(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10  தொடர்ச்சி)

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11


ஈந்து மகிழ்க!

 இவ்வாறு பலநூல் கற்று, வினைத்திட்பத்துடன் தொழில் ஆற்றிப் பணத்தைப் பெருக்குவது எதற்காக? ‘மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ (பக்கம் 112 | நல்லதோர் வீணை) அன்றோ – எனவே “ஈகைத்திறன்” (4) கொண்டு வாழுமாறு கூறுகிறார். ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்பதால் சேமிக்க வேண்டி ‘(இ)லவம் பல வெள்ளமாம்’ (97) என்கிறார்.

ஞிமிரென இன்புறு’ (39) ‘ஞெகிழ்வது அருளின்’ (40) ‘ஞேயங் காத்தல் செய்’ (41) ‘வருவதை மகிழ்ந்துண்’ (103) என ஈகைத்திறனையும், மனித நேயத்தையும், பகுத்துண்டு வாழ்வதையும் வாழ்வியல் கடமைகளாக வலியுறுத்தும் பாரதியார், புதிய எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார். சுற்றத்தாரின் சுமைதாங்கியாக எப்போதுமே இருந்து அவர்களைக் காக்கலாமா? அவ்வாறு இருப்பின் அவர்கள் சோம்பித் திரிந்து உழைத்து உயரும் பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் ‘திருவினை வென்று வாழ்’தல் (44) வேண்டும் அல்லவா? எனவே, ‘கிளை பல தாங்கேல்’ (15) என்கிறார்.

– இலக்குவனார் திருவள்ளுவன்