அமெரிக்கத் தூதரகத்தில் ஒலித்த அழகு தமிழ்!- விகடன் வாசகர் விசயலட்சுமி

     அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற இசைவு பெற (புகவுச்சீட்டு -விசா) நேர்காணலுக்கு அமெரிக்கத்தூதரகம் (Cஒன்சுலடெ) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் மறுமொழி அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.   நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக் கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் ‘குட் மார்னிங்…

நாகப்பட்டினத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு! தனிமனிதனுக்குப் பாதுகாப்பற்ற நிலை   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையின் போதிய நடவடிக்கையின்மையால் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தனிமனிதனுக்குப் பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யத்தில் பணிபுரிந்த பெண்நீதிபதி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதனால் வாரத்தில் இரண்டு நாள் நாகப்பட்டினத்திற்கும், மற்ற நாட்களில் வேதாரண்யத்திலும் பணியாற்றினார். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரும்போது   வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் சார்பில் வெடிகுண்டை பெண்நீதிபதி மீது ஒரு மருமக்கும்பல்…

தேவதானப்பட்டிப் பகுதியில் நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் பருவமழையாகப் பொழிந்த கோடைமழையானது பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொழிந்ததால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வந்தன. இந்நிலையில் அளவுக்கு அதிகமாகப் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இருப்பினும் போதிய வாய்க்கால் அமைக்கப்படாதது, குளங்கள் கவர்வு(ஆக்கிரமிப்பு), குளத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்கள் இவற்றால் நீர்அதிக…

தேவதானப்பட்டியில் நீதிமன்ற வில்லையைப் பிய்த்து விற்போர்…

  தேவதானப்பட்டப் பகுதியில்    நீதிமன்றக்கட்டண வில்லையை விற்பனை செய்யும் ஊழியர்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பபடும் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுப்பும் மனுக்கள் முதலானவற்றில் ஒட்டப்படும் நீதிமன்றக்கட்டண வில்லைகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள, ஊராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் போன்ற வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு மனுக்கள் செய்தால் 2 உரூபாய் மதிப்புள்ள நீதிமன்றக் கட்டண அஞ்சல்தலையும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுக்கொடுத்தால் 10 உரூபாய்க்கான நீதிமன்றக் கட்டண அஞ்சல் தலையும் ஒட்டப்படவேண்டும்.  …

கல்வியாற்றுரைக் கருத்தரங்கு – இந்து

‘தி இந்து’ – மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி வைகாசி 10 / மே 24  நடைபெறுகிறது   + 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே இந்து இதழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும்…

கணிணித்தமிழ் – இணைய இதழ் : அறிமுகம்

  தமிழ்க்கணிமை சார்ந்த ஆராய்ச்சிகள் பலகாலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல கட்டற்ற மென்பொருட்களும், தனியுரிம மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.   பல்வேறு கணிணி அறிஞர்கள், பல்வேறு கணிணி மொழிகளில் தமிழுக்காக நிரலாக்கம் செய்து வருகின்றனர். பல்வேறு தமிழ் அறிஞர்களும் பல வகையில் பங்களித்து வருகின்றனர்.   இந்த முயற்சிகள் அனைத்தையும் இணைக்கும் பாலமே இந்த இணைய இதழ். இங்கு நீங்களும் பங்களிக்கலாம். நீங்கள் பங்களிக்கும் தமிழ்க் கணிமை சார்ந்த திட்டங்கள், உரையாடல்கள், கருத்துகளை இங்கே பகிரலாம்.   எவ்வாறு பங்களிக்கலாம்?…

இனப்படுகொலை – ஆவணப்படம் வெளியீடு

அன்பார்ந்த தோழர்களே , உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் “இது,திட்டமிட்ட இனப்படுகொலை!” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனச்சான்றை உலுக்கும் வகையில் இயக்குநர்.வ.கவுதமன் அவர்களின் “இது, இனப்படுகொலையா இல்லையா?” எனும் நெருப்புப் படைப்பு சித்திரை 30, 2046, மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (ஆர்.கே.வி.படநிலையம், வடபழனி, சென்னை) வெளியாக உள்ளது….

ஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள்

ஆசிரியர்: என். சொக்கன், பெங்களூரு மின்வரி: nchokkan@gmail.com தளம் : http://nchokkan.wordpress.com வெளியீடு: இலவய மின்தமிழ்நூல்கள் [ FreeTamilEbooks.com ]  புத்தக எண் – 165 உரிமை – எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அனைத்துவகைக் கணிணி,கைப்பேசிகளில் கட்டணமின்றிப் பதிவிறக்கலாம். மின்னூலாக்கம் : சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com        

தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி

தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி “தமிழ் இந்நாட்டு மொழியே; ஆரியம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலை நாட்டுவதற்கு ‘நன்னெறி முருகன்’ என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சுனித்குமார் சாட்டர்சி இயற்றியுள்ள “வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது. – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,   பழந்தமிழ்

காலப்பொறி படைத்தவர் தமிழரே!

காலப்பொறி படைத்தவர் தமிழரே!   “யாண்டும், மதியும், நாளும், கடிகையும்” எனவரும் சிலப்பதிகார அடிகளால் நாழிகையை அளவிடும் கருவி ‘கடிகை’ என அழைக்கப்பட்டதை அறியலாம். இக்கடிகை ‘ஆரம்’ போல் கழுத்தில் அணியப்பட்ட செய்தி “கடிகை ஆரம் கழுத்தில் மின்ன” என்னும் பெருங்கதை வரியால் அறியப்படுகிறது. இக்கடிகை ஆரமே இப்பொழுது கடிகாரம் எனப்படுகிறது.  மேலும், ‘கன்னல்’ என்னும் கருவி மூலம் நேரம் கணக்கிடப்பட்டதை முல்லைப்பாட்டின் மூலம் அறியலாம். நமது நாழிகை வட்டில் பிற நாட்டவராலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுதைய, ஒன்றரை மணி நேர அளவுகொண்ட முழுத்தம் என்பதே…

ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே !

ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே!   பழமையான நாகரிகச் சின்னங்கள் கிடைத்த இடங்களில் சிந்துவெளிக்கரையில் அமைந்துள்ள “ஆரப்பா’ “மொகஞ்சதாரோ’ ஆகியன குறிப்பிடத்தக்கன. இங்குக் கிடைத்த பானை ஓடுகள், முத்திரைகள் ஆகியவற்றில் நட்சத்திரக் குறியீடுகளும், கோள்களின் குறியீடுகளும் காணப்படுகின்றன.   தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுகமாகப் பண்டைய காலத்தில் திகழ்ந்த கொற்கையை இப்போது ஆராய்ந்த போது இங்குக் கிடைத்த பல பானை ஓடுகளில் நட்சத்திரக் குறியீடுகளைப் போலவே கொற்கையில் கிடைத்த குறியீடுகளிலும் காணப்படுகுன்றன. கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்க ஆறுமீன்கள் குறியீடாகக் காணப்படுகின்றன. செவ்வாய்க் கோளைக்…

சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள்

சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள் பச்சை மரத்தில் கூரிய கற்களைக் கொண்டு சாலை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதைத் தமிழர்கள் பொறித்து வைத்திருந்தனர். வழிப்போக்கர்களுக்கு உதவியாக எழுதப்பட்டவற்றைச் சாதாரண மக்களும் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது புலனாகும். “செல்லும் தேஎத்துப் பெயருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த“ – மலைபடு கடாம்