மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி
வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் – மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி.. ஆடி 9, 2045 / சூலை 25, 2014 கிருட்டிணகான சபை, சென்னை 600 017 தலைமை: திரு விசய திருவேங்கடம்.. முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி.. சிறப்புரை: திரு பழ. கருப்பையா.. விருதாளர்: திரு தமிழ்மகன்.. நிரலுரை: முனைவர். ப. சரவணன்.. உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்..
இணையவழியில் சித்த மருத்துவப் பயிலரங்கம்
நண்பர்களே, வணக்கம். ஞாயிறு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை (EST) (இந்திய நேரம் இரவு 7:30) நம் தமிழர்களின் பரம்பரை மருத்துவ முறையான சித்தமருத்துவம் குறித்து “ஆரோக்கிய வாழ்விற்கு சித்தமருத்துவம்” என்னும் கருத்தரங்கம்-கலந்துரையாடல் இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை, சித்த மருத்துவர் முனைவர் செல்வசண்முகம், அவர்கள் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் இருந்து வழங்குகிறார்கள். இவர் அண்மையில் நடைபெற்ற “அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை”-யின் அழைப்பின்பேரில் அமெரிக்கா வந்து பேரவை விழாவில் தமிழர்களுக்கு மூன்று மணி நேரம் “சித்த…
காவிரி மீட்பு – தமிழகமெங்கும் போராட்டங்கள்!
பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி வைத்தியநாதன் வலியுறுத்தல்
மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்: இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு,…
‘இளந்தமிழகம்’ மலர்ந்தது!
“தமிழர்களைக் காப்பாற்றுங்கள் இயக்கம்” (Save Tamils Movement) காலத்தின் தேவைக்கேற்பத் தன் பெயரைத் தமிழில் புதியதாகச் சூட்டிக் கொண்டு கொள்கை அறிக்கையையும் வெளியிட்டது. இன்று (ஆனி 29 , 2045 / சூலை 13 / ஞாயிறு) மாலை 6 மணிக்கு சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளியில் இது தொடர்பான விழா நடைபெற்றது. தோழர்.செய்யது, இவ்வியக்கத்தின் கடந்த ஐந்தாண்டுச் செயல்பாடுகளைத் தொகுத்து வழங்கினார். தோழர். சமந்தா தலைமையில் நடந்த முதலாம் அமர்வில் தோழர் இன்குலாப், பேரா.மணிவண்ணன், தோழர்.சுந்தரி ஆகியோர்…
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடை விழா 2014
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 2014 ஆம் ஆண்டுக்கான கோடைவிழா மிகச் சிறப்பாக கடந்த 07-07-2014 அன்று நடைபெற்று முடிந்தது. அந்நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்புகள் இங்கே! ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காண்க!
எம்.பி.நிர்மல் அவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் பாராட்டு!
செவ்வை நேர்த்தி அமைப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மைக்குத் தொண்டாற்றி உலகப்புகழ் பெற்றுள்ள எக்சுநோரா நிர்மல் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2014 தமிழ் விழாவில் பாராட்டினர். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்கான கருத்தாக்கத்தைப் பல தரப்பாரிடமும் ஏற்படுத்தி வரும் அவரது தொண்டினை விழாவில் பாராட்டினர். பேரவையின் முன்னாள் தலைவரும் 2008 பேரவைத் தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரருமான முனைவர் தனிக்குமார் சேரன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் விசயகுமார் முத்துசாமி.பொன்னாடை அணிவத்து வாழத்தினார். சமயங்களுக்கு…
வவுனியா மன்னகுளத்தில் வள்ளுவர் முன்பள்ளி
புலம் பெயர் உறவுகளுக்குப் பாராட்டுகள்! புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்விழாவல கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, தொடக்கநிலை கற்றல் தான் ஒரு மனிதனுக்கு எழுத்தறிவிக்கிறது. வாழ்வதற்கு மிகவும் தேவையான எழுத்தறிவையும், வாசிப்பறிவையும் கற்பிக்கும் முன்பள்ளி ஒன்று…
காரைக்குடியில் வினைதீர்த்தானின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்
ஆனி 25 , 2045 / சூலை 9, 2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் இதனைச் சிறப்பாக நடத்தினார். பரம்பரைச்சிறப்புடைய இந்நகராட்சிப்பள்ளி 1938 இல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் இராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் இராசா பயிலரங்கு நடத்த…
தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா
தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார். தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது. திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார். சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார். ‘கற்பைப் போற்றிய…
தனித்தமிழ் இயக்கம் நடத்திய இலக்கிய விருந்தரங்கம்
ஆனி 17, 2045 / 1.7.2014 செவ்வாய் மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இலக்கிய விருந்தரங்கம் நடைபெற்றது. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அவ்விழாவுக்கு ஆசிரியர் சோ.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். த. தமிழ்த்தென்றல் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுமி சா.கலைமதி நடன மாடினார். த.தமிழ்நேயன் சிறுவர் பாடல்கள் பாடினார். புலவர் சிவ.இளங்கோவன்,புலவர் இ.பட்டாபிராமன் ஆகியோர் இலக்கியச்சுவைபற்றிப் பேசினர். சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் தனித்தமிழ் அறிஞர் க.தமிழமல்லன் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாவரங்கில் பாவலர்கள் தேவகிஆனந்து,…
தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014
பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது; தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…