குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 44 புகழைத் தருவது நற்றுணையே! மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457) மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே! பதவுரை: மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம்,…
வெருளி நோய்கள் 1296 -1300 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1291 -1295 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1296 -1300 தீயிலை அல்லது ஈவில் இலீபி(Evilleafy) என்னும் அசைவூட்டப்படப் பாத்திரத்தின் மீதான அளவுகடந்த பேரச்சம் தீயிலை வெருளி.கற்பனைத் தீவிற்கான சண்டை(BFDI- Battle for Dream Island), மறுபடியும் கற்பைனத் தீவிற்கான சண்டை (BDFIA-Battle for Dream Island Again) ஆகிய மெய்ம்மைக் காட்சியில் (reality show)இடம் பெறும் கற்பனை அசைவூட்டப் பாத்திரமே தீயிலையாள் / தீயிலை.00 தீயச் சூழல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயச் சூழல் வெருளிபொதுவாக மக்கள் தீய…
இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 6: கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக! – இலக்குவனார்திருவள்ளுவன்
(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக!: தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 6 கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக! கல்வியகங்கள் வணிக நிறுவனங்களாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் பொழுதுதான் இவர்களிடையே நல்லுறவு அமையும்; கல்வியிலும் மாணாக்கர்கள் சிறப்பர். ஆசிரியர்கள் பருவத்தேர்வு முடிவுகளின் பொழுது மட்டும் பெற்றோரை அழைக்காமல், சுழற்சி முறையில் தொடக்கக் காலத்திலிருந்தே பெற்றோரை வரவழைத்து மாணாக்கர் கல்விநிலை குறித்துக் கலந்து பேசி அதற்கேற்ப இரு தரப்பாரும் தங்களை…
வெருளி நோய்கள் 1291 -1295 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1291 -1295 தீங்கிழைக்கும் தீயவன் அல்லது தீயவள் குறித்த அளவுகடந்த பேரச்சம் தீயர் வெருளி.தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பவர்களைக் கண்டு வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் தீய பாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தும் பேரச்சத்திற்கு ஆளாவர். பொறாமையால் அல்லது பழி வாங்குவதற்காகத் தனக்குச் சூனியம் வைப்பதாக அல்லது மந்திரத் தகடு வைப்பதாக எண்ணியும் பிறர் மீது வெறுப்பும் சினமும் கொண்டு அஞ்சுவர்.00 தீச்செய்தி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீச்செய்தி…
வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1281 -1285 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1286 -1290 தீக்கோழி(நெருப்புக் கோழி) மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் தீக்கோழி வெருளி.Strouthokamel என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தீக்கோழி.“தீக்கோழி அருகே இருந்து ஒலி எழுப்பாதீர். அது உங்கள் கண்களைக் கிழித்து நெஞ்சகத்தைப் பிளந்து விடும்’ என்று சொல்லப்படுவதால் தீக்கோழி குறித்த பேரச்சம் வருகிறது.பொதுவாக நெருப்புக் கோழி என்று சொல்லப்பட்டாலும் எழுத்துச் சுருக்கத்திற்காகத் தீக்கோழி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.00 தீக்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் தீக்காய வெருளி.தனக்குத் தீக்காயம் ஏற்பட்டால் அது குறித்து…
வெருளி நோய்கள் 1281 -1285 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1276-1280 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1281 -1285 திறனாய்வு அல்லது இடித்துரை குறித்த வரம்பற்ற பேரச்சம் திறனாய்வு வெருளி.நிறை காண்பதற்கான குறை கூறுதல் என்பது வரவேற்கத்தக்கதுதான். எனினும் தங்கள் செயல் அல்லது படைப்பைப் பற்றித் தவறாகக் கூறுவதாக எண்ணி அஞ்சுவோர் உள்ளனர். சிலர் நடுநிலை தவறித் தனிப்பட்ட தாக்குதலாகத் திறனாய்வு செய்வர். இதனால் திறனாய்வு என்றாலே தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.enissein என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குறை / பழிமொழி.001282.திறன் கருவி வெருளி – Dachoingphobia / Ergalilektriphobia…
சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 1043. Axiom ஏற்புடைமை சான்று தேவையில்லாமல் மெய்யாக அறியப்படும் வெள்ளிடையுண்மை; பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுவது. ஏற்புடைமை அடிப்படை யிலேயே வாதங்கள் எழுவதால் அடிப்படைக் கோட்பாடு எனக் கொள்ளப்படுகிறது. சட்டம் சார்ந்த வாதத்திற்கான அடிப்படைத் தளமாகவும் செயல்படுகிறது. சான்றாக, ஒப்பந்தச் சட்டத்தில், ஒப்பந்தத்திற்கு இரு தரப்பின் ஒப்புமை தேவை என்பது அடிப்படைக் கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1044. Axiomatic வெளிப்படையாகத் தெரிந்த மூதுரையார்ந்த தானே தெளிவான, ஐயத்திற்கு இடமில்லாத(சந்தேகமில்லாத), மறுக்க…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23 எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு இதே நேரம் நாம் எத்தனை, எத்துணை என்பவற்றை வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். உரிய வேறுபாட்டை நன்கு அறிந்து அதற்கேற்ப பயன்படுத்த வேண்டும். எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிப்பிடும். சான்றாக ஒரு புத்தகம், இரண்டு மடல்கள், மூன்று வீடுகள், நான்கு அறைகள், ஐந்து பேர்கள், ஆறு…
வெருளி நோய்கள் 1276 -1280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1271 -1275 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1276 -1280 திரைப்படம் அல்லது திரையரங்குபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் திரைப்பட வெருளி.திரைப்படம் பார்ப்பதற்கும் திரையரங்குகள் செல்வதற்கும் காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டு வெருளிக்கு ஆளானவர்களுக்கும் திரைஅரங்கு இருட்டு அளவற்ற பேரச்சத்தை அளிக்கிறது. திரையரங்க வசதிக் குறைபாடுகளால் எரிச்சலுற்றும் வெறுப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள், கூச்சமளிக்கும் நெருக்கமான காட்சிகள் போன்றவற்றாலும் திரைப்பட வெறுப்பு கொள்வோர் உள்ளனர். இவற்றைப்பார்க்கும் இளம் பருவத்தினர் கெட்டுப்போவர் எனவும் இவற்றின்மீது வெறுப்பு கொள்கின்றனர். இப்பொழுது திரையரங்கு…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது- இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது-தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது எத்தனைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என இக்கோப்பில் இடம் பெற்றுள்ளது. அத்தனை, இத்தனை,எத்தனை என்னும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது. சான்றுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். இச்சொற்கள் வரும் முழுத் தாெடரை அளிக்காமல் சுருக்கமாகவே பார்ப்போம். அத்தனை கடைகளும் அத்தனை காவலர்களும் அத்தனை கிணறுகளிலும் அத்தனை கூடைகளில்…
வெருளி நோய்கள் 1266 -1270 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1261 -1265 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1266 -1270 அமெரிக்கத் தலைவரான தொனால்டு திரம்பு(Donald Trump) மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் தொனால்டு திரம்பு வெருளி எனப்படும்.அமெரிக்காவின் 45 ஆவது அரசத் தலைவராக இப்போது வீற்றிருக்கும் தொனால்டு திரம்பு, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வார், 3ஆவது உலகப்போரை உ்ண்டாக்கி விடுவார் என்பன போன்ற எண்ணங்கள் ஒருசாராரிடம் உள்ளன. அவர்களில் சிலர் திரம்பு ஆட்சியிலிருந்து நீங்கும் வரை அமெரிக்காவில் இருக்கக்கூடாது என வெளிநாட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளனர். ஒரு சாராருக்கு அவர் படத்தைப் பார்த்தாலே…
குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 42: மனம், செயல் ஆகியவற்றின் தூய்மை இனத்தூய்மையாலே வரும்.- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 43 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௬ – 456) மனத்தூய்மை உடையவர்க்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியன நல்லவையாய் அமையும். தூய இனம் உடையவர்க்கு நன்மை விளைவிக்காத செயல் எதுவுமில்லை. பதவுரை: மனம்-உள்ளம்; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; எச்சம்- புகழ்; நன்றாகும்-நன்மையுடையதாகும்; இனம்-குழு; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; இல்லை-இல்லை; நன்று-நன்மையுடையது; ஆகா-ஆகாத; வினை-செயல். எச்சம் என்பதற்கு…
