(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி)

 

attai_ezhilarasi

  1. துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய்

மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால்

இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ”

எனலும் அரசியும் இறும்பூ தெய்தி

தமையர் மறைவால் தாங்காத் துயரமும்

  1. நீதி வேண்டி நெருங்கிய மன்றில்

மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும்

கொண்ட அரசி கூற்றெனச் சினந்து

வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து

இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள்.

  1. தமையரும் தமரும் அமைவுடை யாட்களும்

யாருமின்றி யலங்கோ லமாக

இருக்கக் கண்டு இரங்கின ளாயினும்

தமையர் கொடுமையும் தாழ்ந்தோர் துயரைப்

போக்கு முணர்வும் புத்துயி ரளிக்க

  1. அமைவுடை வாணாள் அன்புடன் கழிக்க

ஆவன கருதி அன்றே விரைந்து

காணார் கேளார் கால்முடப் பட்டோர்

பிணிநடுக் குற்றோர் புகலிடம் அற்றோர்

ஆடை யின்றி வாடையின் மெலிந்தோர்

  1. உண்டி யின்றி ஒட்டிய வயிற்றினர்

குடிசை யின்றிக் குரங்கென வதிவோர்

வேலை யற்று வீணராய்த் திரிவோர்

முதலிய மக்களை இதமுடன் கூட்டி

“உலகை யியக்கும் ஒருபெரும் கடவுள்

550         பசியே என்பதைப் பகர்தலும் வேண்டா

அப்பசி வெல்லும் ஆற்றலும் அற்றோம்;

எம்முடைச் செல்வம் நும்முடைத்தாகச்

செய்து அன்புடன் சேர்ந்தே உழைப்போம்

உழைப்பின் பயனையும் ஒருங்கே துய்த்து 15

  1. எஞ்சிய பகுதியை எய்ப்பில் வைப்பாய்க்

கொண்டு வாழக் கூடுவீ ராக”

எனலும் யாவரும் இசைந்தனர் ஒருங்கே

 

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18)