வேளாண் வாழ்வியல் பயிற்சி

07.06.2045 / 21-6-14 அன்று “செம்மை வனத்தில்” வேளாண் வாழ்வியல் பயிற்சி நடைபெற்றது. செம்மை வன ஒருங்கிணைப்பாளர், மரபுவழி மருத்துவர் ம.செந்தமிழன்பயிற்சி அளித்தார். இயற்கை வழிவேளாண்மை என்றால் என்ன? , வேளாண் வாழ்வியல் கோட்பாடுகள், வாழ்வியல் அறம், ஒருங்கிணைந்த பண்ணையம், கருத்து பகிர்வு உரையாடல், பண்ணை வடிவமைப்புமுறை, செம்மை வலம்வருதல், இயற்கையோடு இணைந்திருத்தல், சந்தைப்படுத்துதல் எனப் பயிற்சி நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியன. இப்பயிற்சியில் எனக்கு அறம் சார்ந்த வாழ்வியலுக்கான ஒரு வடிவம் கிடைத்தது.அதற்கான தத்துவம், கோட்பாடுகள் என என் எண்ணங்களை நெறி செய்து கொண்டதில்பெரும்…

“தமிழ்படிப்போம்” நூல் வெளியீட்டு விழா:

ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்ற “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா: புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைப் பிள்ளைகள் விரும்பும் வகையில் எளியமுறையில் எப்படிக் கற்பிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா வைகாசி 30, 2045 /13-06-2014 அன்று ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்றது. விழாவிற்கு வாழ்நாட்பேராசிரியர் சண்முகதாசுஅவர்கள் தலைமை தாங்கினார். சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் தொடக்கவுரைநிகழ்த்தினார். பேராசிரியர் சந்திரகாந்தன், பேராசிரியர்இ.பாலசுந்தரம், விரிவுரையாளரான திருமதி செல்வம் சிறிதாசு, கவிஞர் கந்தவனம்பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் திருமதி….

“தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு – செந்தமிழினி பிரபாகரன்

ஆனி 6, 2045 /சூன் 20, 2014 அன்று கனடா மண்ணில் வெளிவரும் வண்ண அட்டை இதழான “தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் குழுமிய ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்த இந்த நிகழ்வுக்கு இங்குள்ள தனியார் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பிறர் போலன்றி அழகு தமிழ்ப் பெயராக “தமிழ் மழை” எனப் பெயர் வைத்தமைக்கும் நிகழ்வை முற்று முழுதாக தமிழ் மணம் கமழும் வண்ணம் சிறப்புற வடிவமைத்தமைக்கும் இதழாசிரியர் சிவாவுக்கும் நிருவாக ஆசிரியர் மோகனுக்கும்…

மெய்யப்பனார் பிறந்தநாள்விழா

மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ஆனி 07, 2045 / 21/6/14 அன்று சென்னையில் தினமணி விழா உட்பட ஐந்து பெரும்விழாக்கள்.எனினும் மெய்யப்பனார் அன்பர்கள் திரளாக வந்து விழாவைச்சிறப்பித்தனர்.(முன்னால் சிலம்பொலியார் பின்னால் ஆத்திரேலியா அன்பர்சிரீகந்ததாசா நெல்லைசு.முத்து, உதயைமு.வீரையன், முனைவர் அறவாணன், எழுகதிர்அரு.கோ.எனப் பல சான்றோர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) தரவு: …

நாணல் நண்பர்களின் 3ஆவது ‘நம்ம வரலாறு’

நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3ஆவது ‘நம்ம வரலாறு’ நிகழ்வு கடந்த ஆனி 1. 2045 / 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீசுவரன் கோவிலில் நடந்தது. இம்முறை ‘நம்ம வரலாறு’ நிகழ்வில் “நாட்டார் தெய்வங்கள்” குறித்துஎடுத்துரைக்கபட்டது. நம்ம வரலாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக்கு, திரு சே.சிரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டி முனீசுவரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேசத் தேர்வு செய்ததில் இருந்தே புரிந்து…

முனைவர் நா.இளங்கோவுக்குப் பாவேந்தர் விருது.

புதுச்சேரி, சங்கரதாசு சுவாமிகள் இயல் இசை நாடகசபாவின் 174 ஆவது மனோன்மணீய நாடக வைர – பொன் விழாவில் ( ஆனி 1, 2045 / 15-06-2014) புதுச்சேரி பட்ட மேற்படிப்பு மைய இணைப் பேராசிரியரான முனைவர் நா.இளங்கோ அவர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. விருதளிப்பு மேனாள் நீதிபதி சேது.முருகபூபதி. உடன் பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு.

மெய்வல்லுநர் போட்டி 2014

மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும்…

புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் 200 ஆம் ஆண்டுத் தொடக்க விழா

தமிழகத்தில் தமிழில் மிக மிக மிகுதியான பாடல்களை இயற்றிவர் எனும் பெருமை உடையவர் சிலரில் ஒருவர், உ வே சா அவர்களின் குருவாக விளங்கியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பல தல புராணங்கள் பற்பல பிரபந்த வகைகள் ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் சீட்டுக்கவிகள் என பன்னூராயிரம் பாடல்களை இயற்றியவர் எனலாம் அவர்தம் 200 ஆம் ஆண்டு தொடக்க விழா.சென்னை பல்கலைக்கழகம் ஏற்று நடத்தியது. சென்னை கடற்கரை ஓரம் அமைந்த தமிழ்த்துறை சார்ந்த அரங்கில் வைகாசி…

வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா

குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 13-06-2014 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் செம்மொழி விழா அரங்கில் மிகச்சிறப்பாக தமி்ழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.   (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)   விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, முனைவர் அரவணைப்பு திரு. இளங்கோவன், முனைவர் திரு. பால் மனுவேல், பொறியாளர் திரு சாந்தகுமார், தமிழ் உணர்வாளர் திரு.தயாளன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர். விழாவில் முத்தாய்ப்பாக இயற்கை முறை மருத்துவம் பற்றி…

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முப்பெரு விழா!

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124 ஆவது பிறந்தநாள் விழா, உழைப்பாளர் நாள் விழா ஆகிய முப்பெரு விழா தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால், இராயப்பேட்டை, ஔவை சண்முகம்சாலை பெரியார் சிலை அருகில்   வைகாசி 31, 2045 / 14.06.2014 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. த.பெ.தி.க. சட்டத்துறைச் செயலர் திரு வை. இளங்கோவன், தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வீரக்கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது….

செருமனியில் தமிழ் எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்!

  செருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு (International Zentrum – Flachs Markt– 15. 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த) பன்னாட்டு மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா தான்லி, திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்றத் தொடங்கியது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்…

“அர்ச்சனைமலர்கள்” கவிதை நூல்வெளியீட்டு விழா –செருமனி

செருமனிவாழ் எழுத்தாளர் திருமதி. செயா நடேசன் அவர்களால் எழுதப்பட்ட ‘அர்ச்சனைமலர்கள்’ கவிதை நூல் வெயியீட்டுவிழாவும், இலண்டன் தமிழ் வானொலியின் 127ஆவது பொன்மாலைப் பொழுது நிகழ்வும் ஒரே மேடையில் இரு நிகழ்வுகளாகச் சிறப்புடன் நடந்தேறின. செந்தமிழின் இனிமையும் பெருமையும் என்றும் மண்ணோடு மண்டியிட்டுக்கிடந்து மணம் வீசும் தமிழ் மலர்களை உருவாக்கும் பைந்தமிழ்ப்பாசறையாம் நெடுந்தீவு மாமண்ணில் பிறந்து பார் முழுவதும் புகழ் மணம் கமழும் அறிவுசார் குடும்ப வரலாற்றின் சாதனைப்பெண்ணாய், தெள்ளுதமிழ் பெருக்கெடுக்க அள்ள அள்ளக்குறையாத ஆச்சரியத்திறமைக்களஞ்சியம் திருமதி.செயபாக்கியம் யூட் நடேசன்(ஜெயா நடேசன்) அவர்களின் அன்பு நினைவலைகளை…