திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 053. சுற்றம் தழால்

(அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 053. சுற்றம் தழால்   உறவினர்க்கு வேண்டியன கொடுத்து, அரவணைத்துக் காப்பாற்றும் உயர்பண்பு.   பற்(று)அற்ற கண்ணும், பழைமை பாராட்டுதல்,        சுற்றத்தார் கண்ணே, உள.        ஏழ்மையிலும் பழைய உறவைக்        கொண்டாடல், உறவாரிடமே உண்டு.   விருப்(பு)அறாச் சுற்றம் இயையின், அருப்(பு)அறா      ஆக்கம் பலவும், தரும்.        விருப்பம் குறையா உறவாரால்        அறுபடா வளநலம் அமையும்.   அள(வு)அளா(வு)…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 052. தெரிந்து வினை ஆடல்

(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் பணியில் அமர்த்தியபின், அவர்அவர் திறன்கள் அறிந்து, கையாளுதல்   0511 .நன்மையும், தீமையும், நாடி, நலம்புரிந்த      தன்மையால், ஆளப் படும்.      நன்மை, தீமைகளை, ஆராய்க;       நன்மையரைப் பணியில் அமர்த்துக. வாரி பெருக்கி, வளப்படுத்(து), உற்றவை      ஆராய்வான், செய்க வினை.  வருவாய் பெருக்கி, வளப்படுத்திப், பயன்கள் ஆய்வான் செயற்படுக. அன்(பு),அறிவு, தேற்றம், அவாஇன்மை, இந்நான்கும்,       நன்(கு)உடையான் கட்டே,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 051. தெரிந்து தெளிதல்

(அதிகாரம் 050. இடன் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் எப்பணிக்கும், தக்காரை ஆராய்ந்து,  தெளிந்து, பணியில் அமர்த்தல்   அறம்,பொருள், இன்பம், உயிர்அச்சம், நான்கின்,       திறம்தெரிந்து, தேறப் படும்.      அறமும், பொருளும், இன்பமும்,  உயிர்அச்சமும், ஆராய்ந்து தேர்க.   குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும்,       நாண்உடையான் கட்டே, தெளிவு.         நற்குடிமை, குற்றம்இன்மை, பழிக்கு       வெட்குதல் பெற்றாரைத், தெளிக.   அரியகற்(று), ஆ(சு)அற்றார் கண்ணும், தெரியும்கால்,      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 050. இடன் அறிதல்

(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 050. இடன் அறிதல் வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,  உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.   தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,       இடம்கண்ட பின்அல் லது.         எந்தச் செயலையும் இகழற்க;         இடத்தைக் கண்டபின், தொடங்குக.   முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்       ஆக்கம், பலவும் தரும்.    வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்         நன்மையும் நல்இடம்தான் தரும்.   ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்

(அதிகாரம் 048. வலி அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 049. காலம் அறிதல்   செய்யத் துணிந்த செயலுக்குப் பொருந்தும் காலத்தை ஆராய்தல்   பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும்      வேந்தர்க்கு, வேண்டும் பொழுது.     காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்;        ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை.   பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத்,       தீராமை ஆர்க்கும் கயிறு.         காலத்தோடு பொருந்திய  செயற்பாடு,         செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு..   அருவினை என்ப உளவோ….? கருவியான்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்

(அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 048. வலி அறிதல் செயற்படும் முன்னம், எல்லாவகை வலிமைகளின், திறன்களின் ஆய்வு.   வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும்,       துணைவலியும், தூக்கிச் செயல்        செயல்வலி, தன்வலி, பகைவலி,         துணைவலி ஆராய்ந்து செய்க.   ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச்       செல்வார்க்குச், செல்லாத(து) இல்.        முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து         செய்தால், முடியாததும் இல்லை.   உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை

(அதிகாரம் 046. சிற்றினம் சேராமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை நன்மை, தீமை போன்றவற்றை நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள்.   அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும்       ஊதியமும், சூழ்ந்து செயல்.          ஆவது, அழிவது, பின்விளைவது        போன்றவற்றை ஆய்ந்து செய்க.   தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு),      அரும்பொருள் யா(து)ஒன்றும், இல்.        செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து      செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை.   ஆக்கம்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை

(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை      இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு.   சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்,       சுற்றம்ஆச் சூழ்ந்து விடும்       பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்;         சிறியார், சிறியார்க்கு உறவுஆவர்.   நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு),      இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு.      நிலஇயல்பால், நீரும் திரியும்;        இனஇயல்பால், அறிவும் திரியும்.   மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்

(அதிகாரம் 044. குற்றம் கடிதல் தொடர்ச்சி) 02. அறத்துப் பால்  05. அரசு இயல் அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு  பெரியாரைத் துணையாகக் கொள்ளல்.   அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை,      திறன்அறிந்து, தேர்ந்து கொளல்.        அறம்அறிந்த, மூத்த அறிவாளர்        பெருநட்பைத் தேர்ந்து கொள்க.   உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும்,      பெற்றியார்ப் பேணிக் கொளல்.        வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க்        காக்கும் பெரியாரைத் துணைக்கொள்.   அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 044. குற்றம் கடிதல்

(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044.  குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும்,  வராதபடி கடிந்து விலக்குதல்   செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார்      பெருக்கம், பெருமித நீர்த்து.        செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம்,        இல்லார் முன்னேற்றம் பெருமையது.   இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா      உவகையும், ஏதம் இறைக்கு.        கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு,        ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள்.   தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…

எனக்குப் பிடித்த திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன்

எனக்குப் பிடித்த திருக்குறள்   எந்நாட்டவருக்கும் எக்காலத்தவருக்கும் ஏற்ற   உலகப் பொது நு}லாம் திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை மட்டும் சுட்டிக் காட்டி நமக்குப் பிடிக்கும் என்று கூற இயலாது. இருப்பினும் நாம் அடிக்கடி நினைவு கூர்கின்ற திருக்குறள்கள் பல இருக்கும். அவ்வாறு நான் நினைவு கூர்கின்ற திருக்குறள்களில் முதன்மையான ஒன்றைக் கூற விழைகிறேன்,   திருவள்ளுவர் தம் தாய்நாடாகிய தமிழ்நாட்டையோ தாய் மொழியாகிய தமிழ்மொழியையோ எவ்விடத்தும் குறிப்பிடாமல் மக்கள் கூட்டத்திற்காகவே திருக்குறள் நூலைப் படைத்துள்ளார். இருப்பினும் உலக மக்கள் தோன்றிய தென்பகுதியில் வாழ்ந்தோரைக்…

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்! தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.   “இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று…