திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 066. வினைத் தூய்மை  தொடர்ச்சி) 02. பொருள் பால்    06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம்     செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான            செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல்   வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்;      மற்றய எல்லாம் பிற.           செயல்உறுதி என்பது மனஉறுதி;         மற்றவை, எல்லாம் வேறு.             ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின்     ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள்.           வரும்முன் காத்தலும், வந்தபின்         தளராமையும் ஆய்வாளர் கொள்கை.   கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…

திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம்  068. வினை செயல் வகை  தூய செயலை, மனஉறுதியுடன் செய்தற்கு உரிய வழிமுறைகள்   சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு,      தாழ்ச்சியுள் தங்குதல் தீது.                    ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக்,         காலம் தாழ்த்தாது, துணிந்துசெய்.   தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க,      தூங்காது செய்யும் வினை.           செயல்களைப் பொறுத்துக் காலம்         தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க.    ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,…

திருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 066. வினைத் தூய்மை செயற்பாடுகளில் குற்றம்  குறைகள்  இல்லாமை; தூய்மை உள்ளமை. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம்,      வேண்டிய எல்லாம் தரும்.           நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்;         நலச்செயல் எல்லாமும் தரும்.   என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு      நன்றி பயவா வினை.     புகழோடு, நன்மை தராச்செயலை,         எப்போதும் விலக்கல் வேண்டும்.         ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை,      ஆஅதும் என்னும் அவர்.   …

திருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி) 02. பொருள் பால்        06. அமைச்சு இயல் அதிகாரம் 065. சொல்வன்மை     கேட்பார் உள்ளம் கொள்ளும்படி, சொற்களைச் சொல்லும் வல்லமை.   நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம்,     யாநலத்(து) உள்ளதூஉம் அன்று.           எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த         வெல்திறன் பேச்சுத் திறனே.   ஆக்கமும், கேடும், அதனால் வருதலால்,      காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.           வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத்,         தவறு இல்லாது பேசுக.   கேட்டார்ப் பிணிக்கும்…

திருக்குறள் அறுசொல் உரை – 064. அமைச்சு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 064. அமைச்சு அமைச்சர்தம் தகுதிகள், பண்புகள், ஆளுமைத் திறன்கள். செயற்பாடுகள்.   கருவியும், காலமும், செய்கையும், செய்யும்     அருவினையும், மாண்ட(து) அமைச்சு.           செய்கருவி, காலம், செயல்கள்,         செய்முறைகளில் சிறந்தார், அமைச்சர்.   வன்கண், குடிகாத்தல், கற்(று)அறிதல், ஆள்வினையோ(டு)     ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு.           கல்வி, குடிஅறிவு, குடிகாத்தல்,           முயற்சி, உறுதி அமைச்சியல்.   பிரித்தலும், பேணிக்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடுக்கண் அழியாமை

(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை துன்புறினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும்திறன்.   இடுக்கண் வரும்கால், நகுக; அதனை,       அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல்.         எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து         சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி.   வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார்,       உள்ளத்தின் உள்ளக், கெடும்.      வெள்ளம் போன்ற பெரும்துயரும்,         சிந்தனை உறுதியால் சிதையும்.   இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு)     …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்வினை உடைமை

(அதிகாரம் 061.  மடி இன்மை தொடர்ச்சி)  02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 062. ஆள்வினை உடைமை ஏற்றுக் கொண்ட செயல்முடிக்க, இடைவிடாது செய்யும், நல்முயற்சி   “அருமை உடைத்(து)”என்(று), அசாவாமை வேண்டும்;       பெருமை, முயற்சி தரும்.        “முடியாதது” என்று, மலைக்காதே;          முயற்சி, பெருமையாய் முடியும். வினைக்கண், வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை      தீர்ந்தாரின், தீர்ந்தன்(று) உலகு      அரைகுறையாய்ச் செயல்கள் செய்யாதே;        செய்தால், உலகமும் கைவிடும். தாள்ஆண்மை என்னும், தகைமைக்கண் தங்கிற்றே,      வேள்ஆண்மை என்னும், செருக்கு….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 061. மடி இன்மை

(அதிகாரம் 060. ஊக்கம் உடைமை தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல்  அதிகாரம் 061.  மடி இன்மை                          குடும்பத்தையும், குடியையும்  உயர்த்த முயல்வார் விடவேண்டிய சோம்பல்   குடிஎன்னும் குன்றா விளக்கம், மடிஎன்னும்       மா(சு)ஊர, மாய்ந்து கெடும்.       சோம்பல்தூசு படிந்தால், அணையாக்           குடும்ப விளக்கும் அணையும்.   மடியை, மடியா ஒழுகல், குடியைக்,       குடியாக வேண்டு பவர்.         குடியை, உயர்ந்த குடியாக்க         விரும்புவார், சோம்பலை விலக்குக.   மடிமடிக் கொண்(டு)ஒழுகும், பேதை பிறந்த       குடி,மடியும்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை

(அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி   ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,       உடைய(து) உடையரோ மற்று?         ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;         மற்றையார், உடையார் ஆகார்.   உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,       நில்லாது; நீங்கி விடும்.         ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;         பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும்.   ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்

(அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள்,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும், உளவு பார்த்தல்   ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,       தெற்(று)என்க, மன்னவன் கண்.         உளவும், உளவியல் நூல்தெளிவும்         ஆட்சியரிடம் அமைதல் வேண்டும்.   எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்       வல்அறிதல், வேந்தன் தொழில்.         எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,         ஆட்சியான் உளவால் ஆராய்க.   ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 058. கண்ணோட்டம்

(அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 058. கண்ணோட்டம்  உயிர்கள்மீது கண்களின் ஓட்டம், அதனால் விளையும் இரக்கம்.   கண்ணோட்டம் என்னும், கழிபெரும் காரிகை,       உண்மையான், உண்(டு),இவ் உலகு.         இரக்கம் என்னும், பேரழகுப்         பண்பால்தான், உலகம் இருக்கிறது. 0572, கண்ணோட்டத்(து) உள்ள(து), உல(கு)இயல்; அஃ(து),இன்றேல்,       உண்மை நிலக்குப் பொறை.         இரக்கத்தால் உலகுஇயல் உண்டு;         இரக்கம்இலான் பூமிக்குச் சுமை. . பண்என்ஆம்? பாடற்(கு) இயை(பு)இன்றேல்; கண்என்ஆம்?      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 057. வெருவந்த செய்யாமை

(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை   குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி, கொடுமைச் செயல்கள் செய்யாமை   தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால்,      ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து.    தக்கபடி ஆய்ந்து, குற்றம்   மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க.   கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம்,       நீங்காமை வேண்டு பவர்.         கடுமையாக மிரட்டி, மென்மையாகத்        தண்டிப்பதே, ஆக்க நீதி.   வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின்,       ஒருவந்தம்,…