தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி  படிப்பு, பரப்புரை ஆகியவற்றுடன் படைப்புப் பணியிலும் பேராசிரியர் இலக்குவனார் ஈடுபட்டார். பண்டைநலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் நல்கிய படைப்புப் போராளியாகவும் பேராசிரியர் தம்மை வெளிப்படுத்தி உள்ளார். கல்விக்கூட அளவில் கவிதைகளும் இதழ்கள் வழிக் கட்டுரைகளும் படைத்த பேராசிரியர் வித்துவான் தொடக்கநிலை மாணவராக இருந்த பொழுதே சிறந்த நூலாசிரியராகவும் மொழிபெயர்ப்பு வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்; ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து தழீஇக் கொண்டு கெழீஇய காதல் இன்பம் துய்த்தபின்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி)   துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து                 கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி)   அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு,                 “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12) “இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல் இயலா தெனினும் இனியது மதுவே பாற்சுவை யறியார் பாலுக் காக வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின் காதலை யறியாய்! காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்?” எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு “காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட மன்னாக் காதல் மன்னிய கருவியாம் மக்களை யழித்திட வலிபெற்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி)   இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ? இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும் அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை *…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி) புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக் களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத் தோழ னின்றிச் சோகமுற் றிடுவள் வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய மரங்களின் மீது, மார்புறத் தழுவிய தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர் இவ்வகை நிலையை யெய்திய அரசியும் குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய * கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள் கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று அரசியை யீர்க்க அவளும் ஒடி எடுத்தனள்; தைத்து இவளே அன்பின் தோழனுக்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 108   கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி)   உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள் காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத் துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை “வாடிய மலரென மங்கை தோன்றிடக் காரணம் யாதெனக்” கண்டோர் வினவ “நோயா லவளும் நோத லுற்றனள் தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும் தீர்ந்திடக் காணேம்! செய்வதென் யாமும்” என்றேயியம்பிக் கன்றிய மனதுடன் உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென எழிலர சியுந்தன் *இகுளை யோடும்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 9 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 9 ஆயினும் அவளும் அடிக்கடி வைகலும் வினவத் தொடங்கினள் வீணே வருந்திக் காரணம் பலசொலிக் கழித்தன ராயினும் மூத்தோ னொருவன் முனிந்தன னோக்கி 8 “ஆடலனென்ற ஆடவனைத் தினமும் வந்து வினவக் காரணம் யாதோ? என்ன முறையினன்; என்றும் வினவுவாய் வினவின் இனிநீ விரும்பா ஒர்விடை விரும்பி யளிப்போ மென்ற விடைத்தனன்” அன்பனைக் காணா அவ்வெழி லரசி அடுத்துச் சொல்லின் கெடுக்கவுந் துணிவரென் றஞ்சிக் கூறினள் மிஞ்சிய வார்த்தை உள்ளில்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)     இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை.  தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…