(பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக- தொடர்ச்சி)

2. பழியுரை காதை

வஞ்சியின் கவலை

முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட

நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த

பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி

இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம்

5 தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத்

தைத்திரு நாளில் தமிழிசை வழங்க

வாராத் துயரால் மயங்கிய வஞ்சி

சோரா  நின்றனள் ; தன்மகட் டோழி

தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும்

10 தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள்,

தேன்மொழி செல்லல்

அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி நிலைக்கு

வெவ்வுயிர்க் தேங்கும் வினையினள் ஆதலின்

பூங்கொடி தன்னோ டருண்மொழி வைகும்

 பாங்குடை இல்லிற் புகுந்தனள் பாங்கி;

15 அருண்மொழி மேனி அழிநலங் கண்டு

மருண்மனங் கொண்டு மங்காய் நின்னை

இவ்வூர் மாக்கள் இகழ்ந்துரை கூறினர் ;

(தொடரும்)

கவிஞர் முடியரசன்பூங்கொடி