கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்

சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1. இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல். இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது…

வெருளி நோய்கள் 1386 -1390: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1381 -1385:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1386 -1390 தொலை நோக்குப் பார்வை குறித்த வரம்பற்ற பேரச்சம் தொலை நோக்கு வெருளி.பிறரது தொலைநோக்குப் பார்வை குறித்துக் கவலையும் வெறுப்பும் அச்சமும் கொள்வோர் பெருகி வருகின்றனர்.00 தொழில் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் தொழில் வெருளிபணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது.ergon…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம்

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௮௰௩ – 383) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம் நாள் : சித்திரை 27, 2057 ஞாயிறு 10.05.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமையும் நூலாய்வும்:  இலக்குவனார் திருவள்ளுவன்        பாராட்டுரையும் பாராட்டுப் பாவும் முனைவர் புத்தேரி தானப்பன்…

கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! 24 இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 தொடர்ச்சி) கொல்லும் சொல் : ‘மாடல்’ தி.மு.க.தலைவருக்கு ஆங்கில மோகம் உள்ளது அனைவரும் அறிந்ததே! “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” எனப் பேசி வந்தாலும் ஆங்கிலச்சொல் அறிமுகமானால் அதைத்தான் பயன்படுத்துபவர். விளம்பரங்களிலும் புதிய திட்ட முழக்கங்களிலும் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதும் அறிந்ததே. நாம் இதனைப் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சிலவற்றைக் கேட்டுக் கொண்டாலும் திராவிட மாடல் பெயர்ப் பற்று அவரை விட்டுப் போகவில்லை. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.  …

இணைய உரை 07, தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி, 09052026

தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லிக் கிளை இணைய அரங்கு உரை 07 நாள்: சித்திரை 26, 2057 / 09.05.2026 இணைப்பிற்கு : https://meet.google.com/htz-tfer-zpz தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: முனைவர் அறவேந்தரன், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நெறியாள்கை : புத்தேரி தானப்பன் பிற அழைப்பிதழில் உள்ளவாறு

சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 தொடர்ச்சி) 1056. Appropriate allocation      உரிய ஒதுக்கீடு உரியவாறு ஒதுக்கீடு செய்தல் சட்டப்பணிகள் ஆளாண்மைச் சட்டம்1987, பிரிவு 4இல்(S. 4(c) LSAA,1987 – Section 4 in The Legal Services Authorities Act, 1987) தம் முடிவிற்கேற்ப நிதிகளைப் பயன்படுத்தவும் மாநில அதிகாரர்களுக்கும் மாவட்ட அதிகாரர்களுக்கும் உரியவாறு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. authority என்பது அதிகாரம் உள்ள அமைப்பு. அதிகாரி என்றும் குறிப்பிடுவர். அதிகாரம் உள்ள ஆளை அதிகாரன் என்று முன்னர்க் குறிப்பிட்டுள்ளனர். அதிகாரம்…

வெருளி நோய்கள் 1376 -1380: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1371 -1375: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1376 -1380 தொயாட்டா வண்டிகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொயாட்டா வெருளி.ஊர்தி வெருளி(ochophobia) உள்ளவர்களுக்கு வர வாய்ப்புள்ளது.00 தொப்பி குறித்த வரம்பற்ற பேரச்சம் தொப்பி வெருளி.Kapela என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தொப்பிகள் எனப் பொருள்.00 தொலை இயக்கி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொலை இயக்கி வெருளி.தொலைக்காட்சி, வானொலி, குளிரி, வாயில், ஊர்தி எனப் பலவற்றை இயக்க அல்லது திறக்க அன்றாடம் பயன்படுத்துவது தொலை இயக்கியாகும். தொலை இயக்கியைச் சரியாகப்பயன்படுத்தாமல் அல்லது அதில் பழுது இருந்தால்…

வெருளி நோய்கள் 1371 -1375: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1366-1370 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1371 -1375 தொடரியை விரும்புகிறேன்(I like trains) என்னும் இசைக்குழுவின் மீதான அளவுகடந்த பேரச்சம் தொடரிக்குழு வெருளி.இக்குழு, இங்கிலாந்தில் மேற்கு யார்க்சையரில்(West Yorkshire) உருவான அதிரடி இசைக்கான பிந்தைய மாற்று இசைக்குழு ஆகும்.00 தொடரி(Train) அல்லது தொடரி செல்லும் இருப்புப்பாதை(Railway) தொடர்பான மிகையான பேரச்சம் தொடரி வெருளி.Greek sidதros என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இரும்பு என்றும் dromos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஓடுதல் என்றும் பொருள். எனவே, இருப்புப்பாதையில் ஓடும் தொடர் வண்டியைக் குறிக்கிறது.இருப்புப் பாதையில்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32  – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33 பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! *** தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து  கடலும் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து : 22 அடிகள் 5 – 10 (பாடலின் மொத்த…

வெருளி நோய்கள் 1366 -1370: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1361-1365: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1366 -1370 தேனீக்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் தேனீ வெருளி.தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை.api சொல்லின் மூலமான apis என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேனீ.melissa என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேன்(ஈ).காண்க: ஆ நிலை வெருளி – Beephobia (2) 00 தாள்தைப்பி குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் தைப்பி வெருளி.தாள்களை இணைக்கும் பொழுது தவறுதலாகக் கையில் கம்பி குத்திவிடும் அல்லது தைத்து விடும்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1:  இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 கோப்புகளில் உள்ளவற்றைப் பார்ப்பதற்குச் சிறிது இடைவெளிவிட்டு இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் குறித்துப் பார்ப்போம். தமிழைக் கொலை செய்வதில் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. தமிழ் ஆர்வம் மிக்க ஊடகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாகக் கொலைகாரர்களே உள்ளனர். இவர்களுக்கெல்லாம் கடுந்தண்டனை விதித்தால்தான் தமிழ் வாழும். எனவே, இனியாவது ஊடகத்தினர்  கொலைகாரர்களாக இல்லாமல் தமிழை வாழ வைப்பவர்களாக…

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி

(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ௬. தமிழ்நாடும் தமிழும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 1.தமிழ்நாடு ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுமுள்ள குமரிமுனைக்குத் தென்பால் குமரிக்கண்டம் என்றோர் பெருநிலப்பரப்பு இருந்தது. அஃது எழுநூற்றுக் காவதம் பரவியிருந்தது. இன்றுள்ள சுமத்ரா, சாவா, போர்னியோ தீவுகளும் இலங்கைத் தீவும், இலக்கத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், மடகாசுகர் தீவு ஆகியவையும் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளே! குமரிக்கண்டம் ஐந்துமுறை கடற்கோள்களுக்கு ஆட்பட்டமையால் அழிந்து போயிற்று; அங்குதான் முதல் மாந்தன் தோன்றினான்; அங்கு வாழ்ந்த…