சமற்கிருத வாரக் கொண்டாட்டங்கள் கூடா:இராமதாசு எதிர்ப்பு

  தமிழகத்தில் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எசு.இ. நிருவாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எசு.இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் வரும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள் வரை சமற்கிருத வாரம் கொண்டாடப் பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும்…

மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவு: வைகோ ஆவேசம்

  மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத மொழி, பண்பாடு,கலை ஒழுகலாறு திணிக்கப்படுவதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education-CBSE) இயக்குநர் சாதனா பராசுகர், சூன் 30, 2014 நாளிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்தியா முழுவதும் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டிலுள்ள 15 ஆயிரம் சி.பி.எசு.இ. பள்ளிகளிலும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள்…

பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட முதல்வர் கடும் எதிர்ப்பு

பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து, அவர் தலைமையாளருக்கு எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத் துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல் எழுதியுள்ளதை அறிந்தேன்….

சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்!

மத்திய அரசின் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!    நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குநர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள நடுவண் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும்…

குறுங்கதைப் போட்டி

  காட்சி ஊடக நுட்பகத்தின் (Visual Media Technologies) 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, துணுக்கு எழுத்தாளர்’சேலம் எசுகா’ உடன் இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி இந்தப் போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் கைப்பேசி இயங்கு தளங்களில் உலகத்தமிழர்கள் காணும் வகையில் கணியனாக (software) உருவாக்கப்படும். கதைகளை அனுப்பவும், தொடர்பிற்கும் மின்வரிகள் murali@visualmediatech.com yeskha@gmail.com கதைகள் அனுப்ப கடைசி நாள் : 20.07.2014 முதல் பரிசு : 20 ‘கிராம்’ வெள்ளி நாணயம் இரண்டாம் பரிசு : 10…

நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி

(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா) ‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம். படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும். கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது. கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக…

தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – முற்றுகைப் போராட்டம்

அன்புடையீர்! நேற்று இலங்கையில்… இன்று இந்தியாவில்… தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பதைக் கண்டித்து தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – தேர்வு மையம் முற்றுகைப் போராட்டம் தொடர்பான துண்டறிக்கை இணைத்துள்ளேன்.  பார்க்க.. படிக்க.. பரப்புக… ப.வேலுமணி   9710854760

சிரீஇராமகிருட்டிண விசயம் – சிறுகதைப் போட்டி

  சிரீஇராமகிருட்டிண மடத்தில் இருந்து வெளியாகும் சிரீஇராமகிருட்டிண விசயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ், சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   பகவான் சிரீஇராமகிருட்டிணர், அன்னை சிரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் வரலாறுகள், அவர்களது அறிவுரைகள் மற்றும் நமது சாத்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் சிரீஇராமகிருட்டிண விசயத்தில்…

செந்தமிழைப் போற்றுவோம்! அயல் மையலை விரட்டுவோம்!

  தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றம்   பெ. சிவசுப்பிரமணியன் ஆட்சி அலுவலர் (ஓய்வு) தலைவர் 25/47, இரண்டாவது தெரு, செரியன் நகர், புதுவண்ணையம்பதி, சென்னை – 81.   044 – 2591 0102 செந்தமிழைப் போற்றுவோம்!        அயல் மையலை விரட்டுவோம்! பேரன்புடையீர், வணக்கம். உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தாய்மொழியைப் போற்றுகின்றன. ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, ஆசுதிரேலியா என ஆறு கண்டங்களிலும் அவரவர் தாய்மொழியே கோலோச்சுகின்றன. எந்த நாட்டிலும் அயல் மொழி மோகம் காணப்படவில்லை!…

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:

அ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு    பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் .  தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது . அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு  பகுதியாக இவ்வாண்டு  எழுத்தாளர்கள்,    ஆய்வாளர்களுக்கான  25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறது . ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு  செய்யப்படும் தேர்வு பெறும் …

அசோகமித்திரனை வாசித்தல் – கருத்தரங்கம்

 சனி – வைகாசி 24, 2045 /07 சூன் 2014  சீனிவாச சாத்திரி அரங்கம் (காமதேனு திரையரங்கம் எதிரில்) மயிலாப்பூர் சென்னை – 600 004 அமர்வு ஒன்று – 10.00 – 12.30 அசோகமித்திரன் புனைவுலகின் சில பரிமாணங்கள் அசோகமித்திரன் கதைகளில்  திரை உலகம் – அம்சன் குமார் அசோகமித்திரன் கதையுலகில் பெற்றோர்களும் பிள்ளைகளும் – கல்யாண இராமன் இலக்கிய நயம் பாராட்டும் மரபில் அசோகமித்திரன் கதைகள் – பெருமாள் முருகன் உணவு இடைவேளை 12.30 – 1.45 அமர்வு இரண்டு 1.45…