சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்

    புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி   தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர்…

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள்

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் தேவதானப்பட்டி பகுதியில் சிற்றூர் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் செயல்படாமல்பூட்டியபடியே கிடக்கின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இச்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் உள்ளனர். இச்சங்கம் திறக்கப்படாமல் இருக்கும்பொழுதே சம்பளம் எடுத்துக்கொள்கின்றனர். இவைதவிரப் போலி ஆவணம் தயார் செய்து அரசுப்பணத்தை மோசடி செய்கின்றனர். மேலும் சங்கத்திற்கு வருகின்ற ஐம்பதாயிரத்தைச் செயலாளர் இசைவில்லாமல் கணக்காளர் மற்றும் தலைவர்கள் இணைந்து பணத்தை எடுத்துப் போலி ஆவணம் தயார் செய்து அரசிற்குக் கணக்கு காட்டி…

தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்

தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்   தேனி மாவட்டத்தில் திறந்த வெளி சாலையோரக் கிணறுகளால் பேரிடர் ஏற்படும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இப்பொழுது கிணறுகளில் நீர் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கிணறுகள் சாலையோரத்தில் திரும்பும் இடத்தில் அமைந்துள்ளன.   இருசக்கர வாகனங்கள், மிதியூர்திகள்(ஆட்டோக்கள்), சீருந்துகள், போன்றவை இப்பகுதியில் நாள்தோறும் கடந்து செல்கின்றன. இவ்வாறுள்ள சாலையோரக்கிணறுகளினால் இவ்வாறு கடந்து செல்வோர் தவறி  விழுந்து பலர்…

ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்

மொழியையும், வரலாற்றையும் அழித்துவிட்டால் இனத்தை அழித்துவிடலாம். ஈராயிரம் வருடங்களாகத் தமிழினம் சந்தித்துவரும் அவலம் இது. தமிழனின் கல்வெட்டு என் அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது? பழங்கால ஓலைச்சுவடி ஏன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை? மொழித் திணிப்பு ஏன் செய்யப்படுகிறது? எழுத்துரு கலப்பு செய்யத் துடிப்பது ஏன்? நம் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளையெல்லாம் வெளியிடாமல் தடுக்கும் சக்தி எது? இன்று நம் முன்னே நிற்கும் கேள்விகள் பல… இன்று நம் முன் இருக்கும் முதன்மையான கேள்வி மொழியறிஞர்களையும், வரலாற்று அறிஞர் பெருமக்களையும் நாம் கொண்டாடுகிறோமா? நாம் யாரையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்…

மந்தை இல்லை! திருமணமும் இல்லை! – வைகை அனிசு

தேனிப் பகுதியில் மந்தை இல்லாமல் தடைப்படும் திருமணங்கள்   தேனிமாவட்டம் அருகே உள்ள கதிரப்பன்பட்டி, தண்ணீர்ப்பந்தல், அ.வாடிப்பட்டி, கோட்டார்பட்டி முதலான சில சிற்றூர்களில் இன்றும் பழமை மாறாமல் ஊர்மந்தையில் வைத்து திருமணங்கள் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.   தற்பொழுது மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப மந்தைகள் பிற பயன்பாடுகளுக்கு வலிந்து உள்ளாக்கப்பட்டமையினாலும் மந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையாலும் திருமணங்கள் தடைப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.  எந்தச் சமூகமாக இருந்தாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்றளவும் உள்ளது. வசதிபடைத்தவர்கள் திருமணம், மண்டபத்தில் நடத்தினாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்று வரை…

நாட்டாண்மைக்கல் – வைகை அனிசு

தேனிமாவட்டத்தில் பாதுகாக்கப்படும் நாட்டாண்மைக்கல்   தேனிமாவட்டத்தில் பகுதியில் நாட்டாண்மைக்கல் இன்றும் சில சிற்றூர்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.   பண்டைய காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஓர் ஊரில் கிணறு, குளம், ஆலமரம், கோயில் போன்ற அடையாளங்கள் இருக்கும். இவ்வாறு ஆலமரம் அல்லது அரசமரத்தின் கீழ் ஒரு கல்வைக்கப்பட்டிருக்கும். அந்தக்கல்லில் அந்த ஊரில் குடும்பத்தகராறு, வாய்க்கால் வரப்புகள் தகராறு, திருமணத்தகராறு, பாகப்பிரிவினை முதலான அனைத்திற்கும் ஊர் நாட்டாண்மையிடம் அப்பகுதி மக்கள் முறையிடுவார்கள். முறையிட்ட பின்பு குறிப்பிட்ட நாள் குறித்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று…

தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்

தேனிப் பகுதியில் பேணுகையின்றி இயங்கும் அரசுப்பேருந்துகள்   தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.   சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய…

தேனிச்சந்தையில் எடைமோசடி

தேனிப்பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்   தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   தேவதானப்பட்டி வாரச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும். இதனையொட்டி எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், புல்லக்காபட்டி, மஞ்சளாறு அணை, காமக்காபட்டி முதலான பல ஊர்களில் இருந்து தங்களுடைய வாரத்தேவைகளுக்கான காய்கறிகள், பருப்புவகைகள், கிழங்கு வகைகள், ஒன்பான்கூலங்களை(நவதானியங்களை) வாங்கிச்செல்வார்கள்.   வாரச்சந்தைக்கு கொடைக்கானல், வத்தலக்குண்டு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பாளையம் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான காய்கறி வணிகர்கள் வருகை…

14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

  மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.   ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…

தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன அரசுத்துறை அலுவலகங்கள்

  தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன அரசுத்துறை அலுவலகங்கள் தேனிமாவட்டத்தில் கடந்த ஒரு திங்களுக்கும் மேலாக அரசு அலுவலகங்கள் முடங்கிப்போனதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தேவதானப்பட்டி பகுதியில் உள்ள வருவாய்த்துறை, ஊர் நிருவாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை என அனைத்து அலுவலகங்களிலும் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தீபாவளியை ஒட்டி அரசு விடுமுறைகள் வாரத்தில் இடையில் வந்ததால் அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக விடுமுறைபோட்டுவிட்டுத் தங்கள் சொந்தப் பணிக்குச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் தீபாவளி முடிந்த பின்னரும் மொகரம் முதலான பல…