ப்போம்!  உலகப் புகழ் பெற்ற எண்ணற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளிவந்து உள்ளன. அதன் வழியாகப் புதிய கருத்துகள் தமிழகத்தில் பரவி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மாசுகோ முன்னேற்றப்பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வந்த நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் பொது உடைமை இயக்கத்தின் கருத்துப் பரவலுக்குப் பெருமளவில் உதவின. அத்துடன், அவற்றைப் படித்த வாசகர்களின் மனங்களில் இரசிய நாட்டின் நில அமைப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள்,  தொழிலாளர்கள் போராட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பசுமரத்து ஆணி போலப் பதியச் செய்து விட்டன. அப்படி உருவான பல…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19   தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘           நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்             வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘           உற்றான் அளவும் பிணியளவும் காலமும்             கற்றான் கருதிச் சொல்’ 40 ‘           உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று             அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41 மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின்…

அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!   மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே! இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 /…

மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்

மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா   ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா.   மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…

அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்! – அறிஞர் அண்ணா

  நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்படவேண்டும். எனதருமை நண்பர் வாசுபேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினாரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழியைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன். அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்!    அதனால், நமது பதினான்கு…

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு! – க.தமிழமல்லன்

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு!   அடிமையில் வீழ்ந்து நிலை தடுமாறி அழிவினை விரும்பிடும் தமிழ்நாடே! – நீ மிடிமையில் உழன்றே மீள்நினை வின்றி மிகநலிந் தால்எவர் மீட்பாரே? உரிமையை இழந்தாய் உயர்வுகள் துறந்தாய்! நரிமையின் காலடி வீழ்ந்தாய் – உன் சரிவுகள் நீக்கும் சான்றவர் உளரோ சடுதியில் சேர்ந்தெழுந் தார்க்கு? கட்சியில் புகுந்தாய் காட்சியில் நெளிந்தாய் களம்காணும் மறத்தினை இழந்தாய் – நீ காசுக்குப் பறந்தாய் கவர்ச்சிக்குக் குனிந்தாய்! கடைத்தேற்றும் காவலைத் துறந்தாய்! சாதியில் புரண்டாய் மதங்களை மறைத்தாய் பாதியில் உன்போக் கொழிந்தாய்!…

நேற்றும் நாளையும் எதற்கு? – கலீல் கிப்ரான்

இன்று இனிக்கும் போது ? ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் ஓதும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது நேற்று ஏன் அவலம் அவைமேல் இன்று இனிக்கும் போது ? ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. செயபாரதன், கனடா 

வளர்த்திடுவீர் செந்தமிழை! – இலக்கியன்

வருக இன்றே! எல்லாரும் எழுதுகின்றார் பேசு கின்றார் இதுவரைக்கும் நந்தமிழ்க்கோ ஆட்சி யில்லை வல்லவராம் வாய்ப்பேச்சில் எழுத்தில், ஆய்வில் வளர்ப்பதுவோ தம்பெருமை, வருவாய்க் காகச் செல்வரெங்கும் வண்டமிழைப் புகழ்வர் எங்கும்! செழித்ததுவோ செந்தமிழும்! முனைவ ரெல்லாம் பொல்லாரே! காசுக்கே வாழு கின்ற போலிகளே! இவராலே தமிழா வாழும்? முனைவரென்ற பேராலே பல்லோர் உண்டு முன்வந்து தமிழ் வளர்க்க யாரு மில்லை தினமணியில் கட்டுரைகள் எழுதிச் செல்வார் திணையளவும் தமிழ்த்தொண்டில் நாட்ட மில்லார் வினைத்தூய்மை வினைத்திட்பம் கற்றி ருந்தும் விளையாட்டாய் இருக்கின்றார் பயனே இல்லார்! பனைமட்டைச்…