கைவிட முடியாத கனவு! – பா.செயப்பிரகாசம்

  தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது. விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது. புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பகுதியெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத்தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி? ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை…

திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் பாலா

கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் இரா.பாலச்சந்திரன் பிறந்த நாள் : மார்கழி 30, 1977 / சனவரி 13, 1946 நினைவு நாள் : புரட்டாசி 06, 2040 / செப்.22, 2009 பெற்றோர்: மா.இராமதாசு – ஞானாம்பாள் மனைவி: மஞ்சுளா மகள்: பிரியா மகன்: கார்த்திக்கு பிறப்பிடம் – கல்வி   கவிஞர் பாலா மார்கழி 30, 1977 / 1946 ஆம் ஆண்டு சனவரி 13 ஆம் நாள் சிவகங்கையில் பிறந்தார்; சிவகங்கை அரசர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்; பள்ளிப்பருவத்தில்…

பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் : வி. சபேசன்

பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள்   இம் முறை புலம்பெயர் நாடுகளில் பொங்கல் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தக் கொண்டாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.   தமிழர்களிடம் எஞ்சியுள்ள தமிழர் திருநாளான பொங்கலுக்கு விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.   ஆயினும் சில செய்திகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்த ஆண்டு பொங்கலை இன்னும் சிறப்பாக, ஒரு தமிழர் திருநாள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.   பொங்கல் விழா என்பது தமிழர்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி)   துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: ம. இராமச்சந்திரன்

 (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: தொடர்ச்சி)  17   மாணவர் ஆற்றுப்படை, புதுக்கோட்டையில் வாழும் வள்ளல் பு.அ. சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற கவிதையாகும். பு.அ. சுப்பிரமணியனார் மணிவிழா மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.29 இக்கவிதை எழுதப்பெற்ற காலம் சனவரித் திங்கள் 1959. நூற்றுத்தொண்ணூறு அடிகளை உடைய அகவல் கவிதை இது. ஆசிரியப்பா இனத்தில் நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து. ஈற்றியலடி நாற்சீர் பெற்றும், ஈற்றடியின் இறுதிச்சீர் ஏகார ஓசையுடனும் முடிந்துள்ளது. ஆற்றொழுக்குப் போல சீரான நடையைக் கொண்டு விளங்குகிறது இம்மாணவர் ஆற்றுப்படை….

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 தொடர்ச்சி) 08 தொழிலில் மேம்படுக! கல்வியுடன் தொழிலும் தேவையன்றோ? உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பக்கம் 57 / சுதந்திரப்பாட்டு) ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச்சாலைகள் வைப்போம்! (பக்கம் 22 / பாரத தேசம்) பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் (பக்கம் 206 / முரசு) இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே! இயந்திரங்கள் வகுத்திடு வீரே! (பக்கம் 213 / தொழில்) கூடும் திரவியத்தின் இவைகள் – திறன் கொள்ளும்…

ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப்…

இந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை

  தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள் நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை.   இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித்…

கிரேக்க, எகிப்திய நாகரிகங்கள் தமிழ் நாகரிகத்தின் கிளைகளே! – இராமச்சந்திர(தீட்சித)ர்

  கிரேக்க, எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரிகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்?. அவை ஆரியமொழி எதையும், அதாவது ஆரிய அடிப்படை எதையும் பேசவில்லை. அங்ஙனமாகவே, அவை தொல்பழங்காலத் தமிழ் நாகரிக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக் கிடப்பதாம். கிரீட், பித்தளை, செப்பு நாகரிகத்திலிருந்து எத்தகைய இடையூறும் இல்லாமல் இரும்பு நாகரிகத்துக்குச் சென்றுவிட்டது. இந்தியாவிலும் நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரிகம் என்பது போலும் ஒரு நாகரிகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச் சூழ்நிலைகளை யெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியத் தரைக்…

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? – ப.மு.அன்வர்

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? ஓசைக் கிளர்ச்சியினால்             உருண்டுவரும் உலகத்தில் ஆசைக் கிளர்ச்சியினால்             அமைவதுதான் உயிர் வாழ்க்கை ஆசைக் கிளர்ச்சி             அடர்ந்தெரியும் நேரத்தும் ஓசையின்றி வாழ்ந்த             ஒருகாலம் குகைக்காலம் ஊழித்தொடக்கத்தில்             ஊமையரின் கூட்டத்தில் பாழைப் பதுக்கியவன்,             பயிலுமொழி பகர்ந்தவன்யார்? அவிழ்ந்தவாய் அசைவில்             அகரம் பிறந்துவர உவந்தொலிகள் ஒவ்வொன்றாய்             ஒலித்துவரக் கற்றவன்யார்? ஒலியலைகள் ஒவ்வொன்றாய்             எழும்பி ஒருங்கிணைந்து தெளிவான சொல்லமையக்             கண்டு தெளிந்தவன்யார்? குறில்நெடிலின் வேற்றுமையைக்             குறித்தறிந்து முதன்முதலில் அறிவறியும்…

நாட்டாரியல் பேராசிரியர் கரு.அழ.குணசேகரன் இயற்கை எய்தினார்

(சித்திரை 29, 1986 /12 மே 1955 – தை 06, 2047 / 17 சனவரி 2016) ஓய்ந்தது உரிமைக்குரல்   நாட்டரியல் ஆய்வாளரும் நாட்டுப்புறக்கலைஞரும் நாடக ஆசிரியரும் நடிகரும் நாடகத்துறைப் பேராசிரியருமான முனைவர்  உடல்நலக் குறைவால் இன்று தன் 60 ஆம் அகவையில் புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.   கே.ஏ.குணசேகரன் என அழைக்கப்பெறும் இவர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர்; இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு…

இன்பத் தமிழினிற் பாடு! – புலவர் பொதிகைச்செல்வன்

யாழெடு யாழெடு கண்ணே! – யாழில் இங்கே இசைத்திடோர் பண்ணே! ஊழிடு துன்பம் பறக்க – நெஞ்சில் ஓங்கியே இன்பம் சிறக்க –             (யாழெடு) வேயின் குழலிசை யோடு – இள வேனிற் குயிலெனப் பாடு! நோயின் துயரெலாம் ஓட – உயர் நோக்கமும் ஆக்கமும் கூட –           (யாழெடு) இன்பத் தமிழினிற் பாடு! – இனம் ஏற்ற முறத்தினம் நாடு! அன்னைத் தமிழ்த்திரு நாடு – நலம் ஆர்ந்திடவே வழி தேடு! –         (யாழெடு) நற்றமிழ் கற்றுநீ தேய்வாய்! – பாரில் நம்மினத்…