இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 2 சுருக்கத் தலைப்புகள் இதற்கிணங்க  மேற்குறித்த இருபது தலைப்புகளையும்  – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவற்றை – இணைத்துப் பின்வரும் தலைப்புகளி்ல் காணலாம். கல்வி   தமிழ்வழிக்கல்வியும் இல்லை; தமிழ்மொழிக் கல்வியும்  முதன்மை நிலையில் இல்லை என்பதே தமிழ்நாட்டின் துன்பமாகும். ஆங்கிலவழிக்கல்வியின் துன்பத்துடன் இந்தி, சமசுகிருதம் முதலான மொழிகளை முதன்மொழியாகப்படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தமிழ் கற்பிக்க…

வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1181-1185 தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.00 தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத்…

நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 25 சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே! ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. நாலடியார் பாடல் 118 கருத்து: பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!…

வெருளி நோய்கள் 1176-1180 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1171-1175 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1176-1180 தந்தையர் நாள் (Father’s Day) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தையர் நாள் வெருளி.தந்தை வெருளி(Patrophobia) உள்ளவர்களுக்குத் தந்தையர் நாள் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 தந்தையின் உடன்பிறப்புகளான அத்தையர், பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆகியோர் மீதான தேவையற்ற பேரச்சம் தந்தையின் உடன்பிறப்பர் வெருளிதந்தையின் உடன்பிறப்புகள் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது வெருளி வருகிறது.00 தந்தைவழி மாமன் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தைவழி மாமன் வெருளி.தந்தைவழி மாமன் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் அவரகள்மீது…

வெருளி நோய்கள் 1166-1170 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1166-1170 தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00…

வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1156-1160:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1161-1165 புனைவுரு கதைப்பாத்திரமான சோனிகன்(Sonic) குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனிகன் வெருளிசப்பானியக் காணொளி ஆட்டத்தின் பெயரே ‘சோனிக்கு’ (Sonic, the Hedgehog). இப்பெயரில் திரைப்படமும வந்துள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களுக்கும் இதனை ஆடும் சிறுவர்களால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என அஞ்சும் பெற்றோர்களுக்கும் சோனிகன் வெருளி வருகிறது.‘க்‘ எழுத்தில் சொல் முடியாது. எனவே, ‘சோனிக்’ என்பது அன் விகுதி சேர்த்து சோனிகன் எனப்பட்டது.00 ஞாயிற்றுக்கிழமை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஞாயிற்றுக் கிழமை வெருளி.விடுமுறை நாள் என்பதால் வரும் சோம்பல்,…

சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 1036. Avyavaharika         அறநெறியற்ற Avyavaharika debts – அறநெறியற்ற கடன்கள் – மது, சூதாட்டம், பிற ஒழுக்கக் கேடான செயல்களால் ஏற்படும் கடன்கள் – இந்துச் சட்டத்தில் குறிக்கப்பெறுகிறது. 1037. Award          தீர்வம் தீர்வளிப்பு தீர்ப்பு வழங்கு award  என்றால் பொதுவாக நாம் விருது என்றும் சில நேரங்களில் பரிசு என்றும் கருதுகிறோம். ஆனால், வழங்கல் என்னும் பொருள் உண்டு. எனவே, சட்டத்துறையில் வழங்கப் பெறும் தீர்ப்பினைக் குறிக்கிறது. தீர்வு…

கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 30 **** “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.         – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7 தலைவி கூற்று திணை: நெய்தல் கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள். பொருள்: தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்…

ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)                                                  தமிழே விழி!                                 தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 நாள்: மாசி 10, 2057 ஞாயிறு 22.02.2026 காலை 10.00 மணி அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை :…

வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1146-1150: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1151-1155 சேலாப்பழம் (Cherry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் சேலாப்பழ வெருளி.சேலாப்பழத்தில் கொடிய நச்சுப்பு(சயனைடு) உள்ளது. ஒவ்வொரு கல்(கிராம்) விதையிலும் 0.17 கல்(கிராம்) நச்சுப்பு உள்ளது இருப்பதால், புதியதாக உடைக்கப்பட்ட பருப்பு ஒன்று அல்லது இரண்டு உட்கொண்டாலே உயிரை எடுக்கும். பருப்பின் அளவைப் பொறுத்து நச்சுத்தன்மை அளவும் மாறுபடும். பக்க விளைவுகளும் உண்டு. எனவே, இதனை மிகுதியாக உட்கொள்ளக் கூடாது. சேலாப்பழம் மீது வெருளி கொள்கின்றனர்.Kerasi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேலாப்பழம்(cherry)00 சேறு குறித்த பேரச்சம்…

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் –   நிறைவுரை 1 அன்புள்ள அவையோருக்கு வணக்கம்.   “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன்  தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07 தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல்   ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )              செந்தமிழ் நிலத்து…