உண்ணாநோன்பைக் கைவிட்ட உதயகலா!

தனிமைச் சிறையில் இருந்து விடுவிப்பு! ஈழத் தமிழப் பெண் உதயகலா உண்ணாநிலையைக் கைவிட்டார்!   தனிமைச் சிறையில் இருந்து தன்னைக் காவல்துறையினர் விடுவித்ததை அடுத்து, ஈழத் தமிழ்ப் பெண் உதயகலா உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.   இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராசு என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் ஏதிலியராக தனுசுக்கோடிக்கு வந்தார். தயாபரராசு, அவர் மனைவி உதயகலா, மூன்று குழந்தைகள் ஆகியோரிடம் உசாவிய (விசாரணை நடத்திய) காவல்துறையினர், தயாபரராசு மீது கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்…

தேர்தல் நிதி வேண்டுகிறது நாம் தமிழர் கட்சி!

தேர்தல் நிதி   வேண்டுகிறது நாம் தமிழர் கட்சி! நாம்தமிழர் கட்சிக்கு நிதியுதவ விரும்புவோர்அறிவதற்கு: நாம்தமிழர் தேர்தல் நிதி வங்கி :  இந்தியன் ஓவர்சீசு வங்கி / Indian Overseas Bank இராசாசி பவன், பெசண்டு நகர் கிளை , சென்னை / Rajaji Bhavan. Besant Nagar. Chennai. கணக்கின் பெயர் : நாம்தமிழர் கட்சி / Naam tamizhar katche கணக்கு எண் :         168702000000150 குறியெண் :               IOBA000189

தமிழகப் புலவர் குழு – புதிய பொறுப்பாளர்கள்

  தமிழகப் புலவர் குழுவின்  107 ஆவது  கூட்டம்  கிருட்டிணன்கோவில் நகரில் உள்ள  கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,  கோலாகலமாக  நடந்தேறியது. பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 காலை  10.00 மணியளவில்  தமிழ்த்தாய் வாழ்த்துடன்  கூட்டமானது  தொடங்க, கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் க.சிரீதரன் வரவேற்புரையாற்றினார்.   புலவர் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில்  தலைவர்,  செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாண்மைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புலவர் குழுவின் தலைவராக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், துணைத்தலைவராக இதுவரை செயலாளராகப்பணியாற்றிய, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,  செயலாளராக  முனைவர்  மறைமலை இலக்குவனார்,…

1 உரூபாய்க் கட்டணத்தில் கணிணிக் கல்வி!

சென்னை, பெரம்பூரில், 1 உரூபாய்க் கட்டணத்தில் கணிணிக் கல்வி!      பெரம்பூரில், ஒரே ஓர் உரூபாய்க் கட்டணத்தில் ஏழை எளியோருக்குக் கணிணிக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.  பெரம்பூர் இலட்சுமி அம்மன் கோயில் தெருவில் இராமானுச அறக்கட்டளை இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மாணவ, மாணவியருக்கான கணிணிச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கணிணிக் கல்வி, சடகோபன் இராமானுசதாசரால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக முதுநிலை அறிவியல் (M.Sc) படிப்பில் தங்கம் வென்ற சத்தியா உள்ளார். இவர் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்காக…

திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!  திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைத் தொல்லியல் – வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலையில் உள்ள படியூர் அருகே சின்னாரிபட்டி ஊரிலுள்ள கம்பத்தீசுவரர் கோயிலில், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் – வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் க.பொன்னுசாமி, ச.இரஞ்சித்து, இரா.செந்தில்குமார், பொறியாளர் சு.இரவிக்குமார் ஆகியோர் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…

தமிழர்களுக்கு மட்டும் வேண்டுகோள்! – ஆ.சு.மணியன், தமிழர் சங்கம்

தமிழர் சங்கம் ஆ.சு.மணியன்,    திருத்துறைப்பூண்டி அன்பு வேண்டுகோள்   உலகத்தமிழர்களே!   உலகத்தமிழர்களை (இணையம் வழியாக) ஒன்றிணைக்க முனைந்துள்ளோம்.   எனவே தமிழர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்! தமிழர்கள் அல்லாதவர்களைச் சேர்க்க மாட்டோம்  எனத் தமிழர் சங்கத்திலிருந்து   அறிவிக்கிறோம். தமிழர்கள் தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல்முகவரி,   பேசி எண்கள், தந்தை மொழி, தாய்மொழி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குடும்பத்தில் காதல் திருமணம் செய்தவர் இருந்தால் அவர் குறித்த விவரம், மேலும் தமிழ் மக்கள்வளர்ச்சியடைய சிறந்தவழி முதலியவற்றைப்  பகிர்பேசி வழி, மின்னஞ்சல்வழி, யனுப்பிட வேண்டுகிறோம்…

வங்கி விவரம் கேட்டுப் பணம் திருடும் மோசடி பெருகிவருகின்றது!

வங்கி விவரம் கேட்டுப் பணத்திருட்டில் ஈடுபடுவோர் பெருகிவருகின்றனர்.   கோவை மாநகரில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து புது முறையில் பணம் திருடப்பட்டதாகக் கடந்த மூன்று மாதங்களில் 62 முறையீடுகள் (புகார்கள்) வந்துள்ளன. இது தொடர்பாகக் குற்றவாளிகளின் எண்களை வெளியிட்டு மின்வெளிக் குற்றப்பிரிவுக் (Cyber Crime) காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.   வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கைப்பேசிக்கு, அவர்களுடைய வங்கியின் மேலாளர் பேசுவதாக அழைப்பு விடுக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பண அட்டை (ATM) விவரம், கடன் அட்டை (credit card) விவரம், பிறந்த நாள்…

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்               இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயல் அமைப்பின் செய்தி:   கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் அருவினையாளர்(சாதனையாளர்) விருது (இயல் விருது) இம்முறை ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சியக் கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17 ஆவது இயல் விருது ஆகும்.   அறிவு என்பதே உலகளாவிய…

மக்கள்நலக் கூட்டணி வலைத்தள விவரங்கள்

  மக்கள் நலக் கூட்டணிக்காகப் புதிய இணையத்தளமும் குமுக வலைத்தளப் (Social Network) பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.   மார்ச்சு ௮ (8) செவ்வாய்க்கிழமை முதல் இக்கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பரப்புரைப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகளும், படங்கள் – காணுரைகள் (videos) ஆகியவையும் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற…

பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடரியில் புதிய ஏற்பாடு!

விரும்பிய இடத்தில் மாறிக் கொள்ளும் வசதி!  தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்வண்டியில் புதிய ஏற்பாடு!   தொடர்வண்டிப் பயணத்தின்பொழுது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் வசதியைத் தெற்கு இருப்பூர்தித்துறை (Southern Railway Department) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தெற்கு இருப்பூர்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர்வண்டிப் பயணங்களின்பொழுது சில நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் வசதிக்குறைவாகவும், பாதுகாப்பு இன்றியும் உணர்கின்றனர்….

ஏழு தமிழர் விடுதலை :உச்சநீதிமன்றத்திற்கு உசாவலதிகாரம் இல்லை – நீதிபதி சந்துரு

ஏழு தமிழர் விடுதலைக்கு எதிரான விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் உசாவச் (விசாரிக்க) சட்டத்தில் இடமில்லை! – நீதியரசர் சந்துரு நெற்றியடி! இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை விவகாரம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில்!   இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்துக் கேட்டு நடுவண் உள்துறைச் செயலருக்குத் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மடல் எழுதியிருக்கிறார். கவலைக்கிடமாகக் கிடக்கும் தந்தையைக் கடைசி முறை பார்க்கக் கூட நளினிக்கு ஒப்புதல் மறுத்த செயலலிதா அரசு, அது நடந்த அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் ஏழு…