திருவண்ணாமலையில் ஆசிரியையின் முயற்சியால் அரசுப் பள்ளிக் கட்டடம்

   திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது துளுவபுட்பகிரி என்னும் சிற்றூர். வானம் பார்த்த பூமி. இச்சிற்றூரில் உள்ள பள்ளியானது கல்நார் (Asbestos) ஓட்டினால் ஆன கட்டடம். அந்த பள்ளி 1952 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளமாகிவிடும்; வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் வெப்பம் தகிக்கும். இருப்பினும் இவற்றையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாகப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றி வரும்…

தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடி

  தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் கடன் அட்டை முதலான   பணப்பொறி அட்டைகளின்  எண்களைத் தெரிந்து கொண்டு தொடர்புடையவர்களிடம்   மேலாளர் பேசுகிறேன் எனக்கூறி இரண்டாண்டுக்கு மேலானதால்   பணப்பொறியட்டை செயலிழந்து விட்டது என்றும் கடவுச்சொல்லை மாற்றினால் அதை நீக்கிச் செயல்பட வைக்கலாம் என்றும் கூறி கடவுச்சொல்லைப் பெற்றுப் பணத்தை எடுத்துவிடுகின்றனர்.   இதற்காக 9600367557 என்ற எண்ணில் இருந்து அழைக்கின்றனர்.அதன்பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இந்தி மற்றும் மலையாளம் கலந்த மொழியில் பேசுகின்றனர்….

திருவரங்கம் வாக்காளர்களை ‘மக்கள் நல்வாழ்வு இணையம்’ அழைக்கிறது

  நேர்மையும் நாட்டுப்பற்றும் மிக்க நண்பர்களே! வணக்கம்   இந்திய/தமிழக அரசியலில் நேர்மைக்கு இடமளிக்க வேண்டிய தருணமிது .இதில் நாம் தவறுவோமானால் எதிர் காலப் பரம்பரையினர்க்கு நேர்மை என்ற சொல்லே தெரியாமல் அழிந்துவிடும் .நமது இன்றைய அரசியல்வாதிகள் வெள்ளைக்காரர்களே வெட்கப்படும்படி எந்த அளவுக்கு நாட்டைச் சுரண்டி வருகிறார்கள் என்பதை நாடே அறியும் . அவர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டியது இரண்டாவது விடுதலைப்போராட்டத்துக்கு ஒப்பானது .இதற்கு ஒரு காந்தி பிறக்க மாட்டார்;- நாம் தான் செய்யவேண்டும்.   இதை உணர்ந்த ஊழலை எதிர்க்கும் நேர்மையாளர்களின் கூட்டமைப்பு…

திருவரங்கம்: அ.தி.மு.க.விற்கு ஆதரவு – ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு

திருவரங்கம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு   திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு ஓய்வுஆசிரியர் சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறையில் மடிகணிணி முதற்கொண்ட 14 வகை சலுகைகளை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. திருச்சியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிப் பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்;தலைவர் திருமலைச்சாமி,…

திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை

 திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கித் துண்டறிக்கைகளைத் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்   ஆர்.பார்த்திபன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், தேனிமாவட்ட அம்மா பேரவைச் செயலர் வரதன், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர், பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, அப்துல்கபார்கான் முதலான பலர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து…

திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்

    திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…

திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்

    திருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர்.     செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர்.     தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில்…

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு…

எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சிப் பேரிடர்!

வைகை அணைப்பகுதிச் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை வரை செல்லும் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாமல் வேலைகள் நடைபெறுவதால் நேர்ச்சிகள் நிகழும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம், வைகை அணை, முதலக்கம்பட்டி பகுதிகளில் சாலைகள் வேலை பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன.   வைகை அணைப்பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணியும், எருமலைநாயக்கன்பட்டி, செயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே…

நூலகம் இல்லாத திட்டச்சேரிப் பேரூராட்சி

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் நூலகம் இல்லாததால் அப்பகுதியில் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் படிப்பதற்காகத் தொலைவிடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர்.   ஏறத்தாழ 10,000 மக்கள் தொகை கொண்ட திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நூலகம் இருந்தது. நூலகக் கட்டடம் பாழடைந்ததால் நூலகம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் நூலகம் அமைக்கவேண்டும் எனவும் அதற்காக வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் காண்பித்தும் இதுநாள் வரை நூலகம் கட்டப் பேரூராட்சி முன்வரவில்லை.   திட்டச்சேரிப் பேரூராட்சியில் உள்ள ஏராளமான கவிஞர்கள், இலக்கியவாதிகள்,…

ஊர்விலக்கம் – வைகை அனிசு

ஊர்விலக்கம்   தமிழகத்தில் சாதிவிலக்கம் அல்லது ஊர் விலக்கம் என்று சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இலைமறைகாயாக இருந்து வருகிறது. சாதிவிலக்கம் ஒவ்வொரு சமூகத்திலும் அல்லது ஒவ்வொரு சாதியிலும் அல்லது ஒவ்வொரு மதத்திலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடைபெறுகிறது. சாதிவிலக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் இன்றும் பல ஊர்களில் உள்ளனர். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் யாரும் பேசக்கூடாது வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாது தண்ணீர் வாங்கிக் குடிக்க கூடாது எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது எந்த விழாக்களிலும் பங்குபெறக்கூடாது…

ஆட்சியருக்குப் பாதி-மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியருக்குப் பாதி!!!??? மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறும் சம்பந்தம் என்பவர் 94981-65053 என்ற அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு  இடர்ப்பாட்டில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரூ.2 இலட்சம் வாங்குவதும், தரமறுப்பவர்களை மிரட்டுவதும் என மோசடி செய்து வாழ்ந்து வருகிறார்.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் மணக்கொடை(வரதட்சணை) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 5 அல்லது 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 அல்லது 3…