‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள்’ வழங்கப்பட்டன.

2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ்  விருதுகள்’ முதல்வரால் வழங்கப்பட்டன. முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்களின்பெரு  முயற்சியால்  தொன்மையும்,  இலக்கியவளமும் நிறைந்த தமிழ் மொழியானது  2004-ஆம்  ஆண்டு  ஒன்றிய  அரசால்  செம்மொழியாக  அறிவிக்கப்பட்டது.  செம்மொழித்தமிழுக்கெனத்  தனித்தன்மையுடன்  கூடிய ஓர்  ஆராய்ச்சி  நிறுவனம்  தொடங்கப்படவேண்டும்  என்ற  முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின்    கனவினை    நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு, இந்திய  மொழிகளுக்கான  நடுவண்  நிறுவனத்தின்  ஓர்  அங்கமாக,  செம்மொழிக்கான நிறுவன மொன்று அமைக்கப்பட்டது. பின்னர்2008-ஆம்  ஆண்டில்  ‘செம்மொழித்  தமிழாய்வு…

மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய அரங்கம் + பாவாணன் உரை

தமிழே விழி !                                                                                                              தமிழா விழி  ! …

133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு, இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை

திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்து இந்தியப் புத்தக ஆவணம், புதுச்சேரி 133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு தலைமை: பேரா.வெ.அரங்கராசன் சிறப்புரை: திரு இலக்குவனார் திருவள்ளுவர் உரையாளர்கள் அழைப்பிதழில் உள்ளவாறு அன்புடன் முனைவர் இளைய ஒளவை தாமரை

இலக்கிய அமுதம், குவிகம் – இணைய அளவளாவல்

தை 03, 2053 ஞாயிறு மாலை 6.30 16.01.2022  இலக்கிய அமுதம் + குவிகம் வள்ளுவர் விள்ளாத வள்ளுவம் வள்ளுவம் விள்ளாத வள்ளுவர் சிறப்புரை : மருத்துவர் அ.சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய             நுழைவு எண் 619 157 9931 கடவுச் சொல் /  Passcode:  kuvikam123      அல்லது https://bit.ly/3wgJCib இணைப்புநம் வலை youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38          

திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு

திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்;  காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு  சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான ஐயன் திருவள்ளுவர் விருது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கக் காரணமாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும், பழம்பெரும் காங்கிரசு  தலைவர் குமரி அனந்தனுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படுவதாக முதல்வர் தாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசால் ஒவ்வோர் ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்தும் வருபவர்களுக்கு ஐயன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச்…

133 மணிநேரத் திருக்குறள் தொடரரங்கம் + 3ஆம் நாள் நிகழ்வு

மூன்றாம் நாள் 15.01.2022அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல் 9.30 குறள் வாழ்த்து நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள் வரவேற்புரை திருக்குறள் முனைவர் ஔவை தாமரை தலைமையுரை செம்மொழிக் கலைஞர் விருதாளர்அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள் சிறப்புரை 1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்கல்வியாளர்சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளைபொன்னேரி 2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் நன்றியுரை முனைவர் மா.பாப்பா உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை அமர்வு 17 தலைமை முனைவர் சௌ.கீதாமுதல்வர்அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம் கட்டுரையாளர்கள் 1) செல்வி நா.சையதலி பாத்திமா 2)முனைவர்…

133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம்

திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி இணைந்து வழங்கும் வள்ளுவம் போற்றுவோம் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 133 மணிநேர இணைய வழி உலக அருந்திறல் பன்னாட்டுத் திருக்குறள் ஆய்வரங்கம் தொடக்க விழா திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29 13.01.2022 வியாழன் காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம் 133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும். குத்துவிளக்கேற்றித் தலைமையுரை அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு தொடக்கச் சிறப்புரை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொறி….

மகாத்மா காந்தியின்   75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

மகாத்மா காந்தியின்   75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு,வணக்கம். “எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்! விளக்கம் இதோ:நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம் நடத்திய அண்ணல் காந்தியை நம்மில் ஊறியிருந்த வன்முறை உணர்வுகளுக்கு நாமே பலியாக்கினோம். எனினும் அகிம்சைக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அது அமைந்தது அல்லவா? அகிம்சைக்கு மேலும் வலுவூட்ட அகிலத்தையே ஆன்ம சக்தியால் நிரப்ப வேண்டிய…

குவிகம் நகைச்சுவை நிகழ்ச்சி – நடத்துபவர்: சுவாமிநாதன்

மார்கழி 25, 2052 / 09.01.2022 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் நுழைவு எண் 619 157 9931கடவுச் சொல் /  Passcode:  kuvikam123    அல்லது https://bit.ly/3wgJCib குவிகம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துபவர்:  சுவாமிநாதன்  

திருச்சி சமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் முப்பெரு விழா

முப்பெரு விழா திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துறையில் 16-12-2021 அன்று ‘முப்பெரும் விழா’ நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன் எழுதிய “இலைகளின் மௌனம் கவிதைகளாய். . . . . . .” நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, நுண்திறன் மேம்பாட்டுச் சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் இனிதே நடைபெற்றன. கல்லூரியின் செயலர் – தாளாளர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன், முதல்வர் முனைவர். சை.இசுமாயில் முகைதீன், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்…

2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு கவிஞர் மு.முருகேசிற்கு

2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு(பால சாகித்திய புரசுகார்) விருது பெற குறும்பாக் கவிஞர் மு.முருகேசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேசு இப்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.    இவர் 10 புதுக்கவிதை, 9 குறும்பாக்(ஐக்கூ) கவிதை நூல், 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் முதலான 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 குறும்பா(ஐக்கூ)க்…

உலகத் திருக்குறள் மாநாடு 2022 , கோயம்புத்தூர்

23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணி சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் தலைமையில் மார்கழி 23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணிக்குக் கோயம்புத்தூரில்  சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரியில்  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேதகு ஆளுநர் பொற்கரங்களால் “கல்வெட்டில் திருக்குறள் 6″ என்ற திருக்குறள் நூல் வெளியிடப்படுகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டில் அனைவரும் காலை 10 மணி அளவில் தமிழக அரசின் மகுடைநோய(கொரோனோ)…