14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

  மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.   ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…

தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன அரசுத்துறை அலுவலகங்கள்

  தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன அரசுத்துறை அலுவலகங்கள் தேனிமாவட்டத்தில் கடந்த ஒரு திங்களுக்கும் மேலாக அரசு அலுவலகங்கள் முடங்கிப்போனதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தேவதானப்பட்டி பகுதியில் உள்ள வருவாய்த்துறை, ஊர் நிருவாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை என அனைத்து அலுவலகங்களிலும் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தீபாவளியை ஒட்டி அரசு விடுமுறைகள் வாரத்தில் இடையில் வந்ததால் அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக விடுமுறைபோட்டுவிட்டுத் தங்கள் சொந்தப் பணிக்குச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் தீபாவளி முடிந்த பின்னரும் மொகரம் முதலான பல…

எலிவால் அருவியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

  தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதனைக்காணும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறையிலிருந்து இந்த அருவியின் இயற்கைத்தோற்றத்தை கண்டு களிக்கலாம். தென்னிந்தியாவிலேயே மிக உயரமான அருவி இந்த எலிவால் அருவி. மூன்று ஆறுகளும் சங்கமித்துத் தலையாறு அருவியாக மஞ்சளாறு அணையை நோக்கிப்பாய்கிறது. இந்த அருவி உயரமாக இருப்பதால் தண்ணீர் விழும் தொலைவில் இருந்து ஏறத்தாழ 5   புதுக்கல் தொலைவு வரை அதன் சாரல் விழுந்து கொண்டே இருக்கிறது. மேலும் தண்ணீர்…

தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை – தற்கொலை அவலம்

  தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை-பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்யும் அவலம் தேனிமாவட்டத்தில் கந்துவட்டிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேவதானப்பட்டி வேளாண்மை செழித்த பூமியாகும். மேலும் இதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், கெங்குவார்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளும் வேளாண்மை நிறைந்த பூமியாகும். இப்பகுதியில் வாழை, நெல், தென்னை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களை உழவர்கள் பயிரிட்டு வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய மழையில்லாததால் சோலைவனமாக இருந்த இப்பகுதி பாலைவனமாக மாறியது. இதனால் உழவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கடன்கள் வாங்கியும் தங்கள் நகைகளை அடமானம் வைத்தும் உழவுத்தொழில் பார்த்து…

தேனிப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் மருமக்காய்ச்சல்-பொதுமக்கள் பீதி

  தேனிமாவட்டத்தில் பரவி வரும் மருமக்காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் மருமக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை இக்காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இக்காய்ச்சல் வந்தவுடன் கண்களில் இருந்து நீர் வருதல், கை, கால்கள் சோர்வடைதல், உணவு உண்ணாமை போன்ற உடற்கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் இக்காய்ச்சல் ஏறத்தாழ 10 நாள்வரை நோய்தாக்கியவர்களைத் தாக்குகிறது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வருவதால் அண்மையில் உள்ளவர்களுக்கும் இந்தத் தொற்றுநோய் பரவுகிறது. தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்…

ஈழத்தமிழர் விடுதலைக்காகக் காலவரையற்ற உண்ணாநோன்புப்போர்

  திருச்சி சிறப்பு முகாமில் 26 ஈழத்தமிழர் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் புரட்டாசி 29, 2045 – 15.11.2014 காலை 10மணிக்குத் தொடங்கியது. ஈழ ஆதரவாளர்களின் ஆதரவை விரும்புகின்றோம்

இதழாளர் மாநில மாநாடு , 2014

  இதழுலுலக வரலாற்றில் இடம் பெற்ற முதல் மாநில மாநாடு அனைத்து இதழியல் தோழர்களே..! ஊடக நண்பர்களே..!! தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிருவாகிகளே…!!! ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தைத் தாங்கி நிற்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களே.! அனைவருக்கும் தமிழ்நாடு இதழாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக நெஞ்சார வாழ்த்துகளையும், மனம் மகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். வரலாற்றில் ஒரு புதுக் கல்லாக நாம் நமது 14- ஆவது மாநில மாநாட்டை இதழ் உலக ஏட்டில் பதிவு செய்துள்ளோம். மறைந்த தோழர்…

மழையால் சேதமடைந்த சாலைகள்

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தல்   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.   தேவதானப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு வரை செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து காமக்காபட்டி செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்கின்ற சாலையும் சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.   மேலும் சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் கடையில் மழைத்தண்ணீர் தெளிக்கக்கூடாது என்பதற்காகச் சாலைகளில் கற்களை வைத்துவிடுகின்றனர். இதனால்…

தேனி மாவட்டத்தில் புத்துயிர் பெறுமா வெல்லம் உற்பத்தித் தொழில்?

  தேனி மாவட்டத்தில் வெல்ல உற்பத்தித் தொழில் நலிவடைந்துள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், மஞ்சளாறு அணைப்பகுதிகளில் கரும்புகளில் இருந்து வெல்ல உற்பத்தித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. உழவர்கள் தங்கள் தோட்டத்தில் வெல்லம் உருவாக்கத்தேவையான குடிசைகள், கலன்கள், அடுப்புகள் போன்றவற்றை அமைத்து அதற்கு ஆட்களையும் வைத்திருப்பார்கள். கரும்பு முற்றியவுடன் கரும்புகளை ஆட்டிக் கொதிகலன்களில் சூடாக்கி வெல்லம் உற்பத்தி செய்வார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வெல்லம் தமிழகம் முழுமைக்கும் பிறமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்திருந்தனர்.  …

புதியபார்வை – இலக்குவனார் சிறப்பிதழ்

  புதியபார்வை நவம்பர் 16-30 இதழ் இலக்குவனார் சிறப்பிதழாக வெளிவருகிறது. ஆசிரியர் : முனைவர் ம.நடராசன் அஞ்சல்பெட்டி எண் 1069 189, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 பேசி : 044 24997401 / 24980176 மின்வரி :puthiyaparvai@gmail.com வலைத்தளம் : www.puthiyaparvai.com