“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்! “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், வரும் புரட்டாசி 25, 2053/ 12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை , தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022- அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறுகிறார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
இந்திய மக்கள் முன்னணி(P.F.I.) தடை நீக்கக் கோரிப் போராட்டம்
புரட்டாசி 21, 2053 /8.10.2022 சனி மாலை 4.00 வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம் பாக்கம், சென்னை
பண்ணிசை விழா 2022, வட அமெரிக்காவில் இணைய வழியில்
புரட்டாசி 21, 2053 / 08.10.2022 தலைமையுரை: தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்
தமிழ்க்காப்புக்கழகம்:ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௧ – 441) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: புரட்டாசி 22, 2053 ஞாயிறு 09.10.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: மழலையர் நரம்பியல் மருத்துவ வல்லுநர் மரு.முனைவர் ஒளவை மெய்கண்டான் குத்தூசி மருத்துவ வல்லுநர் பேரா.முத்துக்குமார் சித்த மருத்துவ வல்லுநர் மரு.அசித்தர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode:…
தமிழ்நாடு இனி-காந்தியும் அம்பேத்கரும் : தோழர் தியாகு
புரட்டாசி 18, 2053 ஞாயிறு 05.10.2022 இரவு 7.00 கூட்ட எண் : 8641368094 கடவு எண் : 12345
பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா – விவேகானந்தன் ஆர்.
தான் வந்த வழியை நினைத்துப் பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா முகநூலில் பகிரப்பட்ட நரிக்குறவர் சமூத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை கோரா நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். மூல எழுத்தர் திரு. அ.சேக்காதர் இப்ராகீம் அவர்களுக்கு நன்றி. பதிவு பெரிது, அதைவிடப் பயணமும் பெரிது, தான் பிறந்த சமூகத்திற்கு முன்மாதிரியான நிகழ்வு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இனத்தோடு ஊர்விட்டு ஊர் நகர்ந்து கொண்டே இருப்பவர்கள்தான் நரிக்குறவர்கள். இவர்களில் சுவேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது…
எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு
எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அட்டோபர் 2 அன்று சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிசா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராசன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில், சிறுவர் இலக்கியப் படைப்பிலக்கியங்களை கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மு.முருகேசின் பங்களிப்பைப் பாராட்டி, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருட்டிண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார். வந்தவாசி நூலக…
புதுதில்லியில் தமிழக இளைஞருக்குச் ‘சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர்’ விருது
“ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது புதுதில்லியில் “உலகளாவிய பேரரசு நிகழ்வுகள்(Global Empire Events)” என்ற அமைப்பின் சார்பில் “ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அசன் முகம்மதுவுக்குச் “சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசியக் கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணிக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களைச் சேர்ந்த முப்பத்து எண்மரில் சிறந்த ஒருவராக அசன் முகம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த…
அரசியல் வகுப்பு 97, தோழர் தியாகு
புரட்டாசி 11, 2053 புதன் 28.09.2022 இரவு 7.00 தமிழ்நாடு இனி – தோழர் தியாகு இணைய வழிக் கூட்டம்
தருமபுரம் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா
இசைப் பேரறிஞர் திருமுறைக் கலாநிதி அரசவைக் கலைஞர் தருமபுரம் ப.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா புரட்டாசி 20-22, வெள்ளி, சனி, ஞாயிறு, 2053 / 07, 08,09.10.2022 நல்வாழ்வு திருமண மண்டபம், இராயப்பேட்டை, சென்னை 14
ஐ.நா.தீர்மானம் – இந்தியா செய்ய வேண்டியது? – தோழர்கள் தியாகு, செந்தில்
–தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
திராவிடப்பள்ளி மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா
ஆவணி 31, 2053 வெள்ளி 16.09.2022 மாலை 6.30 முதல் இரவு 9.00 வரை முத்தமிழ்ப்பேரவை, அடையாறு, சென்னை 600 020
