(தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்- தொடர்ச்சி)

ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்)  தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும்  என்கின்றார்இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும்.  அன்றுதான் அறிவியல்தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதைதமிழ்ச்சங்கள் இருந்தனவென்பதற்குச் சான்றில்லைதிருவள்ளுவர் ஆண்டு கி.மு.31 என்பது தவறுகி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்’ என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகம்  எழுதியுள்ளதாக அறிவிப்பு அச்சிட்டு வழங்கியுள்ளார். மேலும், ஒருவர் தமிழ் நெடுங்கணக்கில்  எழுத்துகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று அறைகின்றார்.

ஆகவே, ஒவ்வொருவரும் தம்தம் மனம் போகும் போக்கில் அறிவுரையும், ஆய்வுரையும் புகலுகின்றனரேயன்றி, நடுநின்று ஆக்கப்பாட்டு நெறியில், தமிழ் வளர்ச்சிக்குரிய வகையில் உருப்படியான கருத்துகளை நவின்றிலர்.  கரணியம் என்னவெனில், அவர்கள் தமிழ் மொழியின் தனியியல்புகளை அறியாமையும், மொழியியல்  ஆய்வு இன்மையுமேயாகும்.

தமிழ் மொழியில், ஏனைய மொழிகளைப் போன்று பேச்சுமொழிக்கும், எழுத்து மொழிக்கும் வேறுபாடில்லை.  எழுதுவது  போன்று பேசக்கூடிய  மொழி தமிழ் மொழி மட்டுமே!  எழுத்து மொழியைப் போல் பேசாமல் இருப்பதும்தமிழ் மொழியைப்   பொருளற்றதாக ஆக்கிவிடும்.

           பெண்ணைப் பொண்ணு என்பதும்,

           பிள்ளையைப் புள்ள என்பதும்,

           போயிற்று என்பதைப் போச்சு என்பதும்,

           ஆயிற்று என்பதை ஆச்சு என்பதும் 

  இத்தகையன.

பெண் என்பது பௌ என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்தது.

பௌ என்றால்  விரும்பு, ஆசைப்படு என்பன பொருள்.

பொண் என்பது பொள் என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்தது.

பொள் என்பது துளையிடு, வெட்டு என்பன அதன் பொருள்

புள்ள என்பதும் அதுபோன்றதே!

புள் +அ ஸ்ரீ  புள்ள

புள் என்றால் பறவை, வண்டு என்பன பொருள்.

பிள்ளை என்பது சில இடங்களில் ஆண்பிள்ளை என்றும், சில இடங்களில் பெண்பிள்ளை என்றும் வழங்குவர்.  இவ்வாறு மக்களின் பேச்சுவழக்கில் உள்ள அனைத்துச் சொற்களையும், சொற்பிறப்பியல் ஆய்வு செய்தால், எழுத்துவழக்கிற்கும், பேச்சு வழக்கிற்கும் உள்ள  பொருள்  வேறுபாடு  புலனாகும்.

படித்தவர்கள் சரியாகப் பலுக்கினால், படிக்காதவர்களும் அவ்வாறே பின்பற்றுவர். அப்பொழுது பேச்சுமொழி, எழுத்துமொழி இரண்டிற்கும் வேறுபாடு இன்றி, இரண்டும் ஒன்றாகிவிடும்.

பெரிய படிப்பாளிகள் என்று சொல்லப்படுகின்ற  தமிழ் மொழியாய்வு செய்து பண்டாரகர் (னுழஉவழசயவந) பட்டங்கள் பெற்றவர்கள் கூட இன்று இப்படித்தான் பேசுகின்றனர். தொடக்கப் பள்ளிகளில்  கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பித்தால் இந்நிலை மாறும்? விளையும் பொழுதிலே ஏற்படும் மாற்றம் என்றும் மாறாதுமறையாது.  அங்ஙனம் செய்வதை விட்டுவிட்டு வேலியே பயிரை மேய்ந்தால் தமிழ்மொழிப்பயிர் எப்படி வளரும்? எங்ஙனம் வாழும்?

உலக மொழிகள் அனைத்திலும் தனித்தியங்கும் தனிவியல்பு உடையது தமிழ்மொழி ஒன்றே!  அதனாற்றான் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்னும் பெரும்பேற்றிற்குரியது.

                           (நன்றி : குறளியம்)