(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6 தொடர்ச்சி)

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6


7.2.4.முகன்அமர்ந்[து] இன்சொல் [குறள்.92]
அறிபொருள்:
முகம் மலரச் சொல்லும் இனிய சொற்கள்

7.2.5.அகத்தான்ஆம் இன்சொல் [குறள்.93]
அறிபொருள்:
உள்ளத்தில் உருவாகி வெளிவரும் இனிய சொற்கள்


7.2.6.நல்லவை நாடி இனிய சொலல் [குறள்.96]
அறிபொருள்:
நல்ல சொற்களை ஆராய்ந்து இனிமையாகச் சொல்லுதல்


7.2.7.புறம்கூறான் [குறள்.1181]
அறிபொருள்:
கோள் சொல்லாமை

7.2.8.பயன்இல சொல்லுவான் [குறள்.191]
அறியப்படுபொருள்:
பயன் உள்ள சொற்களைப் பேசுதல்

7.2.9.பொருள்தீர்ந்த,,சொல்லார் [குறள்.199]
அறியப்படுபொருள்:
பொருள் உள்ள சொற்களைச் சொல்லுதல்


7.2.10.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் [குறள்.415]
அறிபொருள்:
வழுக்கல் நிலத்தில் விழாமல் காக்கும் ஊன்றுகோல்போல் பயன்படும் ஒழுக்கத்தாரது வாய்மைச் சொற்கள்

7.2.11.எண்பொருள வாகச் செலச்சொல்லி [குறள்.424]
அறிபொருள்:
நுண்பொருளையும் மனத்திற்குள் சென்று பதியும்படி எளி தாகச் சொல்லல்


7.2.12.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்
அறிபொருள்:
கேட்டவர்களைக் கவரும் வகையில் அமையும் சொற்கள்

7.2.13.திறன்அறிந்து சொல்லுக சொல்லை [குறள்.644]
அறிபொருள்:
கேட்போர் திறனை ஆராய்ந்து, அதற்கு ஏற்பச் சொல்லல்

7.2.14.சொல்லுக…வெல்லும் சொல்
இன்மை அறிந்து [குறள்.645]
அறிபொருள்:
எல்லோரையும் வெல்லும் சொற்களையே சொல்லுதல்

7.2.15.சில சொல்லல் [குறள்.649]
அறிபொருள்:
பெருக்கமான பொருளையும் சில சொற்களில் சுருக்கமாகச் சொல்லல்

7.2.16.கற்ற[து] உணர விரித்[து]உரையா தார் [குறள்.650]
அறியப்படுபொருள்:
கற்றவற்றை மற்றவர் உணரும்படி விரித்து உரைத்தல்

7.2.17.தொகச்சொல்லித் தூவாத நீக்கி, நகச்சொல்லி
நன்றி பயப்ப[து]ஆம் [குறள்.683]
அறிபொருள்:
தொகுத்தும் பயன் இல்லாச் சொற்களை நீக்கியும் மகிழும் படியும் பேசுதல்

7.2.18.கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்[து]
எண்ணி உரைப்பான் [குறள்.687]
அறிபொருள்:
தம் கடமையை உணர்ந்து, காலத்தையும் எண்ணி, இடத்தை யும் கருத்தில் கொண்டு பேசுதல்

7.2.19.அவைஅறிந் [து]ஆராய்ந்து சொல்லுக [குறள்.711]
அறிபொருள்:
அவையோர் தன்மை அறிந்து, ஆராய்ந்து சொல்லல்


7.2.20.நகைஉள்ளும் இன்னா[து] இகழ்ச்சி [குறள்.995]
அறியப்படுபொருள்:
விளையாட்டுத்தானே என நினைத்துக்கூட யாரையும் இக ழாமை

7.3.0.சொல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:

1. நிறைவான சொற்களைப் பேசுதல்
2. குழந்தைகளின் இனிய மழலைச் சொல்
3. “இவன் தந்தை என்ன தவம் செய்தானோ..?” என மகன் சமுதா யத்தைச் சொல்லவைக்கும் சொல்
4. முகம் மலரச் சொல்லும் இனிய சொற்கள்
5. உள்ளத்தில் உருவாகி வெளிவரும் இனிய சொற்கள்
6. நல்ல சொற்களை ஆராய்ந்து இனிமையாகச் சொல்லுதல்
7. கோள் சொல்லாமை
8. பயன் உள்ள சொற்களைப் பேசுதல்
9. பொருள் உள்ள சொற்களைச் சொல்லுதல்
10. வழுக்கல் நிலத்தில் விழாமல் காக்கும் ஊன்றுகோல்போல் பயன்படும் ஒழுக்கத்தாரது வாய்மைச் சொற்கள்
11. நுண்பொருளையும் மனத்திற்குள் சென்று பதியும்படி எளி தாகச் சொல்லல்
12. கேட்டவர்களைக் கவரும் வகையில் அமையும் சொற்கள்
13. கேட்போர் திறனை ஆராய்ந்து, அதற்கு ஏற்பச் சொல்லல்
14. எல்லோரையும் வெல்லும் சொற்களையே சொல்லுதல்
15. பெருக்கமான பொருளையும் சில சொற்களில் சுருக்கமாகச் சொல்லல்
16. கற்றவற்றை மற்றவர் உணரும்படி விரித்து உரைத்தல்
17. தொகுத்தும் பயன் இல்லாச் சொற்களை நீக்கியும் மகிழும் படியும் பேசுதல்
18. தம் கடமையை உணர்ந்து, காலத்தையும் எண்ணி, இடத்தை யும் கருத்தில் கொண்டு பேசுதல்
19. அவையோர் தன்மை அறிந்து, ஆராய்ந்து சொல்லல்
20. விளையாட்டுத்தானே என நினைத்துக்கூட யாரையும் இக ழாமை

8.0.0.செயல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 60

✪செயல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகளின் வகைகள் — 9

8.0.0.செயல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 60

8.1.0.தனிமனிதர் அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் —
குறள்கள் 7

8.2.1.இல்வாழ்க்கை அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் —
குறள்கள் 5

8.3.0.வறுமை ஒழிப்பு அளவிலான அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் —
குறள்கள் 8


8.4.0.விருந்து ஓம்பல் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3

8.5.0.ஒப்புரவு அளவிலான அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3

8.6.0.பகுத்து உண்ணல் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள் 1

8.7.0.உதவி அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3

8.8.0.சமுதாயம் அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்
குறள்கள் 16

8.9.0.நாட்டு அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 5

8.1.0.தனிமனிதர் அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்
குறள்கள் — 7

8.1.1.மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்தல் [குறள்.3]
அறியப்படுபொருள்
மென்மனத்தராய் நடத்தல்

8.1.2.பொய்தீர் ஒழுக்கநெறி நிற்றல் [குறள்.5]
அறிபொருள்:
பொய்த்தல் இல்லா ஒழுக்க நெறியில் நின்று வாழ்தல்


8.1.3.இடுக்கண் வருங்கால் நகுக [குறள்.621]
அறிபொருள்:
துன்பத்தில் சிரித்துத் துன்பத்தை விரட்டுதல்


8.1.4.எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் [குறள்.666]
அறிபொருள்:
எண்ணியதை அடைய எண்ணியதில் மனஉறுதிப்பாட்டுன் இருத்தல்

8.1.5.எண்ணித் துணிக கருமம் [குறள்.467]
அறிபொருள்:
எந்தச் செயலையும் ஆராய்ந்தபின் செய்தல்

8.1.6.பொறைஉடைமை போற்றி ஒழுகப்படும் [குறள்.154]
அறிபொருள்:
பொறுமையைப் போற்றி வாழ்தல்

8.1.7.உண்ணற்க கள்ளை [குறள்.922]
அறிபொருள்:
குடி கெடுக்கும் கள்ளை உண்ணாமை

8.1.8.தனிமனிதர் அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்
தொகுப்பு:

1. மென்மனத்தராய் நடத்தல்
2. பொய்த்தல் இல்லா ஒழுக்க நெறியில் நின்று வாழ்தல்
3. துன்பத்தில் சிரித்துத் துன்பத்தை விரட்டுதல்
4. எண்ணியதை அடைய எண்ணியதில் மனஉறுதிப்பாட்டுன் இருத்தல்
5. எந்தச் செயலையும் ஆராய்ந்தபின் செய்தல்
6. பொறுமையைப் போற்றி வாழ்தல்
7. குடி கெடுக்கும் கள்ளை உண்ணாமை

8.2.0.இல்வாழ்க்கை அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் —
குறள்கள் 5


8.2.1.இல்வாழ்வான் என்பான் இயல்[பு]உடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை [குறள்.41]
அறிபொருள்:
குடும்பத் தலைவன், தாய், தந்தை, மனைவி, மக்கள் ஆகி யோரைக் காப்பாற்றுதல்

8.2.2.தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் [குறள்.64]
அறிபொருள்:
தம் குழந்தைகள் பிஞ்சுக் கைகளால் அளாவிய அமிழ்தக் கூழைக் குடித்தல்

8.2.3.தந்தை மகற்[கு]ஆற்றும் நன்றி, அவையத்து
முந்தி இருப்பச் செயல் [குறள்.67]
அறிபொருள்:
தந்தை மகனை / மகளை அவையில் முன்நிற்கவைத்தல்

(தொடரும்)
பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,
கோவிற்பட்டி 628 502