“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!

இன்று நடைபெற இருந்த “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!   தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னையில் ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ என்ற தலைப்பிலான தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு, இன்று (புரட்டாசி 12, 2045 / 28.09.2014), நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.   இந்நிலையில், முதலமைச்சர் செயலலிதா வழக்குத் தொடர்பானத் தீர்ப்பால் தமிழகமெங்கும் பதற்றச்சூழல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநாடு வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது. மாநாடு நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.   மாநாடு…

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” – தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு

  தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தும் வாழ்வுரிமை மாநாடு காலம்: புரட்டாசி 12, 2045 / 28.09.2014, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இடம்: தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளி உலகத் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், மிகை எண்ணிக்கையில் நுழைந்து குடியேறிக் கொண்டும், கல்வி – வேலை வாய்ப்பு – தொழில் – வணிகங்களை கவர்ந்து கொண்டுமுள்ள அயலார் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் புரட்டாசி 12, 2045 / செப்டம்பர்…

கங்கைகொண்ட சோழபுரம் மண்ணின்மைந்தர்களுக்கு வேண்டுகோள்

சோழப்பெருவேந்தன் இராசராச சோழனது அருமைப்புதல்வன் முதலாம் இராசேந்திர சோழன், தி.பி. 1043 முதல் தி.பி. 1075 வரை / கி.பி.1012 முதல் 1044 வரை சோழ மண்ணில் ஆட்சி புரிந்த மாமன்னன். வடக்கே கங்கை முதல் தெற்கே கடாரம் வரை வெற்றி கண்ட வேந்தன்.கங்கை வெற்றிக்குப்பின் அவ்வெற்றியின் நினைவாக ஊரையும் கோவிலையும் தேர்ந்துவந்து அருகே சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றையும் வெட்டுவித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரத்தில் அம்மன்னன் எடுப்பித்த கோவில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் புகழோடு இன்றும் இருந்து வருகிறது. இக்கோவிலைப் பற்றியும் கங்கைகொண்ட…

‘முடிசூடிய மாமன்னன்’ – கவிதைப் போட்டி

மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டுக் ‘கண்ணியம்’ அன்பர்களுக்குக் கவிதைப் போட்டி இறுதி நாள் : ஐப்பசி 13, 2045 / 30.10.2014

புதுச்சேரி அரசிடம் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க வேண்டுகோள்!

 புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் ஒன்றைத் தனித்தமிழ் இயக்கம் முதலமைச்சர் அரங்கசாமி அவர்களிடம் நேரில் அளித்தது. தனித்தமிழ்இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தமிழறிஞர்களுடன் சென்று அளித்தார். தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் 32ஆண்டுகளுக்கும் மேல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் தமிழ் மொழி மேம்பாட்டுக்காகவும் இலக்கிய மொழிபெயர்ப்புப் பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வேண்டுகோளில் பல கட்சிகளைச்சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும்…

இக்காலத் தமிழ்க் கவிதை—இணையக் களஞ்சியம்

வணக்கம். இக்காலத் தமிழ்க் கவிதைபற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின்படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டும்.வெறும்விவரப் பட்டியலாக அமைந்துவிடாமல் இக்காலத்தமிழ்க்கவிதை வளர்ச்சியைக் காட்டும் ஆவணமாக இக் களஞ்சியம் அமைய வேண்டும்.ஆயிரக்கணக்கான தமிழ்க்கவிஞர்களையும் பல்லாயிரக்கணக்கான கவிதைநூல்களையும்தொகுத்து வழங்குதல் எளிய முயற்சியன்று.அதேநேரத்தில் அனைத்துக் கவிஞர்களும்ஒத்துழைத்தால் இப் பணியை முழுமையுற நிறைவேற்றிவிட முடியும்.கீழ்க்காணும்தரவுகளை ஒருங்குகுறி (யூனிகோடு)அச்சுருவில் அனுப்பி உதவுக. என் மின்னஞ்சல்:maraimalai@yahoo.com 1) வாழ்க்கைவரலாறு/தன்விவரம் 2) கவிதைப்பணி:முதலில் வெளிவந்த கவிதை-கவிதை வெளிவந்தஇதழ்கள்–காலம்-கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த காலம்–பெற்றவிருதுகள்/பாராட்டுகள் 3) கவிதைத் தொகுப்புகள்- ஒவ்வொரு…

ஈழப்படுகொலைகள் தொடர்பில் சான்றுகள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விப் படிவங்கள்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வல்லுநர் குழுவினர் உசாவல்களைத் தொடங்கி விட்டனர். அதற்கான, சான்றுரைகளைத் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து, அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்….

செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013

மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது :  நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…

தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! – த.தே.பொ.க.

இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து, தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! தமிழ்த்தேசப்பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!   நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எசு.இ) இயக்குநர் அண்மையில்இந்தியா முழுதும் உள்ள சி.பி.எசு.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும்  ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது மொழி – வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்குத்…

சமற்கிருத வாரக் கொண்டாட்டங்கள் கூடா:இராமதாசு எதிர்ப்பு

  தமிழகத்தில் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எசு.இ. நிருவாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எசு.இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் வரும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள் வரை சமற்கிருத வாரம் கொண்டாடப் பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும்…