(முன் பகுதியின் தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

(திருவள்ளுவர், திருக்குறள்,) 

காமத்துப்பால்

119. பசப்புறு பரவல் – பிரிவால் வந்த பசலையைக் கூறல்

  • 101.  காதலரின் பிரிவிற்கு இசைந்தேன் பசலைக்கு யார் காரணமென்பேன்? (1181)
  • 102. காதலர் தந்தார் என உடலெங்கும் பரவுகிறது பசலை. (1182)
  • 103. அழகையும் நாணத்தையும் கொண்டார்; காமநோயும் பசலையும் தந்தார். (1183)
  • 104. பேச்சிலும் நினைப்பிலும் அவரே! வந்தது ஏனோ பசலை? (1184)
  • 105. காதலர் பிரியும் போதே பசலையும் பரவுகிறதே (1185)
  • 106. விளக்கில்லையேல் வருகிறது இருள். அவர் இல்லையேல் படர்கிறது பசலை. (1186)
  • 107. தழுவியபின்தான் பிரிந்தேன்; விரைந்து வந்ததே பசலை. (1187)
  • 108. பசலை கொண்டார் என்பார் பசலை தந்தார் எனச் சொல்லாதது ஏன்? (1188)
  • 109. காதலர் நன்னிலையில் இருப்பார் எனில் இருக்கட்டும் பசலை. (1189)
  • 110. காதலரைத் தூற்றார் எனில் பசலையும் மகிழ்ச்சியே. (1190)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)