‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல் அறிமுக விழா, புதுச்சேரி

  புதுச்சேரியில் நூல்அறிமுக விழா – அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவி வழங்கும் விழா     ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்அறிமுக விழாவும் அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும்  ஆடி 15, 2045 /31. 07. 2014 மாலை 6 மணி முதல் 8 மணி வரை புதுச்சேரி செயராம் உறைவகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் தலைமை தாங்கி ‘ஒரு சாமானியனின் சாதனை’ என்ற நூலை வெளியிட்டு வாழ்த்திப்…

மனத்தை அகலப்படுத்தும் இலக்கியங்களே மடல்கள்-கவிஞர் மு.முருகேசு

       [கவிஞர் மு.முருகேசு வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா, தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன், அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.] அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த மடல் இலக்கிய நூல் வெளியீட்டு விழா இன்று (ஆடி 11 2045, சூலை 27,2014) நடைபெற்றது. இவ்விழாவில், “அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும், மடல் எழுதுகிற ஒரு மன…

வினைதீர்த்தான் நடத்திய தன்முனைப்புப் பயிலரங்கம்

சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் செயங்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கும் 104 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் ஆனி 32, 2045 / 16.07.2014 அன்று முன்னேற்ற வழி ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களால் நடத்தப் பெற்றது. கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலர் திரு வயி.ச.இராமநாதன் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். [ 1. செயலர் திரு வயி.ச. இராமநாதன், ஊக்குநர் சொ.வினைதீர்த்தானுக்குப் பொன்னாடை அணிவித்தல் 2. பொருளாளர் திரு திருஞானம் ,  செயலர் திரு வயி.ச. இராமநாதன் ஆகியோருடன்…

நெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்

நெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள்,   பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….

இத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்!

  இத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….

கனடா அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் கறுப்பு யூலை நிகழ்வு!

    கடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம்…

செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013

மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது :  நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…

கோவை கு.இராமகிருட்டிணனுக்கு விருது

கோவை கு.இராமகிருட்டிணனுக்குச் சமூகநீதிப் போராளி விருது நந்தன் எனும் இரகுநாதனின் வீரவணக்க நிகழ்ச்சி பவுத்தம்:- ஆரிய திராவிடப் போரின்தொடக்கம்  – நூல் அறிமுகம்   ஆனி 30, 2045 / 14-07-2014 மாலை, கோவை அண்ணாமலை அரங்கில் தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக  நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திராவிடநெறி எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, ” பவுத்தம் ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் ” எனும்…

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (ஆடி 5, 2045 -21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரிப் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை முதலான பிற மாவட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற்றன. தஞ்சை மாவட்டத்தில் வணிகர்களின் ஆதரவோடு முழுமையான கடையடைப்பு நடைபெற்றது. தஞ்சை தஞ்சையில், மருத்துவக் கல்லூரி சாலை – பாலாசி நகரில் இயங்கும் இந்திய அரசின்…

தமிழ்மணம் வீசிய புழுதிவாக்கம்!

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் ‘சங்க இலக்கிய அறிமுகம்’ என்னும் நூல் வெளியீட்டையும் பரிசளிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தது. இதன் அமைப்பாளர் திரு த.மகாராசன், பிற பொறுப்பாளர்கள் நன் முயற்சியால் தமிழ் மணம் வீசிய அரங்கு நிறைந்தவிழாவாக நடைபெற்றது. கடந்த 16.09.2012 அன்று இம்மன்றத்தின் சார்பில் நடத்தப் பெற்ற சங்க இலக்கியப் பெருவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரையையே இப்பொழுது நூல் தொகுப்பாக்கி உள்ளனர். சங்க இலக்கியக் களஞ்சியம் – ந.முத்து(ரெட்டி) சங்க இலக்கியக் கட்டுரைகள்: ஓர் அறிமுகம் – புலவர் கோ.பார்த்தசாரதி ஆற்றுப்படை நூல்கள் –…

இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 51 – திருவாரூர்

இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 51 இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் தலைமை: பாவலர் காசி வீரசேகரன் சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழன்என்பதில் என்ன பெருமை இருக்கிறது?“ அனைவரும் வருக! நல்லாசிரியர் புலவர் எண்கண்சா.மணி

தமிழ்க் கலைகள் பாதுகாப்புப் போராட்டம்.

இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும் தமிழ்க் கலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம்!   இலங்கையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகள் நாங்கள். சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் ஏகபோக அரசுகளாலும் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் கூட வணிகமாக்கப்படும் அவமானகரமான சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அபகரிக்கப்படும் தமிழ் மண்ணில் உலகின் பல்தேசிய நிறுவனங்கள் தமது பேரரசை நிறுவிக்கொள்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள-பௌத்தக் குடியேற்றங்களும், மறுபுறத்தில் பல்தேசிய வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் தமிழ் அடையாளத்தை அழித்து வருகின்றன.   இவையெல்லாம் இனச்சுத்திகரிப்பைப் படம்போட்டுக் காட்டுகின்ன்றன. கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மை…