தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல்.     தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது.  10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் உதவுக!

தமிழன்புடையீர் தனித்தமிழியக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்பெறும் மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்(1916-2016) நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தமிழ் அறிஞர் பெருமக்களால் தனித் தமிழ்இயக்க நூற்றாண்டு விழா பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு தனித்தமிழ் இயக்கநூற்றாண்டு விழா, திருவள்ளுவராண்டு       2047 கன்னி 09 (25-9-2016) ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு  அடிகளார் வாழ்ந்த பல்லவபுர மாளிகையில் சிறப்பாக நடை பெறவுள்ளது.    அவ்வமயம் புகழ்பெற்ற இக்குடும்பத்தின் பிறங்கடையினர்கள் (வழித் தோன்றல்கள்) கலந்துகொண்டு அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினை மகிழ்வுடன் நினைவுகூர…

சட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெறுவோர் – கி.வீரமணி கண்டனம்

அம்மணச் சாமியாரைச் சட்டமன்றத்தில் அமர வைத்து ஆசி பெறுவோர் – வெளிநாட்டுப் பெண்களின் உடையைப்பற்றி பேசலாமா?  அமைச்சர்களை ஆர்.எசு.எசு.எசு. ஊதுகுழலாக்காமல் நாட்டு வளர்ச்சியின் பக்கம்  தலைமையாளர்(தலைமையமைச்சர்) திரும்பச் செய்யட்டும்!  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை    வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பெண்கள் எத்தகைய உடை அணிந்து வரவேண்டும் என்று  பா.ச.க. அமைச்சர் தலையிட்டுப் பேசுவது  சரியா?  அம்மணச் சாமியாரை அரியானா சட்டப் பேரவையில் அமர்த்தி ஆசி பெற்றுக் கொள்ளும் பா.ச.க., வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது குறித்தெல்லாம் பேசலாமா? சக அமைச்சர்கள்…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்   தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி மொத்தப்பரிசு உரூபா. 3000.00 பரிசு வழங்குபவர் பொறிஞர் இரா.தேவதாசு அவர்கள்   கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.9.2016 முகவரி முனைவர் க.தமிழமல்லன் தலைவர் தனித்தமிழ் இயக்கம் 66.மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605009- தொ.பே 0413-2247072,9791629979 நெறிமுறைகள் அ4 தாளில் 4 பக்கம் கொண்ட குமுகாயக் கதைகள் பிறமொழிச்சொற்கள், பெயர்கள் கலவாத  நடையில் எழுதப்பெற வேண்டும்.  2. கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும் ஒருபடியில் மட்டும் பெயர் முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து…

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் :  தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலைப் பணிப்பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரம் வருமாறு: அறிக்கை எண்: 11/2016 விளம்பர எண்: 441  நாள் 29.07.2016 பணி:  இளநிலை  அறிவியல் அலுவலர்(Junior Scientific Officer) காலியிடங்கள்: 30…

காவித் துணிவேண்டா – பாரதியார்

காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே ! சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! சி.சுப்பிரமணிய பாரதியார்

சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!

சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!   உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னையில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை  ஏற்பாடு செய்ய உள்ளது உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு.   இந்த அமைப்பின்  கலந்துரையாடல் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில்   ஆடி 14, 2047 / 29-07-2016) காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்கினி அவர்கள் தலைமையில் நடந்தது.  முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள்…

தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை, பெண்களுக்கான போட்டிகள்

: தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்   ஒவ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் கீழே: போட்டி எண் 1 திரு. காமராசர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’ விதிமுறைகள்: போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம். (பள்ளி மாணவர்கள் தவிர) குறைந்தது 4 பக்கம் முதல்…

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன்     இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு  சென்னையில்  ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார்.    இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…

யாழ்.பல்கலையில் இனவெறி மோதலைத் தூண்டும் சிங்கள அரசு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி இனவெறியைத் தூண்டுவதைக் கண்டனம் செய்!   இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின்பொழுது, மாணவர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் ஆடி 01, 2047 / சூலை 16, 2016 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி, தமிழர் எதிர்ப்பு இனவெறிச் சீற்றத்தைத் தூண்டி விடுவதற்கு, அரசின் பகுதியினரும் முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சவைச் சூழ்ந்து கொண்டுள்ள இனவெறிக் கும்பலும் மேற்கொள்ளும் முயற்சிக்குப் பொதுவுடைமை நிகருரிமைக் கட்சியும் (சோசலிச சமத்துவக் கட்சி – சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான (சமத்துவத்துக்கான)…

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை   புதிய கல்விக் கொள்கை என்ற மத யானையைத் தமிழகத்தில் நுழையவிடக் கூடாது எனத் தமிழக அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.    தன்னுடைய அறிக்கையில் இது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   ”மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எசு.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய…

தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம்

தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம்  உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? என்று  மரு.இராமதாசு அறிக்கை வழி வினா எழுப்பிக் கண்டித்ததுள்ளார். பா.ம.க நிறுவனர்  மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-   மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை  விந்தையான தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் வாதிட்ட  முறையீட்டாளர் தமது தரப்பு வாதுரையைத் தமிழில் கூறியதை ஏற்க முடியாது எனக்…