(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி)

தமிழ்த் தெய்வ வணக்கம்

தாயே உயிரே தமிழே நினை வணங்கும்

சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே

தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்

கிலை யென்றால் இன்பமெனக் கேது.

பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்

ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும்

மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே

சாவா வரமெனக்குத் தா.

தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே

 என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால்

தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்

அடிக்கே எனையாண் டருள். 

என் பிள்ளைமைப் பருவத்திலேயே எனக்குக் கவிதை யுணர்வை ஊட்டி யூட்டி வளர்த்தவரும் என் தாய் மாமனுமான காலஞ் சென்ற கி. துரைசாமி அவர்கட்கு இந்நூலைப் படைத்து வணங்குகின்றேன்.

– முடியரசன்

(தொடரும்)

கவிஞர் முடியரசன்பூங்கொடி