chandai

சண்டைகள் அனைத்தும் வடக்கில் இருந்துதான்

தெற்கு நோக்கி வருகின்றன!

  மதச் சண்டைகள், சாதிச் சண்டைகள், இனச் சண்டைகள் அனைத்தும் வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி வருகின்றன. இலங்கைக்கும் ஊடுருவுகின்றன. இதற்கு மூல காரணம் சமற்கிருதம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? சமற்கிருதம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை இந்தியத் துணைக்கண்ட வரலாற்றைக் கூர்ந்து கவனித்தாலே புரிந்து கொள்ளலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வாறுதான் நடைபெற்று வருகின்றது.

  இந்தியத் துணைக் கண்டத்தில்  பல மொழிகள் தோன்றியதற்கும் பல மதங்கள் உருவானதற்கும் பல சாதிகள் ஏற்பட்டதற்கும் அந்நிய மொழியாகிய சமற்கிருதமே மூல காரணமாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சமூகத் தாழ்வுகளுக்கும் பொருளாதாரத் தாழ்வுகளுக்கும் அரசியல் தாழ்வுகளுக்கும் சமற்கிருதம் மீது அரசர்களுக்கு இருந்த அளவுகடந்த மோகமும் மக்களுக்குத் தம்மொழி மீது தன்னம்பிக்கை இன்மையுமே காரணமாகும். இன்றும் இதுதான் தொடர்கின்றது. வடக்கே ஒண்ட வந்த ஆரிய இனம் அங்கிருந்த தமிழ் இனத்தையே ஆரிய இனம் என்று  மாற்றி அழைத்திடக் காரணமும் நாம்தான் என்பதில் ஐயம் இல்லை.

ஆ. இரா.அமைதி ஆனந்தம்