வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம்

வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் பூம்புகார் நிறுவனம் – ஓர் அறிமுகம்  தமிழக அரசின் தமிழ்நாடு  கைவினைஞர்கள் மேம்பாட்டுக்  கழகத்தின் விற்பனை நிறுவனம் ‘பூம்புகார்.’  தமிழர்களின்   மரபார்ந்த  பண்பாட்டினைச், சிற்பம், ஓவியம், எழுத்து போன்ற பல்வேறு கலைகளில் பதிவு செய்து, பழமைகளை மீட்டெடுத்துப் பாதுகாத்து, வளர்த்து அவற்றை இன்றைய தலைமுறையினருக்கும் வெளி உலகுக்கும்  வணிகமுறையில் கொண்டு செல்லும் பணியில் 1973 ஆம் ஆண்டிலிருந்து  பூம்புகார் நிறுவனம் திறம்படச் செயல்படுகிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவர்  திருக்குறள் மனித வாழ்வின் இலக்கண நூல்  [Thirukkural is the…

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017’

‘காக்கைச் சிறகினிலே‘ மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017 / தி.பி.2048′ –    ‘காக்கைச் சிறகினிலே’ இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.  பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. புலம்பெயர் இலக்கியப்…

மாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு

தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் நந்தகுமார் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்நாள் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் தனலெட்சுமி, இரஞ்சித்து, உமா மகேசுவரி , சீவா, பரமேசுவரி, பார்கவி இலலிதா, இராசேசுவரி, நித்திய கல்யாணி, காயத்திரி ஆகிய மாணவர்களுக்கும், இரோசிமா…

ஈழ மாணவர் சுட்டுக்கொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை – மே 17

  யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாதக் காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது. ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்குப் பின்பான அரசியலில் முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர்  விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய்ப் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29ஆவது நினைவு நாள் இன்று. இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பன்னாடுகளின் தோல்வியும், அமெரிக்கத் தீர்மானத்தின்…

தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – மரு.இராமதாசு

தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்!  – மரு.இராமதாசு   இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பழைய வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 19 அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.   2016 சட்டமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியதாகவும், இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர்…

உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்தைப் பழிவாங்குவதா? – சீமான்

உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா?  – மத்திய அரசுக்குச் சீமான் கண்டனம்!  இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சற்றும் சலனமில்லாது தமிழர்களுக்கு இன்னொரு வஞ்சகத்தை இழைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழகமும், கேரளாவும் மட்டும்தான் அதனை ஏற்க மறுத்தன. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு…

அரசு இராணி மேரிக்கல்லூரியில் இலக்கிய மன்றத் தொடக்கவிழா

  சென்னை, அரசு இராணி மேரிக்கல்லூரியில் (ஐப்பசி 05, 2047/அட்டோபர் 21, 2016 அன்று) இலக்கியமன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. முதல்வர் முனைவர் இராச சுலோசனா  தலைமை   தாங்கினார். த.து.த.  முனைவர் கலைவாணி வரவேற்புரை யாற்றினார்.  முனைவர் உலோக நாயகி அறிமுக உரை வழங்கினார். மேனாள் முதல்வர் முனைவர் இ.மதியழகி இலக்கியமன்றத்தைத்  தொடக்கி வைத்துச் சிறப்புரை யாற்றினார்.   தம் உரையில் அவர், ‘இலக்கியம் காட்டும் நன்னெறி’  குறித்துச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.  மாணவி தமிழ்மொழி நன்றி நவின்றார். முனைவர் ஏமாரசினி ஒருங்கிணைத்துத் தொகுப்புரை வழங்கினார்.   படங்கள் :…

காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!   உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி…

திருவள்ளுவர் நாட்குறிப்பேடு – 2017 சிறப்புடன் வருகிறது!

2016ஆம் ஆண்டு வெளியாகி – மிகுந்த வரவேற்பைப் பெற்ற  திருவள்ளுவர்  தமிழ் நாட்குறிப்பேடு – 2017ஆம் ஆண்டு மேலும் சிறப்புடன் வருகிறது!     பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டுள்ள “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” ஒவ்வோர் ஆண்டும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.  இதனைத் தொடர்ந்து வரும் 2017ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் நாட்குறிப்பேடு (Dairy), தற்போது சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு வருகின்றது.    ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 400 பக்கங்கள்  ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய…

தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட ஒத்துழையாமை – காவிரி உரிமை மீட்புக் குழு

  காவிரி முதலான தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை தஞ்சையில் – காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் “காவிரி முதலான தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது” எனத் தஞ்சையில், ஐப்பசி 03, 2047 / 19.10.2016 அன்று நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.     காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கூட்டத்திற்குத், தலைமை தாங்கினார். தமிழர் தேசிய…

பன்னாட்டுக் கலைப்பாலம் 2016, கனடா

மிகச் சிறந்த ஈழத்துக் கலைஞர்களின் சங்கமத்துடன் கனடா திருமறைக் கலைமன்றம் வழங்கும் பன்னாட்டுக் கலைப்பாலம் 2016   ஈழத்தில் 1965 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட திருமறைக் கலைமன்றம்(கலாமன்றம்), 50 ஆண்டுகள் நிறைவைக் கனடாவில்  பன்னாட்டு விழாபீவாகக் கொண்டாடுகிறது.   கனடா திருமறைக் கலைமன்றம் தமது 25வது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த வருடத்தில், தாய் மன்றத்தின் பொன்விழாவையும், கனடிய மன்றத்தின் வெள்ளி விழாவையும் ஒன்றாக இணைத்துப்,  பன்னாட்டுக் கலை விழாவாகக் கொண்டாடுகிறோம். சுகாபரோவில், மைக்கோவன்-எல்சுமெயர் சந்திக்கருகே, இல.1686 எல்சுமெயர் வீதியில் அமைந்துள்ள   சேசிசு மண்டபத்தில்…

மாணிக்கவாசகம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மாணிக்கவாசகம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தேவகோட்டை:  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.    கண்காட்சிக்கு வந்தவர்களைப் பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.   தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கிக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.   அறிவியல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பெரியசாமி, தேவகோட்டை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கண்காட்சியில் பாய்ம அழுத்த விதி(பெர்னோலி கோட்பாடு), பகல் – இரவு…