பாரதிதாசர்க்கு இரங்கற்பா

ஒப்பில் புலவர் உயர்வில் கலைஞர் இப்புவி கண்ட எதிரிலா வலத்தினர் தமிழ்த்தாய் புதல்வர் தனித்தமிழ்க் காவலர் தாழ்த்தாத் தலையர் தளரா நெஞ்சினர் பாரதி தாசர் பான்மை பலப்பல பாரும் அறியும் ஊரும் உணரும் இத்தகு சிறப்பில் ஏமமுறு கவிஞர் கத்தவே எம்மைப் பிரிந்தது என்கொல்? தமிழர் உணர்வறைப் போயது கண்டோ? தமிழ்மொழி தமிழகத்தில் தளர்வற உணர்ந்தோ? இந்திக் கிங்கே இடம் வரக் கண்டோ? எதனால் புத்தேன் உலகம் புக்கார்? எல்லாம் தெள்ளிதின் உணரும் இறையே எமக்குச் செய்க உரையே. – க.தி.நாகராசன் – குறள்நெறி:…

பாரதிதாசன் கவிதைகள் – வி.ஆர்.எம்.செட்டியார்.

  பாரதிதாசன் கவிதைகளிலே நாம் உண்மையைக் காண்கின்றோம்; அழகை நுகர்கிறோம்; சக்தியை உணர்கிறோம். கவிதையின் படைப்பு எழிலை உணர்ந்து பாடும் பாரதிதாசன், எவ்வளவு சிறந்த உள்ள உந்துணர்வுடன் கவிதை பொழிகின்றார்! கவிஞர் எதையும் அனுபவித்தே எழுதுகின்றார். அவருடைய ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள், சிந்தனைகளைக் கவ்விச் செல்லும் சிட்டுக் குருவிகள்; குருவியின் கூரிய மூக்குப் போல அவருடைய மொழி கூர்மை பெற்றுவிட்டது.   ‘‘அழகின் சிரிப்பு’’ என்ற கவிதை நூலின் தலைப்பே பட்டறிவு மொழியின் அதிகாரத்தை உவமை நயத்துடன் எடுத்துக் காட்டவில்லையா?   அழகு…

வள்ளுவரும் அரசியலும் 5 – முனைவர் பா.நடராசன்

   (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 06, 2014 இதழின் தொடர்ச்சி) தெரிந்து வினையாடல்   தன் மாட்டு அன்பும் அறிவும் தனக்கென அவாவின்மையும், செய்ய வேண்டும் வினையில் துணிவுமுடையாரைத் தெரிந்து செயலில் ஈடுபடுத்த வேண்டும். அந்த வினைக்குந் தகுந்தவனை எவன் என்று கண்டு அவன் மாட்டு வினையின் ஒப்படைத்துவிட வேண்டும். சுற்றம் தழுவல்  தனக்கு அதிகாரம் வந்துவிட்டதென்று இறுமாப்படைந்து, பழமையை மறத்தலாகாது. பழைய நண்பர்களைச் சுற்றமாகத் தழுவுதல் வேண்டும். பொதுநோக்கால் பயனில்லை. வரிசையால் அவரவர்க்கேற்ற முறையில் ஆதரவு தருதல் வேண்டும்….

புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம் – வெற்றிவேலன்

தமிழ் மகனே,   திரைகடல் ஓடித் திரவியம் காண இருண்ட கண்டம் இலங்கை, பர்மர சென்றாய்; உழைத்தாய்; கல்லை உடைத்தாய்; பிற நாட்டின் முன்னேற்றம் கருதி மாட்டினும் இழிவாய் முனைந்து உழைத்தாய்! ஈட்டியதென்ன? இழி சொல் பகைமை காட்டி நின்றனர், உன் உழைப்பால் உயர்ந்தோர்! அயர்வைக் கருதாது வியர்வை சிந்தி உயர்வைக் கருதி உழைத்தாய் பிறருக்கு! உன்றன் நேர்மையை உணர்ந்த மற்றோர் குன்றா உழைப்பை உறிஞ்சி உயர்ந்தனர்; சாற்றைப் பிழிந்து சக்கை எறிவது உலகின் இயற்கை; பாலைக் கறந்து, பின் பசுவைக் கொல்லும் கயமை…

திருக்குறளில் உருவகம் 6 – பேராசிரியர் வீ.ஒப்பிலி

  (பங்குனி 30, தி.ஆ.2045 / ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி)   வெள்ளத்தைப் போல் நீருக்கடியில் உள்ள பாறையும் தீங்கின் சின்னமாகிறது. உள்ளதை மறைப்பாரின் ‘இல்லை’ என்ற சொல் நீரினுள் பாறையாகிறது. இரவென்னும் ஏமாப்புஇல் தோணி கரவென்னும் பார்தாக்கப்பக்கு விடும்.   ஊர்நடுவேயுள்ள குளத்து நீர் ஈவாரின் செல்வத்திற்கு உருவகமாகிறது. ஈயாது செல்வத்தைச் சேர்ப்போரின் உள்ளம் இக்குறளில் பாறையாக மாறிவிடுகிறது. இரத்தல் உடைந்த மரக்கலம்; இரந்து வாழ்பவன் இறைவனின் திருவடியைப் பற்றாது, உடையும் மரக்கலத்தைத் துணை கொண்டு, பிறவிப் பெருங்கடலைக் கடக்க…

தொல்காப்பிய விளக்கம் 12 – பேராசிரியர் சி. இலக்குவனார்

– தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (பங்குனி 30, தி.ஆ.2045 / , ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) 61 க, த, ந, ப.ம எனும் ஆவைந்து எழுத்தும் எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. க, த, ந, ப.ம எனும் = க,தந,ப,ம என்று சொல்லப்படும் ஆவைந்து எழுத்தும் = அந்த ஐந்து எழுத்துகளும், எல்லா உயிரோடும் = எல்லா (பன்னிரண்டு) உயிர்களுடனும், செல்லுமார் முதலே = முதல் எழுத்துகளாக வருவதற்குச் செல்லும். மேல் நூற்பாவில் மெய் எழுத்துக்கள்…

புரட்சிக் கவிஞர் புகழுடன் எய்தினார் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

    தமிழிலக்கிய வானில் எழிலுறு ஞாயிறாக இலங்கித் தம் இன்றமிழ்ப் பாக்கதிர்களால் மூட நம்பிக்கை இருளைப் போக்கிக் கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சித்திரைத் திங்கள் 9ஆம் நாளில் (21-4-64இல்) பூதவுடல் நீக்கிப் புகழ் உடல் எய்திவிட்டார். அச்சமின்றி ஆண்மையுடன் அடிமை நிலையை எதிர்த்து அழகிய பாடல்களை எழுதிய கைகள் அயர்ந்துவிட்டன; சூழ்ந்திருப்போர் விருப்பு வெறுப்பினை நோக்காது உள்ளத்தில் தோன்றியனவற்றை ஒளிமறைவின்றி முழங்கிய வாய் ஓய்ந்துவிட்டது. எழுபத்துமூன்று ஆண்டுகள் இவ்வுலகில் நடமாடிய கால்கள் சாய்ந்துவிட்டன. இனி நம் ஏறனைய பீடு நடைப்பெரும் புலவரைப்…

மே முதல் நாளை பாரதிதாசனார் நினைவுநாளாகக் கொண்டாடுவீர்! நாவலர் வேண்டுகோள்:

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்கை எய்தினார்; மறைந்துவிட்டார்! அவருடைய எடுப்பான தோற்றத்தை இனிக் காண முடியாது! செஞ்சொற் கவிதை இன்ப ஊற்று அவரது எழுதுகோலிலிருந்து இனி பீரிட்டெழும்போது; அவர் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டார் & என்பதையெல்லாம் எண்ணவே நெஞ்சம் கூசுகிற; சொல்ல நா தழுதழுக்கிறது!   தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் தமிழ்க் கவிஞரெனத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மறைவு பொதுவாகத் தமிழகத்திற்கு குறிப்பாக கவிஞர் கவிஞர் உலகிற்கு ஈடு…

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன்

  புரட்சிக் கவிஞர் என்ற பெருஞ் சிறப்புக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தாழ்ந்துபோன தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவனாகப் பவனி வந்தார். பழமைச் சமுதாயத்தைப் பாட்டால் பண்படுத்திய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அடிமை வாழ்வினரை புரிய உலகு நோக்கி விரைந்துவர அழைத்தார். அவல வாழ்வினருக்கும் அஞ்சாமைத் திறன் ஊட்டினார். “இருட்டறையில் உள்ள தடா உலகம் சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே – வெருட்டுவது பகுத்தறிவு இலையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்” என்று குரல் கொடுத்தபிறகுதான் மருட்டுகின்ற மதத் தலைவரை விரட்டுகின்ற வீரமெல்லாம் தமிழ் மக்களுக்கு…

கவிக்குயில் எங்கே – நாகை சு.இளவழகன்

புயல்போல பாட்டெழுதிச் சுழல வைத்தப் புதுச்சேரிக் கவிக்குயிலே பறந்ததெங்கே? இயற்கையெனும் கொடும்பாவிக் குரலைக் கேட்டோ எழுந்தெம்மைப் பிரிந்தே நீ சென்றுவிட்டாய் திரும்பாத பெரும்பயணம் சென்ற ஐயா திருநாட்டை மறந்தாயோ? என்று காண்போம். அரும்பிவரும் தமிழுலகின் பொற்காலத்தை அருகிருந்து பாராமல் எங்கே சென்றாய்? அழுகின்ற எங்களையார் ஆற்ற வல்லார்? அடுத்த பல தலைமுறைக்கும் வீர மூட்டித் தொழுகின்ற நிலைபெற்றாய்; உன்னை இந்தத் தொல்லுலகில் இனியென்று காண்போம் ஐயா பாரதிக்கு தாசனென எழுந்த நீயோ பைந்தமிழின் எதிரிகளை ஒடுக்கி வைத்தாய் பாரதிரத் தமிழ்பாடி வந்தாய், இன்றோ பாட்டெல்லாம்…

வெண்முகிலே! நில்மின், செல்மின்! – புதுகை மா.நாகூரான்

  1.வெண்முகிலே! வேகங்குறைமின், நில்மின் நில்மின் வேதனையால் கூறுகின்றேன் கேன்மின் கேன்மின் ஒண்கவிதை தந்திட்ட எந்தண் மூத்தோன் ஒளிர்கின்ற உன்னுலகில் உலவி வந்தான் மண்ணுலகில் அதனினைவாய் அலைக்கப்பட்டு மன்றாடும் என்செயலை அவர்க்குச் சொல்வி விண்ணுலகை விட்டுவிட்டு இங்கே வந்து விழிப்புள்ள என்னில்லில் வாழச் சொல்லேன். 2. மொழியென்றால் வேம்பென்று வாழ்ந்து சாகும் விழிகெட்ட வீணர்க்கு அறிவை யூட்ட மொழிக்கென்று வாழ்ந்து இறந்த மூத்தோர் தம்மை வழிகேட்க மாண்டாயோ? அன்றி யிந்த மொழிக்காக செய்ததெல்லாம் வீணே என்று மொழிப்பற்றை விட்டுவிட்டு விழியை மூடி மொழியாது ஓய்வெடுக்க…

நெஞ்சில் வாழ்க நிலைத்து – மு.வில்லவன்

  தனிச்சொல் தமிழ்ச் சொல்லைச் சேர்த்தொன்றாய்ப் பாடி கனிச்சுவை ஈந்த தலைவா – கனி சுவைத்த நற்றமிழர் நெஞ்சினில் நீங்காது நீவாழ்ந்து இற்றரையில் வாழ்க இனிது.   தட்டி எழுப்பி தமிழுர்வு ஊட்டி வந்(து) எட்டி நீ சென்றாய் கவித்தலைவா! –  விட்டின்று சென்றாலும் உன் கவிதைப் பார்க்கும் தமிழ் நெஞ்சில் என்றென்றும் வாழ்க இனிது.   மொழி வாழ்ந்தால் வாழ்வுண்டு நற்றமிழர்க்கும்; பாரில் மொழியழிந்தால் வாழ்வில்லை காண்பீர் –  விழிபோன்று காப்பீர் எனவுரைத்த பாவேந்தர்! நின்வழியை காப்பவர் நெஞ்சில் புகு.   வண்டமிழர்…