தனித்தமிழ் இயக்கம் நடத்திய இலக்கிய விருந்தரங்கம்

ஆனி 17, 2045 / 1.7.2014 செவ்வாய் மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இலக்கிய விருந்தரங்கம் நடைபெற்றது. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அவ்விழாவுக்கு ஆசிரியர் சோ.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். த. தமிழ்த்தென்றல் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுமி சா.கலைமதி நடன மாடினார். த.தமிழ்நேயன் சிறுவர் பாடல்கள் பாடினார். புலவர் சிவ.இளங்கோவன்,புலவர் இ.பட்டாபிராமன் ஆகியோர் இலக்கியச்சுவைபற்றிப் பேசினர். சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் தனித்தமிழ் அறிஞர் க.தமிழமல்லன் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாவரங்கில் பாவலர்கள் தேவகிஆனந்து,…

பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு

  – தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013   கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா:     “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது.   “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை:  இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…

தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014

பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014   ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது;   தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…

பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள்

  தமிழர் பண்பாட்டுக் கழகம், முன்சன்-யேர்மனி தியாகி பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள் யேர்மன் தேசியக்கொடி, தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன்தொடங்கியது.உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டப் போட்டிகளில் நியூரென்பர்கு, ஆலென், மூன்சென்(Nürenburg, Alen, München) நகரங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியில்தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினார்கள். பார்வையாளர்களின் ஆரவாரமான ஊக்கமும், உற்சாகமும் விளையாட்டு வீரர்களை மேலும்சிறப்பாக ஆடவைத்ததால், அவர்கள் வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இறுதியில்பரிசளிப்பில் முன்சன்-தமிழாலய நிருவாகி, ஆசிரியைகள், தமிழர் பண்பாட்டுக்கழகத்தவர்கள் வெற்றி வீரர்களுக்கு, பதக்கங்கள், கிண்ணங்களை வழங்கிமதிப்பளிப்பு செய்தார்கள் இவ்வண்ணம் நிகழ்வுகள் இனிதே…

ப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.   தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திர ஒன்றிய திராவிடர் விடுதலைக்கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழாஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அழகியநாயகிபுரத்தில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழக, சேதுபாவாசத்திர ஒன்றியச் செயவலர் சீனிகண்ணன் வரவேற்புரையாற்றினார். அறிவுலக ஆசான் தந்தை…

குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

குடந்தை மலையாள ஆலூக்காசு வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை! முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளுக்கு   எதிரடி கொடுக்கும்வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் (கார்த்திகை, 2045 /07-11-2011 அன்று) நடைபெற்ற மலையாள நிறுவனம் சோசு ஆலுக்காசு மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச்…

இராணிப்பேட்டையில் வினைதீர்த்தான் நிகழ்த்திய பயிலரங்கம்

இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வைகாசி 23, 2045 / 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தப்பெற்றது. தன்னார்வப் பணியில் பெரிதும்ஆர்வம் மிக்க வினைதீர்த்தான் இப்பயிலரங்கத்தை நிகழ்த்தினார். மாணாக்கர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் ஏற்படுத்துவதில் பேரார்வம் மிக்க, தலைமை ஆசிரியை திருமதி சந்தானம்   பயிலரங்கத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் ஒருங்கிணைத்தார். உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக…

தமிழ்க் கனடியருக்காக அமெரிக்கக் கருத்தரங்கு

கனடியத் தமிழர் பேரவை ஏற்பாட்டில் தமிழ்க் கனடியருக்காக அமெரிக்கா நடத்திய கருத்தரங்கு: அமெரிக்காவில் கல்வி கற்றல், வணிகம், முதலீடு செய்தல், பயணம் – வேலைக்கான  புகுவுச்சீட்டு பெறுதல் தொடர்பாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் கனடியத் தமிழருக்காய் கருத்தரங்கொன்றை (ஆனி 2045 / சூன் 2014) நடத்தியது. கனடியத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாகக் கனடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய கருத்தரங்கு மிகவும் பயனுள்ள பல தகவல்களை பங்கேற்றோருக்கு வழங்கியது. மண்டபம் நிறைந்த பங்கேற்பாளரோடு ‘மார்க்கம் கொண்வென்சன்  நடுவத்தில்’ இடம்பெற்ற கருத்தரங்கில் அரசியல் – பொருளாதாரம்,…

சென்னையில் வாசு.அரங்கநாதன் ஆற்றிய திருமந்திர உரை

பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் உத்தமம் என்னும் தகவல்தொழில்நுட்ப மன்றத்தின் தலைவராக உள்ளார். இதன் சார்பில் புதுச்சேரியில் வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வந்த இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் திருமந்திரத்தின் மொழிநடைகுறித்துச் சிறப்புரை ஆற்றினார். சிக்கலான தலைப்பைச்சிறப்பான முறையில் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் விளக்கியதாக வந்திருந்தோர் பாராட்டினர். செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்

சென்னைக் கம்பன் கழகத்தில் ‘கலம்பகம்’ உரை

     சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் ”கலம்பகம்”என்னும் தலைப்பில் பெரும்புலவர் வே.பதுமனார் உரையாற்றினார். தமது கல்வித்திறத்தாலும் சொல்வித்தகத்தாலும் அவையினரைக் கட்டிப்போட்டுவிட்டார்   இராம.வீரப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.   பேரா.திருமதி.சாரதா நம்பி ஆரூரன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.  (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)   செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்

பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா

வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு   பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய…

அகதிகள் அனாதைகள் அல்லர்!

எதிர்வரும் சனி  ( 28.06.ஆனி 14, 2045 / 2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி ஏதிலியர் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! உலகம் முழுவதும் அவலத்துள்ளும் அச்சத்துள்ளும் வாழும் ஈழத் தமிழ் ஏதிலியர் திட்டமிட்டு இலங்கையை நோக்கிக் கடத்தப்படுகின்றனர். மலேசியாவிலிருந்து  ஏதிலியராக ஏற்கப்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டனர். பிரித்தானியா,பிரான்சு, செருமனி,கனடா போன்ற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ்  ஏதிலியரின்  நிலை கேள்விகுறியாகியுள்ளது. இவற்றைக் கண்டித்து தமிழ்  ஏதிலியருக்கான போராட்டக்குழு ஐக்கிய நாடுகளுக்கான ஏதிலியர்…