தொல்காப்பிய விளக்கம் – 8 (எழுத்ததிகாரம்)

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 36. நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே. நெட்டெழுத்து  இம்பரும் =  நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும் = இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன சொல்லின் இறுதியிலும், குற்றியலுகரம் = க குறைந்த ஒலியையுடைய உகரம்(ஒரு மாத்திரையில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும் உகரம்), வல்ஆறு ஊர்ந்து = வல்வலின மெய்களாம் க், ச், ட், த், ப், ற் என்பனவற்றின்மீது பொருந்தி வரும். குற்றியலுகரம், மொழியிறுதியில் நிற்கும் வல்லின மெய்களைப் பொருந்தி வரும். இரண்டு…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   311. அளவைகளும் எடைகளும்  பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன.  பயன்பாட்டின் போது பெயர்களின்  ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…

தொல்காப்பிய விளக்கம் – 7 (எழுத்ததிகாரம்)

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 32. ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா.   ஆ, ஏ, ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும்.   காட்டு : வந்தானா வந்தானே வந்தானோ வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று.   33. அன்புஇறந்து  உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென  மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.     உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்துகள் தமக்குரிய…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 6

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   3.9. பல்வேறு வகுப்பினரின் மன்பதைத் தொழிற்பாடுகள்:  ஒவ்வொருவரும் தத்தம் செயற்பாடுகளில் சிறந்து விளங்க எதிர்ப்பார்க்கப்பட்டனர்.  ஒருவர் தன் வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பதற்குத் தெரிவு செய்வதுவே அவரின் இலக்காகின்றது.  தொல்காப்பியர் பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது என  குறிப்பிடுகின்றார். (நூற்பா 74,பொருள்). மன்பதை தொழில்முறையினால் 7 பகுப்பினைக் கொண்டிருந்தது. இவை அறிவர், அரசர், மக்கள், கற்றோர், கலைஞர்கள், மேற்கூறிய பகுப்புகளில் சேராத பிறர்  என்போர் ஆவார் (நூற்பா 75, பொருள்)….

தொல்காப்பிய விளக்கம் – 6 (எழுத்ததிகாரம்)

 பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு   21. இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள.   ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையெழுத்துகள் என்று சொல்லப்படும்.   மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார் எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர்.   22. அம்மூவாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங்காலை   ஆராயுமிடத்து, அங்ஙனம் மூவினமாக வகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும், மொழிப்படுத்தி…

தொல்காப்பிய விளக்கம் – 5 (எழுத்ததிகாரம்)

            பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன் மரபு : 13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. மகரமெய்(ம்), தனக்குரிய அரை மாத்திரையிலும் குறுகி ஒலித்தலைப் பெற்றுள்ளது. ஆராயுமிடத்து, அஃது அவ்வாறு ஒலிக்கும் இடம் சிறுபான்மையாகி வரும். வேறொரு மெய்யோடு சேர்ந்து வருங்கால் அவ்வாறு ஒலிக்கும்.  ‘போலும்’ என்பது செய்யுளில் ‘போன்ம்’ என வரும். இதில் உள்ள ‘ம்’ அரை மாத்திரை பெறாது. கால்மாத்திரையே பெறும் என்பர்.  14. உட்பெறு புள்ளி உருவாகும்மே….

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 5

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள்   குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.   குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).  அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டது; மண்ணுமங்கலம் என அழைக்கப்பட்டது(நூற்பா.91,பொருள்). போர்க்களத்தில் வீரர் அடையும் மரணம் சீரும் சிறப்புமாக கொண்டாப்பட்டது.  அவரை மதிப்புச் செய்யும் வகையில்…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 4

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.3. மகப்பேறு குழந்தைப் பிறப்பு வரவேற்கப்பட்டது. திருமணத்தின் இயல்பான விளைவு குழந்தைப் பிறப்பேயாகும். அவர்கள் உடற்கூற்று அறிவியலை நன்கு அறிந்திருந்தமையால்  உடல் உடலறவு காலத்தை நன்கு கண்டறிந்ததுடன் குழந்தை பிறப்பையும் தம் கட்டுபாட்டில் கொண்டு இருந்தனர். அவர்கள் மிகுதியான குழந்தைகள் பெறுவதை வரவேற்றனர் எனத் தெரிகிறது (பொருள் 187). குழந்தைகள் மகிழ்ச்சிக்கான வாயிலாகக் கருதப்பட்டனரே யன்றி  சுமையாகக் கருதப்படவில்லை. கணவருக்கும், மனைவிக்கும் எப்பொழுதேனும் நேரும் ஊடலை தீர்ப்பதற்கு அவர்கள் முதன்மை பங்கு வகித்தனர். (பொருள். 147) 3.4. கல்வி…

தொல்காப்பிய விளக்கம் – 4

எழுத்துப்படலம்    –          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழின் தொடர்ச்சி)   நூன்மரபு   3.   அவற்றுள்     அ, இ,உ,     எ, ஒ என்னும் அப்பால்  ஐந்தும்     ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப   4. ஆ, ஈ, ஊ,  ஏ, ஐ     ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்    ஈர்  அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப      பன்னிரண்டு உயிர்களையும் குற்றெழுத்து  நெட்டெழுத்து என இருவகைப்படுத்தினர். குற்றெழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரையும்…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 3

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே…

தொல்காப்பிய விளக்கம்

–          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி)   எழுத்துப் படலம் நூன்மரபு எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும். க.       எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் என்ப சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.     இந்நூற்பா தமிழ் எழுத்துகள் …

தொல்காப்பிய விளக்கம் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) தொல்காப்பியம்எழுத்து, சொல், பொருள் எனும் முப்பெரும் பிரிவுகளையுடையது. எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியைப் பற்றியும் பொருள் தமிழ் இலக்கியத்தைப்பற்றியும் அறிவிப்னவாகும். இற்றைநாளில் மேலைநாட்டார், ஒரு மொழியின் பேச்சொலி பற்றி ஆராய்வதை ‘Phonology’ என்றும் சொற்கள்பற்றி ஆராய்வதை’ Morphology’ என்றும் அழைப்பர். இவை இரண்டும் மொழிநூலின் கூறுகளாகும். தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் ஆராய்ச்சியேயாகும்(Science of Tamil Language). உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறர்க்கு அறிவிப்பதற்குப் பயன்படும் கருவிதான் மொழி என்றாலும், உணர்ச்சி வயப்பட்ட உயர்ந்த எண்ணங்களையும் உண்மைகளையும் இனிமை…