(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110

(குறள்நெறி)

  1. (பயனும் நன்மையும் நல்கும்) இன்சொல் கூறு!
  2. எக்காலமும் இன்பம் தரும் இன்சொல் பேசு!
  3. இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் பயன்படுத்தாதே!
  4.  (பழமிருக்கக், காய் உண்டல் போன்று,) இன்சொல் இருக்க, இன்னாத கூறாதே!
  5.  (வையகமும் வானகமும் ஈடாகா வண்ணம்) உதவாதவர்க்கும்  உதவி செய்!
  6.  உற்றநேரத்தில் உதவு!  
  7. பயன்கருதாமல் உதவி செய்!
  8. (பயன்தெரிவார்க்குப் பனையளவாகும் வண்ணம்) திணையளவு செயலேனும் செய்!  
  9. உதவப்பட்டோரின் எண்ணத்திற்கேற்ப உதவியை மதிப்பிடு!
  10. தூயவர் உறவை மறக்காதே!

(தொடரும்)

இலக்குவனார்திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120]