வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா

வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா    வெள்ளவத்தை இராமகிருட்டிணா கல்விக்கூடத்தின் பரிசளிப்பு விழா அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது.    இந்நிகழ்விற்குத் தலைமை விருந்தினர்களாகத் தேசிய இணைவாழ்வு – கலந்துரையாடல் – அரசவினை மொழிகள் அமைச்சர் மனோ.கணேசன், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மேல் மாகாண அவை உறுப்பினர் சண். குகவரதன், இடைநிலைக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி த.இராசரத்தினம், கொழும்பு தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி சீ.கே.இலங்கதிலக முதலான பலர் கலந்து கொண்டார்கள்.   இத்துடன் மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.   [படங்களை…

பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!

பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!  சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தரும் பல கல்வி நிறுவனங்களின்  நிறுவனரும் வணிக நிறுவனங்களின் உரிமையாளருமான  சேப்பியார் என அறியப்பெறும் ஏசுஅடிமைபங்கிஇராசு உடல் நலக்குறைவால் ஆனி 04, 2047 / சூன் 18, 2016 சனி இரவு காலமானார்.   கல்விநிலையங்கள் வணிக நிறுவனங்களாக மாறிய அவலத் தொடக்தக்திற்குக் காரணமாக இருந்தாலும் ஏழை எளிய குடும்பங்களிலிருந்தும் பொறியாளர்கள்  உருவாவதற்கு  இவரே முதற் காரணம்.  புனிதர் சோசப்பு பொறியியல் கல்லூரி,  சேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா…

“பைந்தமிழ்ச் செம்மல்” விருது புதுவை மு.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பெற்றது

  ஆனி 04, 2047 / 18-06-2016 அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச் சங்கம்,  நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து  வானவில் விழா நடத்தின.   புதுவைத்தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன்  சிறந்தமுறையில் தமிழ்த் தொண்டாற்றி வருவதைப் பாராட்டி இவ் விழாவில் “பைந்தமிழ்ச் செம்மல்” விருது அவருக்கு வழங்கப்பட்டது.    பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.தாமோதரன், சின்னத்திரை நடிகர் கவிஞர். கலைமாமணி அமர சிகாமணி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க நிறுவனத் தலைவர்…

வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்

வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை   யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும்.  1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண  மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…

சமற்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம்! – கருணாநிதி

    சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும்  முன்னாள்அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மகளுமான சமந்தா – கிரண் திருமண நிகழ்ச்சியை நடத்திய பொழுது கலைஞர் கருணாநிதி,  சமற்கிருத எதிர்ப்பு குறித்தும் உரையாற்றினார்.   மீண்டும் தமிழ்நாட்டில் – இந்தியாவில் –  சமற்கிருதம் தலைதூக்குமா? வடமொழி நம்மீது படை யெடுக்குமா? எனக் கேள்விக் குறி ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம். வட மொழிக்கு ஆதிக்கம், சமற்கிருதத்திற்கு ஆதிக்கம் என்று பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய  தமிழ் மொழிக்குத்தான் செல்வாக்கு, தூய…

குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !

குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்!   வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட  ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர்  தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …

பூவரசி விருதுகள் வழங்கு விழா, சென்னை

  சென்னை பூவரசி அறக்கட்டளை, பூவரசி ஊடக நிறுவனங்களின் சார்பாகப் பூவரசி விருதுகள் வழங்கும் விழா சென்னையில்  நடைபெற்றது .      இலக்கியம், இசை, சமூகத் தொண்டு போன்ற பிரிவுகளில் சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.   இலக்கியத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறப்பாகச் சேவை செய்துவருவதைப் பாராட்டிப், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் கவிஞர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியனுக்குத் திரைப்பட இயக்குநர் மீரா.கண்ணன் ‘பூவரசி மக்கள் விருது’ வழங்கினார்   விழாவில் நடிகர் சாருகாசன், இயக்குநர் சனநாதன், எழுத்தாளர் பிரபஞ்சன், புதுவைத்…

தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா

தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா    பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவி பரமேசுவரி, தினமலர் பட்டம் சார்பாக நடைபெற்ற பட்ட அவை(சபை) நிகழ்வுக்குத் தேர்வு பெற்று  சென்னையில் (வைகாசி 23, 2047 / சூன் 05,2016 அன்று) நடைபெற்ற பட்டஅவை(சபை) நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ், புத்தகங்களைப்   பரிசாகப் பெற்றார். திரு.நல்லகண்ணு, திரு.இரவிக்குமார், தினமலர் துணை ஆசிரியர் திரு.கிருட்டிணமூர்த்தி  ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.    மறுநாள் (வைகாசி 24, 2047 / சூன் 06, 2016 அன்று) பள்ளியில்…

சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு

சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு         தேவகோட்டை –    தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் அனைத்துப்பாடல்களையும் பாடிய  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்திரி, கார்த்திகேயன், இரஞ்சித்து, தனலெட்சுமி, பார்கவிஇலலிதா, கண்ணதாசன், இயோகேசுவரன், தனம், இராசலெட்சுமி, சௌமியா ஆகியோருக்குத்  தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவுப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் சிவநெறிச் செல்வர் பேரா.சொக்கலிங்கம், பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள்.   மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரியை…

சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!   சங்குவாரி தோட்ட  ஐந்து காணித் தேயிலைத்தோட்டத்தைக் கம்பளை நகரவை எடுத்துக்கொண்டது.  இங்கே குப்பைக் கூளக் கூடம் அமைக்க ஏற்பாடு செய்து அதன் முதற்கட்டமாக காணி அளவிடலுக்கு வந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் இத்திட்டத்துக்கு எதிராகவும் சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்.     இது குறித்து முன்னால் உடப்பளாத்தப்பகுதி அவையின் உறுப்பினர் எசு.செல்லமுத்து அவர்களினால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கும் மத்திய மாகாண அமைச்சர் இராமேசுவரன் அவர்களின் கவனத்திற்கும்…

வாழ்க்கைச்செலவு கொடுப்பனவில் குழப்ப வேண்டா!

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 10.000உரூபா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருவதைக் குழப்ப வேண்டா!  – மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன்     பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 6000.00உரூபா போதாது என்பது நான் அறிவேன் அதற்கு  மாநிலக்கல்வியமைச்சர் என்ற வகையிலும் மலைய மக்களின் வாக்குபலத்தில்  பாராளுமன்றம் சென்றவன் என்ற வகையிலும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் முறையாகச் செய்து வருகின்றேன் அதற்கு உரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றேன் இடையில் இதனைக் குழப்பும் வகையில் செயற்பட வேண்டா! அறிக்கையும்…

ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! – ஊர்திப்பேரணி

ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! அனைத்துக் கட்சி இயக்கங்கள் பங்குபெறும் பேரணி!   செய்யாத குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் இருக்கும் நம் உறவினர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்பயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரிலிருந்து சென்னைக் கோட்டை வரை  ஊர்திப்பேரணி! 25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்… விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்… ப.சீ.ந.த.ச. (‘தடா’) சட்டம் பொருந்தாது என முடிவுக்கு வந்த நிலையில் ப.சீ.ந.த.ச.(தடா) ஒப்புதல் வாக்குமூலத்தின் கீழ்த் தண்டித்த முரண்… ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த காவல்…