திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 044. குற்றம் கடிதல்

(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044.  குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும்,  வராதபடி கடிந்து விலக்குதல்   செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார்      பெருக்கம், பெருமித நீர்த்து.        செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம்,        இல்லார் முன்னேற்றம் பெருமையது.   இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா      உவகையும், ஏதம் இறைக்கு.        கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு,        ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள்.   தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…

எனக்குப் பிடித்த திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன்

எனக்குப் பிடித்த திருக்குறள்   எந்நாட்டவருக்கும் எக்காலத்தவருக்கும் ஏற்ற   உலகப் பொது நு}லாம் திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை மட்டும் சுட்டிக் காட்டி நமக்குப் பிடிக்கும் என்று கூற இயலாது. இருப்பினும் நாம் அடிக்கடி நினைவு கூர்கின்ற திருக்குறள்கள் பல இருக்கும். அவ்வாறு நான் நினைவு கூர்கின்ற திருக்குறள்களில் முதன்மையான ஒன்றைக் கூற விழைகிறேன்,   திருவள்ளுவர் தம் தாய்நாடாகிய தமிழ்நாட்டையோ தாய் மொழியாகிய தமிழ்மொழியையோ எவ்விடத்தும் குறிப்பிடாமல் மக்கள் கூட்டத்திற்காகவே திருக்குறள் நூலைப் படைத்துள்ளார். இருப்பினும் உலக மக்கள் தோன்றிய தென்பகுதியில் வாழ்ந்தோரைக்…

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்! தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.   “இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று…

அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்

அருவினை ஏதுமில்லை அசைவிலா ஊக்கம் பெற்றால் திருவினை யாய்முடியும் திருக்குறள் நூல் கற்றால்! – அருவினை விதிசதி எல்லாம்சாயும் மதிவழி நாம்உழைத்தால் கதிஎன வள்ளுவத்தைக் கருத்தினில் நாம்பதித்தால்! – அருவினை பிரிவினை உணர்வகற்று உறவினை வளர்ப்பதற்கே நிறப்பகை தனையகற்று அறப்பகை செழிப்பதற்கே! உதிக்கின்ற செங்கதிர்போல் உலகிற்கே ஒளியூட்டும் நதிநீரைப்போல் நடந்து நமக்கெல்லாம் பயன்கூட்டும்! – அருவினை உருவத்தில் அறிவுமில்லை உயரத்தில் உயர்வுமில்லை பருவத்தில் பூப்பதெல்லாம் பயன்தரும் என்பதில்லை! சிரிப்பதும் அழுவதுவும் செயற்கையா? இயற்கையன்றோ! பிறக்கிறோம் பெண்வயிற்றில் பிறகிங்கு வேற்றுமை ஏன்? – அருவினை -திருக்குறள்…

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு      காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.      ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்      உயிர் செகுத்து உண்ணாமை…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 043. அறிவு உடைமை

(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும்.   அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்,       உள்அழிக்கல் ஆகா அரண்.   அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு.   சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ,       நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு.   அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும்.   எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்,       மெய்ப்பொருள் காண்ப(து),…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 042. கேள்வி

(அதிகாரம் 041. கல்லாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 042. கேள்வி கற்றார் சொல்கேட்டு, அறியாதன அறிதற்கு, எளிமைமிகு நல்வழி.   செல்வத்துள் செல்வம், செவிச்செவம்; அச்செல்வம்,       செல்வத்துள் எல்லாம், தலை.        செல்வங்களுள் எல்லாம், தலைசிறந்த         செல்வம், கேள்விச் செல்வமே.   செவிக்(கு)உண(வு) இல்லாத போழ்து, சிறிது,       வயிற்றுக்கும், ஈயப் படும்.        காதுக்குக் கேள்வி நல்உணவு         இல்லாப்போதே, வயிற்றுக்குச் சிற்றுணவு.   செவிஉணவின் கேள்வி உடையார், அவிஉணவின்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை

(அதிகாரம் 040. கல்வி தொடர்ச்சி)     02. பொருள் பால்  05. அரசு இயல்    அதிகாரம் 041. கல்லாமை           கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும்,              பல்வகைத் தீமைகளும், இழிவுகளும்.   அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய       நூல்இன்றிக், கோட்டி கொளல்.   நூல்அறிவு இல்லாது பேசுதல், அரங்குஇல்லாது சூதுஆடல் போல்.   கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும்      இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று.    கல்லான் பேசவிரும்புதல், மார்பகம் இல்லாதாள் பெண்மை விரும்பல்போல்.   கல்லா தவரும்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி

(அதிகாரம் 039. இறை மாட்சி தொடர்ச்சி) 02.பொருள்பால் 05.அரசு இயல் அதிகாரம் 040.   கல்வி   கல்வி கற்கும் முறைகள், கல்வி அறிவின் பயன்கள்.   கற்க, கச[டு]அறக் கற்பவை; கற்றபின்,       நிற்க, அதற்குத் தக.             படிப்பதைத் தெளிவாகப் படிக்க;         படித்தபின் படித்தபடி நடக்க.   எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும்,      கண்என்ப, வாழும் உயிர்க்கு.        அறிவியலும், இலக்கியமும், வாழும்         உயிருக்கு, இரண்டு கண்கள்.   கண்உடையர் என்பவர், கற்றோர்; முகத்(து)இரண்டு     …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி

(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி) 02.பொருள் பால்    05. அரசு இயல்  அதிகாரம்  039. இறை மாட்சி   ஆள்வோரிடம் அமைய வேண்டிய,  பேரறிவுத்   திறனும்,  பெரும்பண்புகளும்.   படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும்       உடையான், அரசருள் ஏறு.       படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண்         உடையான், நல்ல ஆட்சியான்.   அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும்       எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு.        அஞ்சாமை, கொடைமை, அறிவு,         ஊக்கம், ஆட்சியரது இலக்கணம்.   தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும்,       நீங்கா, நிலன்ஆள்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்

(அதிகாரம் 037. அவா அறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 04. ஊழ் இயல் அதிகாரம் 038. ஊழ்   உலக இயற்கை முறைமைகளை,   உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம்.   ஆ(கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள்,    போ(கு)ஊழால் தோன்றும் மடி.     ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்;        போகுசூழல் சோம்பலால் பொருள்போம்.   பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும்,    ஆகல்ஊழ் உற்றக் கடை.     அழிவுச் சூழலில் அறியாமைஆம்        ஆக்கச் சூழலில் அறிவுஆம்.   நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்,தன்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்

 (அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி)  01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 037. அவா அறுத்தல்  பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,    முழுமை யாகவே அறுத்[து]எறிதல்.   அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,      தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து.      தொடரும் பேராசைதான், எல்லா        உயிர்களின் பிறப்புகட்கும் விதை.   வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,      வேண்டாமை வேண்ட வரும்.          விரும்பின், பிறவாமையை விரும்பு;        விருப்புக்கெடின், இல்லை பிறப்பு.   வேண்டாமை…