பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு
பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு பணத்தாள்கள் செல்லாதென அறிவித்ததால் ஏற்பட்டுள்ளஇன்னல்களுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் தி.மு. கழகத்தின் சார்பில் கார்த்திகை 09, 2047 / நவ. 24 – அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெறும் எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ச.க. அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல்,…
தமிழ் இலக்கிய, இலக்கணச் சொற்கூறுகளும் சொல்லடைவும் – வலைத்தளம் அறிமுகம்
சங்கத்தமிழ் சொற்பேழை பேராசிரியப் பெருமக்களே! ஆய்வு அறிஞர்களே! மாணவக் கண்மணிகளே! அரிய படைப்பாகிய ’ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு’ என்னும் அறிய நூலிற்கு பிறகு http://drkamatchi.in/ (SANGAM CORPUS AND CONCORDANCE) என்னும் வலைத்தளம் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், கணினி மொழியியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களுக்காகப் புதியதோர் கோணத்தில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைத்தளம் பற்றி: இவ்வலைத்தளத்தில் எட்டுத்தொகை இலக்கியங்களில் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றையும் திருக்குறள், இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்ற நூல்களுக்குத் தமிழ் அகரவரிசைப்படி அகராதியும் ஆங்கில அகர வரிசையில் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது….
“தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” : பேராசிரியர் சு. பசுபதி
ஐப்பசி 27, 2047 / நவம்பர் 12, 2016 உலகத்தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் மின்னியற்றுறைப் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் ”தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் மிகவும் விரிவாகவும் கருத்துச்செறிவாகவும் பேசினார். இந்நிகழ்ச்சி தொராண்டோ அருகே உள்ள இசுக்கார்பரோ (Scarborough) நகரில் நடைபெற்றது. அவர் பேச்சைக் கேட்க வாட்டர்லூவில் இருந்து சென்றிருந்தேன். சாலை நெரிசலின் காரணமாகக் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்குக் கேட்கக்கிடைத்த பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரப் பொழிவை இங்கே பகிர்கின்றேன். அரிய நுணுக்கமான…
செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்
செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டையில் இருந்தாலும் தலைநகரில் உள்ள வசதியான பள்ளி போன்று மாணவர்களை இற்றைநாள்(up to date) விவரம் அறிந்தவர்களாக ஆக்குவதிலும் கல்வியுடன் பிற துறை நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதிலும் முன்னணியில் உள்ளது. எனவே, இன்றைய தலையாயச் சிக்கலான செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 உரூபா, 1000 உரூபாய் பணத்தாள்களை மாற்றுவது எப்படி என்று விளக்கி உள்ளனர். இக்கூட்டத்தில் பள்ளி மாணவர் விசய் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை…
அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அபுதாபி அரோரா நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின்…
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video) மகிந்த இராசபக்ச அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் மாமனிதர் நடராசா இரவிராசு. அன்னாரது 10ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஐப்பசி 25, 2047 / 10.11.2016, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நல்லூர்க் கோட்ட இளைஞரணித் தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. குறித்த…
கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?- கி. வெங்கடராமன்
கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கடராமன் அறிக்கை! இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐப்பசி 23, 2047 / 08.11.2016 நள்ளிரவு முதல் 500 உரூபாய், 1000 உரூபாய்த்தாள்கள் செல்லா என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார். கருப்புப் பணத்தையும், கள்ள உரூபாய்த்தாள்களையும் செயல்படாமல் முடக்குவதற்கே இந்த அறிவிப்பு என்று அவர் காரணம் கூறினார். பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லை கடந்து கள்ள உரூபாய்த்தாள்களைப் புழக்கத்தில்விட்டு, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு…
நட்சத்திரப் பொறியாளர் விருது பெற்றார் வித்தியாசாகர்!
குவைத்து எண்ணெய்வள நாட்டில் அமைந்துள்ள நமது தமிழர்களின் அமைப்புகளில் தொழில்சார்ந்த அமைப்பான ‘தமிழ்நாடு பொறியியல் குழுமம்‘ சால்மியா எனும் நகரிலுள்ள “தி இரேடிசன் ப்ளு” உயர்தர நட்சத்திர விடுதியில் 02.11.2016 அன்று நட்சத்திரப் பொறியாளர் விருது வழங்கும் விழாவினை எடுத்து நடத்தியது. ‘குவைத்து எண்ணெய் நிறுவனத்தின் முதன்மைத் தலைமை அதிகாரி (CEO of KPC) முன்னிலை வகித்தார். உலகத்தர வரிசையில் பல முன்னிலை நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது த.பொ. குழுமம். …
கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும் -ச.ம.உ. அம்பேத்குமார்
கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும் – ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி வழங்கும் விழாவில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் உரை – வந்தவாசி.அக்.12.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டுஊரில் உரேகா கல்வி இயக்கமும் இலயா அறக்கட்டளையும் இணைந்து ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி வழங்கும் விழாவை நடத்தின. மன்பதையில் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றமே ஒரு நாட்டில்…
சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,கீழக்கரை
சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி மொத்தப் பரிசுத் தொகை :உரூ. 48,000/ + 84 வெற்றிக்கிண்ணங்கள் இராமநாதபுரம் மாவட்டச் சதுரங்கக் கழகமும் கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான குழந்தைகளுக்கான முதல் சதுரங்க விளையாட்டுப் போட்டி கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியில் கார்த்திகை 04 & 05, 2047 19.11.16 &20.11.16 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் 9, 11, 13, 15, ஆகிய அகவைக்குட்பட்ட பள்ளி…
அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! – சுப.வீ.
அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள். யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி,மதவாத வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய நேரமும், நெருக்கடியும் இப்போது வந்துள்ளது. எங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், கிருத்துதாசு…
வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016
வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016 யாழ்பாவாணன் வெளியீட்டகம்(http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர். எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடைகளை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) விடையை அனுப்பமுடியும்….