நாகஇளங்கோவன்

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!

 பகுதி-2 : நாக.இளங்கோவன்

 

(ஐப்பசி 2, 2045 / அக்.09, 2014 தொடர்ச்சி)

வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால், காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்சூட்டி விடுகிறார். இது வடமொழி அடியொற்றியது.
script_kokkuokka-

மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகாரஉயிர்மெய் எழுத்துகளை மாற்றி விட்டால்கணிக்கு ஏற்றதுபோலத் தமிழை மாற்றிவிடலாம்என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்குஎன்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறைஎன்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்துவிடுவது வியப்புக்களில் ஒன்று.

உயிர்மெய் எழுத்துக்களில் 72 எழுத்துக்களைஇப்படி மாற்றிவிடலாம் என்று சிலர் கிளம்புகையில்இன்னுஞ் சிலர் உயிரெழுத்துகளைஎப்படியெல்லாம் மாற்றலாம் என்று சொல்கிறார்கள்என்று கவனிப்பது மேலும் நமது தமிழறிவைவளர்த்துவிடும் என்று நம்பலாம். இதோ பாருங்கள், தமிழ் உலகில் உலவுகின்ற உயிரெழுத்துக்களின்மாற்ற வடிவங்களில் ஒன்றினை.

script_alphabets

கா, ஙா, சா விற்கு மட்டும் கால் வாங்குவீர்களா? உயிர் நெடில்களுக்கு வாங்க மாட்டீர்களா? என்று வினவும் உயிரெழுத்து நெடில் மாற்ற விரும்பிகள்மேலெ படத்தில் சொல்வது ஒருபுறமிருக்க, இது என்ன பெரிய சீர்திருத்தம்? கால் வாங்குவதென்ன -இ-னா ஈயன்னாவையே எப்படி மாற்றலாம் தெரியுமா? என்றவாறு இ, ஈ எழுத்தின்வடிவத்தையே முற்றாக மாற்றிவிடுகின்றனர் சிலர்.

 

script_i,e,

மேலே படத்தில் உள்ளன தமிழின் உயிர்களான இ, ஈ என்றஎழுத்துகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறமாற்று வடிவங்கள். இப்படிப் பரிந்துரைப்பவர்களிடம்போய் ஏன் மாற்றவேண்டும்? இப்படி மாற்றினால்என்ன பயன்? என்று கேட்டால், உடனே கேட்பவரை“பழமைவாதிகள்” என்று சொல்லிவிடநன்கு பயின்றிருக்கிறார்கள். இ-ஈ இப்படி என்றால்உயிர்கள் உ, ஊ எப்படி இருக்கும்? இதோ கீழே இருப்பதைப் போலத்தான்.
script_u,uu

இ, ஈக்குப் புது உருவம் கொடுத்தது போலஉ, ஊக்கும் புதுவடிவம் கொடுத்து இந்தவரிவடிவச் சீரமைப்பு அவசியம் என்றுவலியுறுத்துகிறார் பொறிஞர் செ.குமார்.இவை மட்டுமா உயிரெழுத்து வடிவ மாற்றங்கள்? இதோ கீழே இருப்பவை பிறஉயிரெழுத்துக்களின் வடிவ மாற்றங்கள். இது எந்த எழுத்துகளுக்கான புதிய வரிவடிவம்என்றுஇக்கட்டுரையை படிப்பவர்கள்கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு, சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

கிறுக்கு- ஒ, ஓ

ஒ, ஓ, ஒள ஆகியன கீழ்க்காணுமாறுகாட்சியளிக்க வேண்டும். இப்படி இல்லாவிடில்செம்மொழியான தமிழ்மொழி தமிழர்களின் நாவில் இருந்தும் கைகளில் இருந்தும்காணாது போய்விடும் என்ற அச்சத்தைஇம்முன்வைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்

கிறுக்கு- ஒ, ஓ,ஔ

 

“ஐ” என்ற எழுத்துதான் கீழுள்ளவாறு மாற்றப்படவேண்டிய ஒன்றாகிறதாம்.
script_ai

இவை மட்டுமா மாற்றத் துடிப்பவர்களின் மனவோட்டங்கள்?

தமிழ் மொழியில் ந, ன, ண என்று எதற்குமூன்று வகையான ஒலிகள்? ழ, ல, ள என்றுமூன்று ஒலிகள் எதற்கு? ர, ற என்ற இரு ஒலிகள் எதற்கு? என்று ஆழ்ந்த புலமையோடு கேட்பதாய் எண்ணிப்பலர் இவற்றைச் சீர்திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.அவர்கள், இப்படிக் குறைத்தால் 5 x 12 = 60 எழுத்துகளைத் தமிழில் இருந்து குறைத்துச்சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஐ = அவ், ஒள = அவ்அதனால் ஐயும் ஒளவும் தமிழி நெடுங்கணக்கில்இருந்து நீக்கப்பட வேண்டியவை என்றும்ஃ என்ற அஃகானை யாரும் அதிகமாகப்பயன்படுத்துவதில்லை எனவே கொசுறாக அதனையும் நீக்க வேண்டும்எனவும் கொடிபிடிக்கின்ற மேதைகள் தமிழ் உலகில்இன்று நிறைந்திருக்கிறார்கள்.

 

உகர ஊகார வரிசைகளுக்கு வா.செ.கு.,கொடுமுடியார்போன்றோர் சொல்வது போல புதுக்குறிகள்போடக்கூடாது என்று, மிகுந்து போன தமிழ்ப்பற்றின்காரணத்தால் தமிழெழுத்தான ”உ” என்ற எழுத்தையே பயன்படுத்த வேண்டும் என்று எழுதுகிறதுமக்களோசை என்ற மலேசிய ஏடு.அதன் கட்டுரையாளர் பரிந்துரைக்கும்ஓர் எடுத்துக்காட்டு!

எடுத்துக்காட்டு என்ற சொல்லை இப்படி எழுத வேண்டும்.

script_etuthukaattu

கூண்டு என்ற சொல்லை இப்படி எழுதவேண்டும். ‘கூ’ என்ற நெடிலுக்கு மறக்காமல் நெடில் ஊ போட்டுவிடுவது அவரின் சீர்மையின் சிறப்பு.

 

கிறுக்கு-கூண்டு01

உங்களுக்கு அறிவியல் தமிழில் பற்றிருந்தால்சீதஉண்ணத்திற்கு – தட்பவெப்பநிலைக்கு-ப் போடும் திகிரி உருண்டையைஒட்ட வைத்துக் கொள்ளலாம் என்று அறிவியல் தமிழ்வளர்க்கச் சொல்கிறார். அறிவியல் தமிழ் எப்படியெல்லாம்வளர்க்கலாம் என்று அவரவர் வேறு இடம் கிடைக்காமல்தங்கள் அறிவியல் திறனை தமிழ் எழுத்துகளில் பாய்ச்சுகிறார்கள் இன்று.

கிறுக்கு-கூண்டு02

இதுவரை வந்த எழுத்து வடிவ மாற்ற முன்வைப்புக்களில் மெய்யெழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1 என்ற19 எழுத்துகளை ஏனோ தெரியவில்லை விட்டுவிட்டார்கள்என்று வருந்தியோருக்கு ஆறுதலாக உகர ஊகார உயிர்மெய்கள் எழுதுவதற்குக் குறியீடாக அந்த ஆய்தத்தையே போட்டுவிடலாம் என்பது அவர் முடிபு. அவரின் முன்வைப்போ தலைகீழாகப் போட்ட ஆய்தம். அதாவது நேராகப் போட்டால் அது உகரம். அப்படியே தலைகீழாக ஆய்தம் போட்டால் அது ஊகாரம்.

கிறுக்கு-கூண்டு03

(அடுத்து முடியும்)

http://nayanam.blogspot.in/2010/08/2.html

pirar-karuvuulam